பொதுவாகவே... இன்று பல ஊர் மக்கள், தங்கள் ஊருக்காக
தங்களின் ஊரின் பெயரிலேயே ஒருவலை தளத்தை உருவாக்கி...
அதில், தங்கள் ஊரின் சிறப்பு பற்றியும், சேவைகள் குறித்தும்,
நலத்திட்டங்கள், வளர்ச்சி, பொதுவான அம்சங்கள் இப்படி...
ஊரை மையமாகக் கொண்ட செய்திகளை, தங்கள் ஊர் மக்களுக்கு
அறிவிப்பதற்காகவும், தகவல் பறிமாற்றங்களுக்காகவும்
தளம் அமைப்பது சாதாரணமாகி விட்டது. இன்றைய சூழலில்,
மக்களில் பெரும்பான்மையோர் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய
கட்டாயத்தில் இருப்பதால்... இச்சேவை அவசியமான ஒன்றும் கூட...!
ஆனால்... சேவை மனப்பான்மைக் கொண்ட எல்லோராலும் கூட
இந்த பணியை செம்மையாய் செய்துவிட இயலாது! காரணம்...
(மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும்) உணர்வு பூர்வமாய்
உணர்ந்தாலே... இதன் வேலைப்பழுவும் சுமைகளும் உணர இயலும்.
அப்படி ஊரின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கரைக் கொண்ட ஒருவர்
இப்பணியை மேற்கொண்டபோதிலும், இதற்குண்டான செலவுகளை
ஊரின் நல இயக்கங்களோ, அமைப்புகளோ ஏற்றுக் கொள்ளும்.
அல்லது ஊரின் பொது நிதியிலிருந்து பெறப்படும். ஆனால்...
ஊரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்... ஊரை மட்டுமே
மையமாகக் கொள்ளாமல்... உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும்
பயன் பெரும் வகையில் ஓர் வலைதளம் உருவாக்கி... எந்த ஓர் பிரதி பலனும்
எதிபாராமல் தன் சொந்த செலவிலேயே இந்த அரிய சேவையை ‘இது என் கடமை’
என மேற்கொள்ளும் www.vkalathur.com நிர்வாகிகளுக்கு...
இத்தளத்தின் மூலம் பலனடைந்தவர்கள் என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்.
சாதரணமாக ஒரு ஊருக்காக அமைக்கப்பட்ட வலைதளத்தை விட
பண்மடங்கு அதாவது கிட்டத்தட்ட வணிக ரீதியாய் அமைக்கப்பட்ட ஊடகத்
தளங்களுக்கு நிகரான பார்வையாளர்களை கொண்டதாய்... சொல்கிறது.
இந்த சேவை மணம் கொண்ட நன்மக்களின் செயற்கறிய சேவை இன்னும்
சிறப்பாய் தொடர மனமாற வாழ்த்துவதுடன்,
எல்லாம்வல்ல இறைவனை இவர்களின் நலனுக்காக பிரார்த்திக்கவும்
செய்கிறது www.uyirezuthu.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக