சனி, 30 ஜூலை, 2011

போற்றுதலுக்குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவதற்கே! பிதற்றுவதற்கல்ல!

போற்றுதலுக்​குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவ​தற்கே! பிதற்றுவதற்​கல்ல!

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வின் அருள் மறையையும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின், வழி முறையையும் (குர்ஆன்-ஹதீஸை) அடிப்படையாகக் கொண்ட அழகிய மார்க்கத்தில்.. ‘இல்லா ஒன்றை’ அறியாமையால் இறுகப்பிடித்துக் கொண்டு..இதுதான் மார்க்கம் என (பித்அத் மற்றும் இணைவைத்தல் எனும்) இருளில் மூழ்கிகிடக்கும் சமுதாயத்தை.. ’தவ்ஹீத்’ எனும் ஒளியைக் கொண்டு, மாற்றமடையச் செய்யப் போராடும் இயக்கச்சகோதரர்களுக்கு...! உங்களின் அழகிய கொள்கைக்கு ஆதரவு கரம் நீட்டக்காத்திருக்கும் பொதுமக்களாகிய நாங்களும்.. “உங்களிடமிருந்தும்” சிலவற்றை எதிர் பார்த்துத்தான் நிற்கிறோம்.

“தவ்ஹீத்” அமைப்பு அல்லது இயக்கம் ‘ஓரிறையை’ ஓங்கிச் சொல்லும் ஓர் ஒப்பற்ற உன்னத இயக்கம்! இதன் கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பவன்... ஒன்று, (மூடநம்பிக்கையில் மூழ்கிய) மூடனாக இருக்கவேண்டும். அல்லது.. தன் சுயநலத்துக்காகவோ, வரட்டு வாதத்துக்காகவோ, மறுப்பதைப்போல் நடிப்பவனாக இருக்க வேண்டும்! (இது என் சொந்தக்கருத்து!)

ஆனால்ஞ் தவ்ஹீதை வாய்கிழிய பேசும் (இயக்கத்தைச் சார்ந்த) நபர்களில், எத்தனைப் பேர்,இறைவனுக்கும் அவனின் மறுமைக்கும் பயந்து,அந்த (அப்பழுக்கற்ற) கொள்கையை (அப்படியே) கடைப்பிடிக்கிறார்கள்?

நமதூரில் நடந்த,,, எந்த தவ்ஹீத் அமைப்பு சகோதரரின் திருமணம், அல்லது அவரின் இல்லத்திருமணம்.. முழுக்க முழுக்க (நபி’ஸல்’ காட்டியத்தந்த வழியில்) தவ்ஹீத் முறைப்படி நிகழ்ந்தது! ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்! (வீம்புக்காக சொல்லாதீர்கள். பெண் வீட்டில் விசாரிப்போம்!) ஆனால் திருமணச்சடங்குகளில் ஏதாவது (பெண்ணுக்கு கருகமனி கட்டவில்லை, அல்லது வரதட்சனை வாங்கவில்லை) இப்படி ஒன்றோ, இரண்டோ (மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்) சில காரியங்களை செய்துக்காட்டிவிட்டுஞ் மற்றப்படி நோன்பு சோறு, அல்லது அதற்கு பகரம் பணம் (அப்பவும் வீட்டுக்குமட்டும் சோறு கொடுத்திடுங்க!), மற்றும் நல்ல சோறு, நாற சோறுன்னு எதை விட்டு வைத்தார்கள். (கேட்டால், அம்மா திருப்திக்கு, அக்கா திருப்திக்கு வாங்கிகொண்டோம்னு கதை சொல்வார்கள்)(இன்று அமைப்பின் மாநில அலவிலான ‘தலமைப்பொருப்பில்’ உள்ளவர்கள்கூட,பெண்வீட்டார் விருந்திட்ட திருமணத்தில் கலந்துக்கொண்ட காரணத்துக்காக,அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கி எறியப்படுகிறார்கள்)

அப்படியிருக்கஞ் இதையெல்லாம் நான் ‘குத்திக்காட்ட’ எழுதவில்லை சகோதரர்களே!

மார்க்கத்தில் வளைந்துக் கொடுக்க மாட்டோம் என்றக்கொள்கையை வரவேற்கிறேன். ஆனால்.. விட்டுக்கொடுக்கலாம் அல்லவா? விட்டுக்கூட கொடுக்கவேண்டாம். விட்டுப்பிடிக்கவாவது செய்யலாம் அல்லவா! நபி(ஸல்) காலத்தில் குடியில் மூழ்கிக்கிடந்த சமுதாயத்தை இறைவன்ஞ் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிலிருந்து மீளச்செய்தான். (என்று குரானின் வசனங்களிலிருந்து அறிகிறோம்!) அதேப்போல்,முன்னோர்கள் அறியாமையில் செய்த பழக்க வழக்கங்களை,பல தலைமுறையாய் பின்பற்றும் மக்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகவே மீட்கவேண்டியுள்ளது. ஆனால்ஞ் ‘இணைவைக்கும் காரியத்தில்’ உடனடி நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். (அல்லாஹ்வின் உதவியால்..) இணைவைத்தல் என்பது... நம் பகுதில் அதிகமில்லை என்பது, ஆறுதலான விசயம்!

தவ்ஹீத் என்பதுஞ் போதிப்பதற்காக மட்டுமல்ல.. “பின்பற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர் என்பதுமே என் வாதம்!

எனக்குத் தெரிந்து (உறிப்பதற்கு நிறயவே இருந்தாலும்,உதாரணத்திற்கு) ஓரிரு சம்பவங்களை முன் வைக்கிறேன்! எனக்கு தெரிந்த, ஒரு தவ்ஹீத்(?) சகோதரர்ஞ் (துபாயில்) ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பனி புரிகிறார். ”எதிர்காலத்தில் தவ்ஹீதுக்காகவே என் வாழ்வை அற்பனிக்க உள்ளேன். இன்னும் கொஞ்ச நாளில்,துபாயை முடித்துகொண்டு ஊர் போய், சமுதாயப் பனியிலும்,இயக்கப்பனியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். அவர் கொஞ்சம் வசதியாய் உள்ள நபர் என்பதும், அவருக்கு மாத மாதம் (வாடகை) வருமானம் வரும் அளவுக்குஞ் ஒரு நகரத்தில் (டவுனில்) கட்டிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்! எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது! ஒருவகையில் பொறாமையாகக்கூட இருந்தது. (கட்டிடம் உள்ளதால் அல்ல! நன்மை விசயத்தில்..) அதன் பின், ஒருநாள்.. அவர் (துபாயின்) மார்க்கெட்டில் (ஒழிந்தபடி) ஒரு ஓரத்தில்ஞ் நின்றுக்கொண்டிருந்ததை கவனித்துஞ் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.

“வேறொன்றுமில்லை சிகரெட் குடித்தேன்” என்றார். அதோடு நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து.. ”தவ்ஹீதில் உள்ளதால், எவனாவது பார்த்தால் ’நொட்டைச்சொல்’ சொல்வான். இது தேவையா..?” என்றார். எனக்கு, அவர் மீதிருந்த அபிமானம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது! பின்னர்.. வேலையெல்லாம் எப்படி போகுது? என்று பேச்சை மாற்றினேன்! ம்.. போகுது என்றார். விரைவில்.. முடித்துக்கொண்டு போவதாய் சொன்னீர்களே.. என்றேன்! “ஆமாம், இங்கு இப்பல்லாம் ஒரு பிரயோஜனமுமில்லை! முன்பெல்லாம் தினமும், மீன் மார்க்கெட் போவேன். கமிசனாவது கிடைச்சது.இப்பல்லாம் அந்த பிச்சைக்காரனே (அரபிக்காரனே) போயிடுரான். வெறும் சம்பளத்தை வச்சு ஓட்டமுடியுமா?” என்றார். திகைத்துப்போனேன்! இதை வேறு எவனாவது சொல்லியிருந்தால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், பேச்சுக்கு பேச்சு ‘தவ்ஹீத்’ பேசும் இவர் இப்படி சொல்லும்போது ஆடிப்போய்விட்டேன்! ஆனால்,இவரிடம் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை.தவ்ஹீத் என்ற வளையத்தில் இருப்பதால்.. சிகரெட் கூட புகைக்க (மக்களுக்கு) அஞ்சும் இவர்ஞ் என்னிடம் சொல்ல ஏன் துணிந்தார் என்பது எனக்கு இன்னும் ‘புரியாத புதிராகவே’ உள்ளது!

மேலும், ஒரு தவ்ஹீத் சகோதரரின் தந்தை இறந்துவிட்டார்! இறந்தவரின் மூன்று மகன்களுமே துபாயில் வசிக்கிறார்கள்! மரணச்செய்தி கேட்டவுன், மூவரில் ஒருவர் ஊருக்கு போய்விட்டார். மற்ற இரு மகன்களில் ஒருவர்,மூன்று தினம் கழித்து வெள்ளிக்கிழமையன்று தேராவிலுள்ள ‘பாத்திமா பள்ளியில்’ தன் தந்தைக்காக ஜியாரத் கொடுக்கிறார். மற்றொருவர்தான் நம் ’கதாநாயகன்’ தவ்ஹீத் வாலா! அதுவும் இவர் பக்கா(?)தவ்ஹீதாம்! சரி இருக்கட்டும்! ‘தவ்ஹீதான நீ..’ ஒன்று ஜியாரத் கொடுக்கும் பக்கம் வந்திருக்கக்கூடாது! அல்லது, அன்று மக்களை சந்திக்க (பஜார்) வந்தாலும், மரியாதையாக அந்த (ஜியாரத் நடக்கும்) அரைமனி நேரமாவது, வேறெங்காவது போய்விட்டு, பின்னர் வந்திருக்க வேண்டும்! பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு, தன் தந்தைக்கு நடக்கும் ‘ஜியாரத்தை’ அவமானிக்கும் விதமாய்ஞ் “(தன் தம்பியை)இவனை எவன் ஜாரத் நடத்தச்சொன்னான்.இது எந்த சட்டத்தில் இருக்கிறது..ஆச்சா,போச்சான்னு அலும்பு பேசிக்கொண்டிருக்கிறார்!

அதேப்போல.. வேறொரு தவ்ஹீத்(?) நன்பர்!

தன் உடன் பிறந்த சகோதரன்,நோய்வாய் பட்டிருந்தபோது,தன் சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக,பல லட்சங்கள் செலவுச்செய்து, தன் பெற்ற பிள்ளையைப்போல் பார்த்துக் கொண்டார்! இந்த தவ்ஹீத்(?) நன்பர் துபாயிலும், சிகிச்சைப்பெற்றுவரும் சகோதரன் ஊரிலும்!

இப்படியிருக்க,எப்போதும் தன் சகோதரனைப்பற்றிய கவலையில், பேசும்போதே ‘வெடித்து’ அழுவார்! அப்போது கேட்கும் நமக்கே.. ‘துக்கத்தில் நெஞ்சு வெடிப்பது போலிருக்கும்’.ஒருநாள் சிகிச்சைப்பலனின்றி ஊரில், இவரின் சகோதரர் மரணித்துவிட்டார் (இன்னாலில்லாஹ்).

பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை (துபாயில்) இறந்தவருக்கு ஜியாரத் கொடுக்கணும். துபாயில் உள்ள ஒரே ‘சகோ’வோ தவ்ஹீத் வாலா! எப்படி சாத்தியம்? சரி.. கேட்கும் மக்களுக்கு ‘பதில்’ சொல்ல முடியாதே என்பதற்காகஞ் இறந்தவரின் மூத்த சகோதரின் மகன்,துபாயில் தன் சிரியதந்தைக்கு ஜியாரத் கொடுத்துவிட்டார்! அப்போது, இந்த தவ்ஹீத்(?)வாலா என்ன செய்திருக்க வேண்டும்!முன்புள்ள தவ்ஹீத்(?) ‘கதாநாயகனுக்கு’ சொன்னதுப்போன்று..ஒன்று இந்தப்பக்கம் வந்திருக்கக்கூடாது! அப்படி வந்தாலும், ஜியாரத் நடந்த ‘அந்த’ ஒரு அரைமனி நேரமாவது வேறெங்காவது போயிருக்கவேண்டும்! ‘இல்லை!’ இவரும் அந்த பாத்திமா பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு தங்களின் ‘தவ்ஹீத் பிரச்சாரத்தை’ மேற்கொள்கிறார்! ஐவேளைத் தொழாத மக்கள் கூட, இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாகஞ் ‘அரக்க-பறக்க’ பள்ளியை நோக்கி ஓடும்போதுஞ் இவரின் செயல் அருவறுக்கச்செய்தது! இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால்..’தன் சகோதரனின் உடல்நலமின்மையே.. உலுக்கச்செய்த இவரை, ஜியாரத் எனும் நிகழ்வால், “கொள்கை வீம்பு” சகோதரனின் மரண துக்கத்தைகூட மறந்து... வம்பு பேசவைக்கிறது!

நான் ஒன்றைக்கேட்கிறேன்! ஜியாரத் என்பது (யாசீன் ஓதி, இறந்தவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது) இணைகற்பிக்கும் அளவுக்கு... அவ்வளவு மோசமானச் செயலா என்ன? நபியவர்கள் காட்டித்தராத வழிமுறைதான். ஒப்புக்கொள்கிறேன்! ஆனால்,கொஞ்சம் விட்டுத்தான் பிடியுங்களேன். ப்ளீஸ்!

மேலும், (நபியவர்கள் பிறந்த தினமான..) ’மீலாது நபி’ கொண்டாடும் மக்கள்மீது பாயும், கொள்கைச்சகோதரர்களில், எத்தனைப்பேர் தங்களின், குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? இவர்கள் தங்களின் குழந்தைமீது கொண்டுள்ள அன்பும்,பாசமும் இவர்களின் ‘கொள்கைக் கண்ணை’ மறைக்கும் போது, தங்களின் உயிராய்... உயிரினும் மேலாய், கருதும் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

சரி... “தவ்ஹீத்” என்றால் என்ன? ஓரிறைக் கொள்கையைக் கொண்டிருக்கும் (குர்ஆன்-ஹதீஸை பின்பற்றும்) யாவரும் தவ்ஹீத்வாதிகள்தான். நமதூரில்.. (ஏற்றுக்கொள்ளாத,அல்லது தன்னை மாற்றிக்கொள்ளாத சில பழமைவாதிகளைத் தவிர) பெரும்பாலானோர் ‘தவ்ஹீத்’ கொள்கை உள்ளோர்தான்!

(மடமைகளான) மத்ஹபுகளை அகற்ற அல்லது அழிக்க பாடுபடும் நல்ல “கொள்கைச் சகோதர்களுக்கு” மத்தியில்... சில கருப்பு ஆடுகள், ஏதோ... ‘இறைவன் தன் திருமறையில்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினராகாத எவரும் சொர்க்கம் புக மாட்டார்கள் என்றுச்சொன்னது போன்றும், எனக்குப்பின் பீ.ஜே என்றொருவர் வருவார்.அவரையே பின் பற்றுங்கள் என்று நபியவர்கள் நவின்றது போன்றும்...‘மாயை’காட்டி, புதியதொரு மத்ஹபை உருவாக்கி, அழகான கொள்கையை உருகுலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணியத்துக்குரிய சகோ பீ.ஜே அவர்கள் (தன் இயக்கச் சகோதரர்களுக்கு) சொல்லக் கேட்டிருக்கிறேன்! ’பொது மக்கள் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்! கவனமாய் இருங்கள்! நம் கொள்கையை நாம் பின்பற்றினால்தான் பிறரும் பின் தொடர்வார்கள். அவர்கள் நம் மீது,நல்லபிப்பிராயம் கொண்டுள்ளார்கள்’ என்று. உண்மைதான்...! கெட்டவனை ‘குப்பை’ என்று யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள்! ஆனால்ஞ் ‘கொள்கைச்சகோதரர்கள்’ மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளதாலேயே, அவர்களின் தவறு கண்டு விமர்சிக்கிறார்கள்!

தவ்ஹீத் கொள்கை “ரோஜா” மலரைப்போல அழகானதும், அப்பழுக்கற்றதும்தான்! ஆனால்.. அதை தாங்குவதாய் சொல்லும் காம்புகளில்தான் முட்கள் நிறைந்துக்காணப்படுகிறது! மலரை காக்கும் ‘அறனாய்’ விளங்கும் முட்கள் அவசியம்தான்! அத்துடன் சில விச(ம) முட்களும்..

இருந்து அழகான “ரோஜாவுக்கே” ஆபத்தாய் (அதாவது, குழப்பவாதிகள் என்ற அவப்பெயர்)ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் ஆசை!

மேலும்,கொள்கையை அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கும் சகோதரர்கள் இருந்தால், என்னை மன்னியுங்கள்! தவ்ஹீத் என்றப்போர்வையில் கலங்கம் கற்பிப்பவர்களை அடையாளம் கண்டு திருத்துங்கள்! திருந்தாவிடின்... அந்த ‘குழப்பவாதிகளை’ இயக்கத்தை விட்டும் அப்புறப்படுத்துங்கள்!

இந்த (கட்டுரை)பதிவிலுள்ள சில கருத்துக்களை,ஏற்கனவே வேறொரு தளத்தின் ”கருத்துப்பகுதி”யில்,தெரிவிக்கையில்...ஒரு சகோதரர் என்னிடம் கேட்டிருந்தார்... “மார்க்கெட் கதை சொன்னீர்கள்,ஜியாரத் கதை சொன்னீர்கள்,உங்களின் சொந்தக்கதையைச் சொல்ல வில்லையே?உங்கள் வாழ்க்கையிலும்,பொருளீடலிலும் உண்மையானவராய் இருக்கிறீர்களா?என்று! அந்த கேள்விக்கு, நான் அவருக்களித்த அதே பதிலையே...இனி இந்தப்பதிவை படித்துவிட்டு...என்மீது பாய நினைக்கும் சில சகோதரர்களுக்குமாய் தருகிறேன்.

”ஒருவேளை நான் ‘குப்பை’ என்றே வைத்துக்கொள்வோம்! நான் யாரையும் சுத்தம் செய்ய, துடைப்பம் எடுத்துக்கொண்டு புறப்படவில்லை! ஆனால்... என்னை சுத்தம் செய்ய வருபவனை.. ‘முதலில் நீ சுத்தமா?’ என, கேள்விக்கேட்க எனக்கு உரிமை இருக்கிறது! இருப்பினும், நாகரிகம் கருதி, நான் அப்படியும் கேட்கவில்லை! ’சுத்தமாக வர வேண்டும்’ என எதிர் பார்க்கிறேன். அவ்வளவே!"

மேலும்.. என் எழுத்துக்களிலோ, உரையாடலிலோ, கருத்திடலிலோ நான் பின்பற்றாத, கடைப்பிடிக்காத எதையும் சொன்னதில்லை! (ஒருவேளை... நான் பின்பற்றாத ஒன்றை..‘நாம் இப்படி இருக்கிறோம். திருத்திக்கொள்வோம்’ என, என்னையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.)

ஆதமுடைய மக்களில் யாரும் ‘அக்மார்க்’ இல்லைதான்! அப்படிப் பார்த்தால், யாரும் யாருக்குமே உபதேசம் செய்ய முடியாமல் போய்விடும். நான் அப்படிச் சொல்லவும் இல்லை! ஆனால்... அதற்கான வரையறை அல்லது அளவுகோல் என்னவென்றால், நாம் பிறருக்கு உபதேசிக்கும் விசயங்களிலாவது, உத்தமராய் இருத்தல் வேண்டும் என்பதே!

முன்பு சொன்ன கருத்தையே மீண்டும் சொல்லி முடிக்கிறேன். ”தவ்ஹீத்” என்பது... போதிப்பதற்காக மட்டுமல்ல “பின்ற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர்! என்பதுமே... என்வாதம்!
இந்த கட்டுரை விவாதிப்பதற்காக அல்ல! விளங்குவதற்காக!

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    தாங்கள் தாங்களின் கட்டுரையை படித்து பார்த்தலிருந்து தாங்கள் தவ்ஹித் வாதயும் இல்லை மத்ஹப் வாதியும் இல்லை எனபது நன்றாக தெரிகிறது. என் மணதிற்கு பட்ட சில கருத்துக்கள் தாங்களிடlம் பகதிற்ந்து கொள்கின்றேன். தாங்கள் சொன்ன கருத்தையே தாங்களுககு நினைவு கூறுகின்றேன்
    ஆதமுடைய மக்களில் யாரும் ‘அக்மார்க்’ இல்லைதான்! அப்படிப் பார்த்தால், யாரும் யாருக்குமே உபதேசம் செய்ய முடியாமல் போய்விடும் நம் இஸ்லாம் இந்தளவிற்கு வளர்ந்து இருக்காது. தாங்கள் சொல்வதை ஒன்றை ஏற்று கொள்கின்றேன் ஒருவர் சொல்லகூடிய விசியத்தில் அவர் முதலில் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் உன்மை நாம் பார்கக்க கூடியத அவர் சொல்ல கூடிய விசியத்தில் சரியாக இருக்கினாறார என்பது மட்டுமே பார்க்க வேண்டும் அவர் எல்ல விசியத்திலும் சரியாக இருக்கிறார என்று பார்த்தால் நம் மார்க்கம் வளர்ந்து இருக்காது அப்படி பார்த்துமேயானால் நீங்களும் இப்படி ஒரு கட்டுரையை எழுதுவதற்கு தகுதியானவர்தான? நானும் உங்களுக்கு இப்படி கருத்து எழுதுவதற்கு தகுதியானவன்தான என்றால் நிச்சயம் இல்லை.

    உங்களின் கருத்தை பார்த்தால் பள்ளியின் கீழ் நின்று பிராச்சரம் செய்வதை விட்டு விட்டு ஜியாரத்தில் களந்து கொள்ள வேண்டு என்று சொல்கிறிர்கள் ஒரு பக்கம் நபியவர்கள் காட்டித்தராத வழிமுறைதான். ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்கிறிர்கள் தாங்களின் செயல் எந்த மார்க்கம் என்று தெரியவில்லை
    மேலும் தங்களின் கட்டுரையில் சில வரிகள் கூறி இருக்கின்றிர்கள்
    ”ஒருவேளை நான் ‘குப்பை’ என்றே வைத்துக்கொள்வோம்! நான் யாரையும் சுத்தம் செய்ய, துடைப்பம் எடுத்துக்கொண்டு புறப்படவில்லை! ஆனால்... என்னை சுத்தம் செய்ய வருபவனை.. ‘முதலில் நீ சுத்தமா?’ என, கேள்விக்கேட்க எனக்கு உரிமை இருக்கிறது! இருப்பினும், நாகரிகம் கருதி, நான் அப்படியும் கேட்கவில்லை! ’சுத்தமாக வர வேண்டும்’ என எதிர் பார்க்கிறேன். அவ்வளவே!"

    இப்படி எழுதி இருப்பதை பார்த்தாள் இந்த கட்டுரையை எழுதியதற்கு தாங்கள் எந்த வகையில் சுத்தமாக இருக்கின்றிர்க்ள என்று தாயங்களுக்கு திருப்பி கேல்வி வரும் இப்படியே ஒருவருக்கு ஒருவர் கேள்வி கேட்டுக்கொன்டே போக வேண்டியதுதான் மார்கக விசியத்தில் ஒருவர் நல்லது சொன்னால் அதை ஆராயந்துர் சிந்தித்து ஏற்று கொள்ள வேன்டியதுதானே தவிர அவர் பற்றி நாம் பார்கக வேண்டிய அவசியம் இல்லை தாங்களின் கட்டுரைகளில் நல்ல கருத்துக்கள் உள்ளது நல்ல கருத்துக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள வேன்டும் உங்களின் கருத்துக்களை பார்க்காமல் நீங்கள் யார் என்று பார்த்தால் உங்களின் கட்டுரையே தவருதாலகிவிடும் எனவே அனைவரின் கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் மட்டுமே மணிதர்களுக்கு அல்ல.

    பதிலளிநீக்கு
  2. நண்பர் ‘பாஷா’ அவர்களுக்கு...! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உபதேசங்களை அள்ளிவிட்டுக் கொண்டு போய்கொண்டே இருக்க வேண்டியதுதான். பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதுபோல் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்ததற்கான காரணம், பிறருக்கு கற்பித்த ஒழுக்கங்களையும், கொள்கைகளையும் சஹாபாக்கள் தன் வாழ்வின் நெறியாய் பின்பற்றியதினாலேயே, பிறரும் கடைப்பிடித்தனர். இல்லையானால்.. ’போய்யா நீயும் உன் உபதேசமும்’னுச் சொல்லி ஒருவரும் இஸ்லாத்தின் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். நீங்கள் மத்ஹபு வாதியும் இல்லை, தவ்ஹீது வாதியும் இல்லை எதைச்சார்ந்தவரென்று புரியவில்லை என்றீர்கள். நீங்கள் பல பிரிவாய் இஸ்லாத்தை கூறுபோட்டு வைத்ததற்கு நான் காரணமல்ல! எனக்கும் குர்ஆன் ஹதீஸ் பற்றி தெரியும். எனக்கு தெரிந்த இஸ்லாத்தை, என்னால் இயன்றவரை கடைப்பிடிக்கத்தான் செய்கிறேன். இதற்கு இயக்கம், அமைப்பு என்ற சாயம் தேவைப்படவில்லை! மார்க்கத்திலிருந்து விலகி நின்று, மார்க்கத்தின் பெயரால் மாற்றார்களின் கொள்கைகளை பின்பற்றியவர்களுக்கு சரியான மார்க்கத்தை புரியவைத்தலில் சகோ பீ.ஜே அவர்களின் பங்கு மகத்தானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! ஆனால், ஆர்ப்பாட்டமில்லாமல் அழகான முறையில் உண்மையான மார்க்கத்தை போதிப்பவர்கள் நம் தமிழகத்திலேயே ஏராளம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரிய இயக்கம் தோற்றுவித்த மாயை அதை உணர மறுக்கிறது! ஒரு இயக்கத்துக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையல்ல பலம். உறுப்பினர்களில் உறுப்படியானவர்கள் எத்தனை என்பதிலேயே அமைப்பின் அங்கீகாரம் அமைந்துள்ளது. ஒரு அமைப்பில் இருப்பவன் அதன் கொள்கைக்கு அச்சாரமாய் இருத்தல் வேண்டும். தனக்கு சாதகமானதையும், சௌகரியமானதையும் மட்டும் பின்பற்ற யாருக்கு தெரியாது. தெருப்பொருக்கிகளும், வன் குற்றவாளிகளும்கூடத்தான் சில நல்ல விசயங்களை தன் கொள்கைகளாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதைப்பெருமையாக சொல்ல முடியுமா என்ன?

    நான் பள்ளிக்கு கீழ்நின்று பிரச்சரம் செய்வதற்கு பதில், ஜியாரத்தில் கலந்துக் கொள்ளச் சொல்லவில்லை! வேறெங்காவது போய் விட்டு, பிறகு வந்திருக்கலாம் என்றேன். ஏன்? அவரின் அந்த கேவலக்கூத்துக்கு பதில், ஜியாரத்தில் கலந்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே? அங்கு என்ன.. பள்ளியில் அம்மனுக்கு கூழ் ஊத்தும் நிகழ்வா நடக்கிறது!

    தவ்ஹீத் என்று பே(த்து)சுபவர்களில் பெரும்பான்மையோர் பள்ளிக்கு தொழவே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது! தோளில் துண்டை, இப்படி போடுவதா? அல்லது அப்படிப்போடுவதா? என்று விளக்கம் பேசுபவர்கள் முதலில் கோவனத்தையாவது அனிந்துக்கொள்ளட்டும் என்பதே என் வாதம்!

    இதை அவர்களுக்குச் சொல்ல உனக்கிருக்கிறதா தகுதி? என மீண்டும் விளங்காமல் பேச வேண்டாம்! ஏனெனில், உதாரு விடுபவருக்கு நீ முதலில் உத்தமனாய் வா என்றுச்சொல்ல எவனுக்கும் தகுதியும், உரிமையும் இருக்கிறது.

    தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    சலிம் பாய் நீங்கள் சிறந்த பகுத்தறிவுவாதி என்றும் சிறந்த சிந்தனையாளர் என்றும் இந்நான் வரை நினைத்து இருந்தேன் தாங்கிளின் பதிலிருந்து கொஞ்சம் என்னிடமிருந்த என்னத்தை தாழ்த்தி கொன்டிற்க்ள் நான் சொன்ன கருத்தை தாங்கள் தவருதலாக புறிந்து கொன்டுள்ளிர்கள் என்று நான் கருதுகிறேன். எப்படி என்றால் தாங்கள் எந்த அமைப்பிலாவது உருப்பினராக இருக்க வேண்டும் என்று நான் கூற வில்லை சுன்னத் ஜமாத் வாதியா அல்லது தவ்ஹித் ஜமாத் வாதிய என்று எதற்கு கூறினேன் என்றால் தாங்களின் (கட்டுரையை மீன்டு நீங்கள் படித்து பார்க்கவும்) ஜியராத் நபியவர்கள் காட்டிராத வழி முரைதான் என்று கூறியதை வைத்து கொன்டே கூறினேன் ஒரு பக்கம் ஜியாரத் கூடாது என்று கூறினிர்கள் ஒரு பக்கம் அங்கு என்ன அம்மனுக்கு கூலா ஊத்துகிறார்கள் என்கிறிர்கள் இதற்க்காகத்தான் தாங்கள் சுன்னத் ஜமாத்த அல்லது தவ்ஹித் ஜமாத்தா என்று கூறினேன் ஏன் என்றால் சுன்னத் ஜமாத்தில் ஜியாரத்தை அங்கிகரிக்கிறார்கள் தவ்ஹித் ஜமாத்தில் அங்கிகரிப்பது கிடையாது ஆனால் தாங்கள் இரைன்டையும் ஆதரிக்கிரிர்கள் ஆகையால்தான் தாங்கள் எந்த ஜமாத் என்று தெரியவில்லை என்று கூறினேன் ஒரு முமின் எந்த ஜமாத்திற்க்கும் பின்னாடி கொடியை பிடித்து போக வேண்டிய அவசியம் இல்லை குர்ஆனும் ஹதிசும் இருந்தால் மட்டுமே போதுமானது என்பது என்னுடைய கருத்தும் கூட
    மேலும் அந்த நபர் மஃக்ரிப் தொழமல் பள்ளியின் கீழ் பிராச்சாரம் செய்தால் அந்த நபார் பிறாச்சரம் சொல்ல தகுதியற்றவர் தொழுதுவிட்டு சொன்னால் அவர் மீது எந்த தவரும் இல்லை தவருகள் நடக்கும் இடத்தில்தான் பிராச்சரம் செய்ய முடியும்
    அங்கு என்ன அம்மனுக்கு கூழ ஊத்துகிறார்கள் என்று சொல்கிறீர்கள் ஜியாரத் செய்வது தவரு இல்லை என்று மார்க்கத்தில் உள்ளது என்று சொல்லி விடுங்கள் ஏன் ஒரு பக்கம் பித் அத் என்றும் ஒரு பக்கம் அம்மனுக்கு கூழ ஊத்துகிறாரர்கள் என்றும் ஏன் சொல்கிறிர்கள் உங்கள் கட்டுரையில் முரன்பாடு உள்ளது என்றுதான் நான் கூறினேன் தாங்கள் எந்த அமைப்பில் இருந்தால் எனக்கென்னா
    தவரு செய்வன்தான் மணிதன் தவரே செய்ய மாட்டேன் என்று சொல்வது இறைவனுக்கு ஒப்பாகும்
    தாங்கள் கட்டுரையில் தவரே இல்லை என்று இரு மாப்பு கொள்ளாதிர்கள் ஒருவன் தவருகளை சுட்டி காட்டினால் அதை ஏற்று கொள்பவன்தான் கவிஞனுக்கும் எழுத்தாளாருக்கும் மனிதனுக்கும் அலகு.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் ‘பாஷா’ அவர்களுக்கு..! ஒருபோதும்
    என் கருத்துக்களை பிறர்மீது தினிக்கவோ, என் கருத்தோடு மற்றவர்கள் உடன்பட வேண்டும் என நினைக்கவோ செய்பவன் அல்லன் நான்! என் எண்ணங்களைக்கூட என் ‘தாழ்மையான’ கருத்தாகவே பதிவு செய்வேனேயன்றி.. ஒரு போதும் இருமாப்புடன் விழைந்தவனில்லை! என் எழுத்துக்களை படித்தால் அறிவீர்கள். உங்கள் கருத்துரையை மகிழ்வுடன் படித்து, பின்னூடத்தில் கருத்துரையாக வெளியிட்டேன். ‘அம்மனுக்கு கூழ்’ வார்த்தையைக்கூட, ஒரு ஒப்பிடலுக்காகவே பயன் படுத்தினேன். தவறாய் இருந்தால் மன்னிக்கவும்!

    இருமாப்புக்கொள்ளும் அளவுக்கு, என்னிடம் எந்த தனித்தன்மையோ திறமையோ இல்லை! அப்படி இருப்பினும்கூட... இறைவனிட்ட பிச்சைக்கு நன்றி செலுத்தாமல், அல்லாஹ்வின் தன்மையான பெருமைக்கும், இருமாப்புக்கும் சொந்தம் கொள்பவனை அடியோடு வெறுப்பவன் நான்.

    தங்களின் கருத்துக்கும், சத்தான ஒத்துழைப்புக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு