புதன், 7 டிசம்பர், 2011
Dubai Slideshow Slideshow
Dubai Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ Dubai Slideshow Slideshow ★ to Dubai, Munnar and Tamil Nadu. Stunning free travel slideshows on TripAdvisor
புதன், 10 ஆகஸ்ட், 2011
வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன்!
இனியொரு விதி செய்வோம் வி.களத்தூரில் இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்
தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு,அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா,ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு.இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது,அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது,நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும்.ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும்.அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள்.வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்" 'நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்."
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்." என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும்.முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824.
இனியொரு விதி செய்வோம் வி.களத்தூரில் இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்.சகோதரனே வில்லிலிருந்து அம்பாய் புறப்படு! வி.களத்தூரை ஏழைகள் இல்லாத ஊராக மாற்றிடு!!
தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு,அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா,ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு.இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது,அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது,நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும்.ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும்.அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள்.வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்" 'நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்."
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்." என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும்.முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824.
இனியொரு விதி செய்வோம் வி.களத்தூரில் இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்.சகோதரனே வில்லிலிருந்து அம்பாய் புறப்படு! வி.களத்தூரை ஏழைகள் இல்லாத ஊராக மாற்றிடு!!
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
கேள்வி-பதில்!
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பெயர் எ.முஹம்மது யுசுப் ( பிஸ்மில்லா ரூம் வாசி ) என்மனதில் பல நாட்கலாக உதயமாகும் கேள்வி ஒன்றய்
கேற்கிறேன் யாராக இருந்தாலும் பதில் தரலாம்… வட்டி தொழில் செய்பவர்கள் வீட்டில் கல்யான காரியங்கள் நடக்கும் போது உனவு விருந்து வைது அழைகிரார்கலே அதை உன்ன எல்ல ஜமாத்தார்கலும் (சுன்னத் & தவ்ஹித் )மற்றும் பல்லிவாசல் இமாம் முதல் செல்கிறார்கலே இது ஹராம ஹலால..! ஹராம் என்று தெரிந்து போகிரார்கல அல்லது தெரியாமல் போகிரார்கல
வட்டி வாங்குபவன் நிழலில் நின்டாலே பெரும்பாவம் என்று சொல்லும் இஸ்லாம்சட்டங்கள் இதை
கேவலபடுத்திவிட்டு உனவுக்காக செல்கிரார்கலே இது சரியா..? எனக்கு தவரு எனறுபட்டது நான்
இரு கல்யான விருந்துக்கு போகவில்லை இதேபோல் எல்ல சகோதரமார்கலும் கடைபிடித்தால் வட்டி வாங்குபவர்கள் பயந்து தொழிலை விட்டு விட்டு நமது சமுதாயத்தில் நல்லமனிதர்கலாக வாழ வழிகாட்டுவோம் உபதேசம் ஊருக்குமட்டும்தான வீட்டிலேயும் வேன்டும் யார் மனதையும்
புன்படுத்தி இருந்தல் மன்னிக்கவும் தவருகள் எங்கே நடந்தாலும் சுட்டிகாட்டும் உங்கள் நன்பன்
எ.முஹம்மதுயுசுப் ( மும்பைவாழ )
Reply
அண்ணன் யூசுஃப் அவர்களுக்கு..!
நல்ல ஆரோகியமான கேள்வியை மையப்படுத்தி.. சத்தான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறீர்கள்! மகிழ்ச்சி! ஆனால்… நண்பர் புனைப்பெயர் வாசி ‘உங்களுக்காக’ சொன்னது போன்று… இன்று நம் வாழ்வில் நாமே (அறிந்தும்) அறியாமலே ‘வட்டி’யெனும் சாபம் இரண்டற கலந்து விட்டது. வட்டியில் சின்னது-பெரியது என பிரிக்க முடியாது! எந்த ‘பெயரிலும்’ வட்டி எனும் தீங்கு மனிதனை தீண்டி விடக்கூடாது. ஆனாலும், பெயரை மாற்றிக்கொண்டு ‘நவீன பெயரில்’… பைனான்ஸ், லோன், சீட்டு, இன்னும் பல பரிமானங்களில் ‘ஆஃபர்’ என்ற பெயரில் நம் வீட்டுக்கதவைத் தட்டவே செய்கின்றன. நாமும் நவீன யுகத்தின் (ஆடம்பரத்) தேவையின் அடிப்படையில் அதில் மூழ்கவே செய்கிறோம். ‘வட்டி’ வாங்குவது எவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோ… குற்றமோ… அதே அளவு பாவச்செயலே ‘வட்டி கொடுப்பதும்’. அதாவது வட்டிக்கு பணம் வாங்குவதும். ஆனாலும், இவ்வளவு தூரம் விவாதிக்கும் நாமே (எமெர்ஜென்ஸி) அவசரத் தேவைக்கு ’அதை’ நாடவே செய்கிறோம். அப்படி பார்க்கையில் ’கிரெடிட் கார்டு’ உபயோகிக்காத நபர்கள் சிலரே! இப்படி ஆழமாக அலசிப்பார்த்தால்.. நாம், பெரும்பாலானோர் வீட்டு விருந்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விடும்!
இன்று இஸ்லாமிய நாடுகளில் இயங்கும், இஸ்லாமிக்(?) வங்கிகள் கூட 0% வட்டி என்ற ’புருடா’விட்டு, கார் லோன், வீட்டு லோன் என்ற பெயரில் ‘வட்டி’ வாங்கவே செய்கிறது! உதாரணத்திற்கு ஒரு காரின் விலை 50,000 என்று வைத்துக்கொண்டால், அத்துடன் 5,000 வட்டியை சேர்த்து, காரின் விலை 55,000 எனவும் 0%வட்டி எனவும் டக்குமெண்ட் தயாரித்து கையொப்பம் வாங்கி விடுகிறார்கள். நமக்கு(market rate) சந்தைவிலை 50,000தான் என்பது நன்றாகவே தெரியும். தவணை முறையில் வண்டி கிடைத்தால் போதும் என்று யாரும் கேட்பதில்லை! அப்படி வங்கி ஊழியரிடம் கேட்டாலும் ‘அப்படிப்பார்த்தால் வங்கி நடத்த முடியாது’ என்ற பதிலே மிஞ்சும்!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு… நம் ஊரில் இயங்கி வரும் “நலச்சங்கங்களின், வட்டியில்லா கடன்” திட்டத்திற்கு நம் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து.. ஏழைகளின் தேவையறிந்து அவர்களை அரவனைத்தால்… பெருமளவு ‘வட்டி’ எனும் வன்கொடுமையிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்!
நம் தேவைக்கு போக, மீதமாய் இருக்கும் உபரி பணத்தை… அவசரத்தேவைக்கு, வியாபார (முதலீட்டு) தேவைக்கு, அவகாச (ஆற-அமர) தேவைக்கு என மூன்று வகையாக பிரித்து.. முதல்வகை தேவைக்கு வீட்டிலும், இரண்டாம்வகைத் தேவைக்கு, (பாதுகாப்புக்காக) வங்கியிலும், மூன்றாம் வகையை ‘சேவை’ அமைப்பிலும் கொடுத்து வைத்தால்… ’அனைவருக்கும்’ பலனாய் அமையும். தேவைப்படும்போது குறிப்பிட்ட நாளுக்கு முன் சொல்லி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்!
(இன்ஷா அல்லாஹ்.. விரைவில், ஊரோடு சென்று தொழில் தொடங்க இருக்கிறேன். அப்போது, இந்தத்திட்டத்துக்கு என்னாலான முழு ஒத்துழைப்பையும் தர இருக்கிறேன். எனவே, “நீ எவ்வளவு கொடுத்து வச்சிருக்கே?” என்று என் மீது யாரும் பாய்ந்து விட வேண்டாம். துஆ செய்யவும்! மேலும், சில காலம் நண்பர்களுடன், கூட்டாக தவனைமுறையில்… ’இஸ்லாமிய வங்கிகள் ஸ்டைலில்’ லேப்டாப், செல் ஃபோன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.இறைவன் அருளால் அதிலிருந்தும் விலகி விட்டேன்.)
இவ்வாறாக முற்றிலுமாக வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுத்தப்பின்… “பகிரங்கமாகவே” முன்கூட்டியே அமைப்பின் மூலமாகவே அறிவிக்கலாம்… ”இனி எவரேனும் வட்டி வாங்கினால் அவர்கள் வீட்டு விஷேசங்களையும், விருந்தினையும் புறக்கனிப்போம்” என்று! அதையும் மீறி அவர்கள் அச்செயலைத் தொடர்ந்தால்.. நீங்கள் சொன்னது போன்று செய்யலாம்.
உங்களின் கருத்தாழமிக்க கேள்விக்கும், சமுதாய நலனில் அக்கரைக்கொண்ட சிந்தனைக்கும் வாழ்த்துக்கள் !
நேசமிகு: வசந்தவாசல் அ.சலீம்பாஷா
(நன்றி: விகளத்தூர்.காம்)
என்பெயர் எ.முஹம்மது யுசுப் ( பிஸ்மில்லா ரூம் வாசி ) என்மனதில் பல நாட்கலாக உதயமாகும் கேள்வி ஒன்றய்
கேற்கிறேன் யாராக இருந்தாலும் பதில் தரலாம்… வட்டி தொழில் செய்பவர்கள் வீட்டில் கல்யான காரியங்கள் நடக்கும் போது உனவு விருந்து வைது அழைகிரார்கலே அதை உன்ன எல்ல ஜமாத்தார்கலும் (சுன்னத் & தவ்ஹித் )மற்றும் பல்லிவாசல் இமாம் முதல் செல்கிறார்கலே இது ஹராம ஹலால..! ஹராம் என்று தெரிந்து போகிரார்கல அல்லது தெரியாமல் போகிரார்கல
வட்டி வாங்குபவன் நிழலில் நின்டாலே பெரும்பாவம் என்று சொல்லும் இஸ்லாம்சட்டங்கள் இதை
கேவலபடுத்திவிட்டு உனவுக்காக செல்கிரார்கலே இது சரியா..? எனக்கு தவரு எனறுபட்டது நான்
இரு கல்யான விருந்துக்கு போகவில்லை இதேபோல் எல்ல சகோதரமார்கலும் கடைபிடித்தால் வட்டி வாங்குபவர்கள் பயந்து தொழிலை விட்டு விட்டு நமது சமுதாயத்தில் நல்லமனிதர்கலாக வாழ வழிகாட்டுவோம் உபதேசம் ஊருக்குமட்டும்தான வீட்டிலேயும் வேன்டும் யார் மனதையும்
புன்படுத்தி இருந்தல் மன்னிக்கவும் தவருகள் எங்கே நடந்தாலும் சுட்டிகாட்டும் உங்கள் நன்பன்
எ.முஹம்மதுயுசுப் ( மும்பைவாழ )
Reply
அண்ணன் யூசுஃப் அவர்களுக்கு..!
நல்ல ஆரோகியமான கேள்வியை மையப்படுத்தி.. சத்தான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறீர்கள்! மகிழ்ச்சி! ஆனால்… நண்பர் புனைப்பெயர் வாசி ‘உங்களுக்காக’ சொன்னது போன்று… இன்று நம் வாழ்வில் நாமே (அறிந்தும்) அறியாமலே ‘வட்டி’யெனும் சாபம் இரண்டற கலந்து விட்டது. வட்டியில் சின்னது-பெரியது என பிரிக்க முடியாது! எந்த ‘பெயரிலும்’ வட்டி எனும் தீங்கு மனிதனை தீண்டி விடக்கூடாது. ஆனாலும், பெயரை மாற்றிக்கொண்டு ‘நவீன பெயரில்’… பைனான்ஸ், லோன், சீட்டு, இன்னும் பல பரிமானங்களில் ‘ஆஃபர்’ என்ற பெயரில் நம் வீட்டுக்கதவைத் தட்டவே செய்கின்றன. நாமும் நவீன யுகத்தின் (ஆடம்பரத்) தேவையின் அடிப்படையில் அதில் மூழ்கவே செய்கிறோம். ‘வட்டி’ வாங்குவது எவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோ… குற்றமோ… அதே அளவு பாவச்செயலே ‘வட்டி கொடுப்பதும்’. அதாவது வட்டிக்கு பணம் வாங்குவதும். ஆனாலும், இவ்வளவு தூரம் விவாதிக்கும் நாமே (எமெர்ஜென்ஸி) அவசரத் தேவைக்கு ’அதை’ நாடவே செய்கிறோம். அப்படி பார்க்கையில் ’கிரெடிட் கார்டு’ உபயோகிக்காத நபர்கள் சிலரே! இப்படி ஆழமாக அலசிப்பார்த்தால்.. நாம், பெரும்பாலானோர் வீட்டு விருந்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விடும்!
இன்று இஸ்லாமிய நாடுகளில் இயங்கும், இஸ்லாமிக்(?) வங்கிகள் கூட 0% வட்டி என்ற ’புருடா’விட்டு, கார் லோன், வீட்டு லோன் என்ற பெயரில் ‘வட்டி’ வாங்கவே செய்கிறது! உதாரணத்திற்கு ஒரு காரின் விலை 50,000 என்று வைத்துக்கொண்டால், அத்துடன் 5,000 வட்டியை சேர்த்து, காரின் விலை 55,000 எனவும் 0%வட்டி எனவும் டக்குமெண்ட் தயாரித்து கையொப்பம் வாங்கி விடுகிறார்கள். நமக்கு(market rate) சந்தைவிலை 50,000தான் என்பது நன்றாகவே தெரியும். தவணை முறையில் வண்டி கிடைத்தால் போதும் என்று யாரும் கேட்பதில்லை! அப்படி வங்கி ஊழியரிடம் கேட்டாலும் ‘அப்படிப்பார்த்தால் வங்கி நடத்த முடியாது’ என்ற பதிலே மிஞ்சும்!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு… நம் ஊரில் இயங்கி வரும் “நலச்சங்கங்களின், வட்டியில்லா கடன்” திட்டத்திற்கு நம் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து.. ஏழைகளின் தேவையறிந்து அவர்களை அரவனைத்தால்… பெருமளவு ‘வட்டி’ எனும் வன்கொடுமையிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்!
நம் தேவைக்கு போக, மீதமாய் இருக்கும் உபரி பணத்தை… அவசரத்தேவைக்கு, வியாபார (முதலீட்டு) தேவைக்கு, அவகாச (ஆற-அமர) தேவைக்கு என மூன்று வகையாக பிரித்து.. முதல்வகை தேவைக்கு வீட்டிலும், இரண்டாம்வகைத் தேவைக்கு, (பாதுகாப்புக்காக) வங்கியிலும், மூன்றாம் வகையை ‘சேவை’ அமைப்பிலும் கொடுத்து வைத்தால்… ’அனைவருக்கும்’ பலனாய் அமையும். தேவைப்படும்போது குறிப்பிட்ட நாளுக்கு முன் சொல்லி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்!
(இன்ஷா அல்லாஹ்.. விரைவில், ஊரோடு சென்று தொழில் தொடங்க இருக்கிறேன். அப்போது, இந்தத்திட்டத்துக்கு என்னாலான முழு ஒத்துழைப்பையும் தர இருக்கிறேன். எனவே, “நீ எவ்வளவு கொடுத்து வச்சிருக்கே?” என்று என் மீது யாரும் பாய்ந்து விட வேண்டாம். துஆ செய்யவும்! மேலும், சில காலம் நண்பர்களுடன், கூட்டாக தவனைமுறையில்… ’இஸ்லாமிய வங்கிகள் ஸ்டைலில்’ லேப்டாப், செல் ஃபோன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.இறைவன் அருளால் அதிலிருந்தும் விலகி விட்டேன்.)
இவ்வாறாக முற்றிலுமாக வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுத்தப்பின்… “பகிரங்கமாகவே” முன்கூட்டியே அமைப்பின் மூலமாகவே அறிவிக்கலாம்… ”இனி எவரேனும் வட்டி வாங்கினால் அவர்கள் வீட்டு விஷேசங்களையும், விருந்தினையும் புறக்கனிப்போம்” என்று! அதையும் மீறி அவர்கள் அச்செயலைத் தொடர்ந்தால்.. நீங்கள் சொன்னது போன்று செய்யலாம்.
உங்களின் கருத்தாழமிக்க கேள்விக்கும், சமுதாய நலனில் அக்கரைக்கொண்ட சிந்தனைக்கும் வாழ்த்துக்கள் !
நேசமிகு: வசந்தவாசல் அ.சலீம்பாஷா
(நன்றி: விகளத்தூர்.காம்)
சனி, 30 ஜூலை, 2011
போற்றுதலுக்குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவதற்கே! பிதற்றுவதற்கல்ல!
போற்றுதலுக்குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவதற்கே! பிதற்றுவதற்கல்ல!
அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்லாஹ்வின் அருள் மறையையும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின், வழி முறையையும் (குர்ஆன்-ஹதீஸை) அடிப்படையாகக் கொண்ட அழகிய மார்க்கத்தில்.. ‘இல்லா ஒன்றை’ அறியாமையால் இறுகப்பிடித்துக் கொண்டு..இதுதான் மார்க்கம் என (பித்அத் மற்றும் இணைவைத்தல் எனும்) இருளில் மூழ்கிகிடக்கும் சமுதாயத்தை.. ’தவ்ஹீத்’ எனும் ஒளியைக் கொண்டு, மாற்றமடையச் செய்யப் போராடும் இயக்கச்சகோதரர்களுக்கு...! உங்களின் அழகிய கொள்கைக்கு ஆதரவு கரம் நீட்டக்காத்திருக்கும் பொதுமக்களாகிய நாங்களும்.. “உங்களிடமிருந்தும்” சிலவற்றை எதிர் பார்த்துத்தான் நிற்கிறோம்.
“தவ்ஹீத்” அமைப்பு அல்லது இயக்கம் ‘ஓரிறையை’ ஓங்கிச் சொல்லும் ஓர் ஒப்பற்ற உன்னத இயக்கம்! இதன் கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பவன்... ஒன்று, (மூடநம்பிக்கையில் மூழ்கிய) மூடனாக இருக்கவேண்டும். அல்லது.. தன் சுயநலத்துக்காகவோ, வரட்டு வாதத்துக்காகவோ, மறுப்பதைப்போல் நடிப்பவனாக இருக்க வேண்டும்! (இது என் சொந்தக்கருத்து!)
ஆனால்ஞ் தவ்ஹீதை வாய்கிழிய பேசும் (இயக்கத்தைச் சார்ந்த) நபர்களில், எத்தனைப் பேர்,இறைவனுக்கும் அவனின் மறுமைக்கும் பயந்து,அந்த (அப்பழுக்கற்ற) கொள்கையை (அப்படியே) கடைப்பிடிக்கிறார்கள்?
நமதூரில் நடந்த,,, எந்த தவ்ஹீத் அமைப்பு சகோதரரின் திருமணம், அல்லது அவரின் இல்லத்திருமணம்.. முழுக்க முழுக்க (நபி’ஸல்’ காட்டியத்தந்த வழியில்) தவ்ஹீத் முறைப்படி நிகழ்ந்தது! ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்! (வீம்புக்காக சொல்லாதீர்கள். பெண் வீட்டில் விசாரிப்போம்!) ஆனால் திருமணச்சடங்குகளில் ஏதாவது (பெண்ணுக்கு கருகமனி கட்டவில்லை, அல்லது வரதட்சனை வாங்கவில்லை) இப்படி ஒன்றோ, இரண்டோ (மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்) சில காரியங்களை செய்துக்காட்டிவிட்டுஞ் மற்றப்படி நோன்பு சோறு, அல்லது அதற்கு பகரம் பணம் (அப்பவும் வீட்டுக்குமட்டும் சோறு கொடுத்திடுங்க!), மற்றும் நல்ல சோறு, நாற சோறுன்னு எதை விட்டு வைத்தார்கள். (கேட்டால், அம்மா திருப்திக்கு, அக்கா திருப்திக்கு வாங்கிகொண்டோம்னு கதை சொல்வார்கள்)(இன்று அமைப்பின் மாநில அலவிலான ‘தலமைப்பொருப்பில்’ உள்ளவர்கள்கூட,பெண்வீட்டார் விருந்திட்ட திருமணத்தில் கலந்துக்கொண்ட காரணத்துக்காக,அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கி எறியப்படுகிறார்கள்)
அப்படியிருக்கஞ் இதையெல்லாம் நான் ‘குத்திக்காட்ட’ எழுதவில்லை சகோதரர்களே!
மார்க்கத்தில் வளைந்துக் கொடுக்க மாட்டோம் என்றக்கொள்கையை வரவேற்கிறேன். ஆனால்.. விட்டுக்கொடுக்கலாம் அல்லவா? விட்டுக்கூட கொடுக்கவேண்டாம். விட்டுப்பிடிக்கவாவது செய்யலாம் அல்லவா! நபி(ஸல்) காலத்தில் குடியில் மூழ்கிக்கிடந்த சமுதாயத்தை இறைவன்ஞ் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிலிருந்து மீளச்செய்தான். (என்று குரானின் வசனங்களிலிருந்து அறிகிறோம்!) அதேப்போல்,முன்னோர்கள் அறியாமையில் செய்த பழக்க வழக்கங்களை,பல தலைமுறையாய் பின்பற்றும் மக்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகவே மீட்கவேண்டியுள்ளது. ஆனால்ஞ் ‘இணைவைக்கும் காரியத்தில்’ உடனடி நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். (அல்லாஹ்வின் உதவியால்..) இணைவைத்தல் என்பது... நம் பகுதில் அதிகமில்லை என்பது, ஆறுதலான விசயம்!
தவ்ஹீத் என்பதுஞ் போதிப்பதற்காக மட்டுமல்ல.. “பின்பற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர் என்பதுமே என் வாதம்!
எனக்குத் தெரிந்து (உறிப்பதற்கு நிறயவே இருந்தாலும்,உதாரணத்திற்கு) ஓரிரு சம்பவங்களை முன் வைக்கிறேன்! எனக்கு தெரிந்த, ஒரு தவ்ஹீத்(?) சகோதரர்ஞ் (துபாயில்) ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பனி புரிகிறார். ”எதிர்காலத்தில் தவ்ஹீதுக்காகவே என் வாழ்வை அற்பனிக்க உள்ளேன். இன்னும் கொஞ்ச நாளில்,துபாயை முடித்துகொண்டு ஊர் போய், சமுதாயப் பனியிலும்,இயக்கப்பனியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். அவர் கொஞ்சம் வசதியாய் உள்ள நபர் என்பதும், அவருக்கு மாத மாதம் (வாடகை) வருமானம் வரும் அளவுக்குஞ் ஒரு நகரத்தில் (டவுனில்) கட்டிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்! எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது! ஒருவகையில் பொறாமையாகக்கூட இருந்தது. (கட்டிடம் உள்ளதால் அல்ல! நன்மை விசயத்தில்..) அதன் பின், ஒருநாள்.. அவர் (துபாயின்) மார்க்கெட்டில் (ஒழிந்தபடி) ஒரு ஓரத்தில்ஞ் நின்றுக்கொண்டிருந்ததை கவனித்துஞ் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.
“வேறொன்றுமில்லை சிகரெட் குடித்தேன்” என்றார். அதோடு நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து.. ”தவ்ஹீதில் உள்ளதால், எவனாவது பார்த்தால் ’நொட்டைச்சொல்’ சொல்வான். இது தேவையா..?” என்றார். எனக்கு, அவர் மீதிருந்த அபிமானம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது! பின்னர்.. வேலையெல்லாம் எப்படி போகுது? என்று பேச்சை மாற்றினேன்! ம்.. போகுது என்றார். விரைவில்.. முடித்துக்கொண்டு போவதாய் சொன்னீர்களே.. என்றேன்! “ஆமாம், இங்கு இப்பல்லாம் ஒரு பிரயோஜனமுமில்லை! முன்பெல்லாம் தினமும், மீன் மார்க்கெட் போவேன். கமிசனாவது கிடைச்சது.இப்பல்லாம் அந்த பிச்சைக்காரனே (அரபிக்காரனே) போயிடுரான். வெறும் சம்பளத்தை வச்சு ஓட்டமுடியுமா?” என்றார். திகைத்துப்போனேன்! இதை வேறு எவனாவது சொல்லியிருந்தால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், பேச்சுக்கு பேச்சு ‘தவ்ஹீத்’ பேசும் இவர் இப்படி சொல்லும்போது ஆடிப்போய்விட்டேன்! ஆனால்,இவரிடம் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை.தவ்ஹீத் என்ற வளையத்தில் இருப்பதால்.. சிகரெட் கூட புகைக்க (மக்களுக்கு) அஞ்சும் இவர்ஞ் என்னிடம் சொல்ல ஏன் துணிந்தார் என்பது எனக்கு இன்னும் ‘புரியாத புதிராகவே’ உள்ளது!
மேலும், ஒரு தவ்ஹீத் சகோதரரின் தந்தை இறந்துவிட்டார்! இறந்தவரின் மூன்று மகன்களுமே துபாயில் வசிக்கிறார்கள்! மரணச்செய்தி கேட்டவுன், மூவரில் ஒருவர் ஊருக்கு போய்விட்டார். மற்ற இரு மகன்களில் ஒருவர்,மூன்று தினம் கழித்து வெள்ளிக்கிழமையன்று தேராவிலுள்ள ‘பாத்திமா பள்ளியில்’ தன் தந்தைக்காக ஜியாரத் கொடுக்கிறார். மற்றொருவர்தான் நம் ’கதாநாயகன்’ தவ்ஹீத் வாலா! அதுவும் இவர் பக்கா(?)தவ்ஹீதாம்! சரி இருக்கட்டும்! ‘தவ்ஹீதான நீ..’ ஒன்று ஜியாரத் கொடுக்கும் பக்கம் வந்திருக்கக்கூடாது! அல்லது, அன்று மக்களை சந்திக்க (பஜார்) வந்தாலும், மரியாதையாக அந்த (ஜியாரத் நடக்கும்) அரைமனி நேரமாவது, வேறெங்காவது போய்விட்டு, பின்னர் வந்திருக்க வேண்டும்! பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு, தன் தந்தைக்கு நடக்கும் ‘ஜியாரத்தை’ அவமானிக்கும் விதமாய்ஞ் “(தன் தம்பியை)இவனை எவன் ஜாரத் நடத்தச்சொன்னான்.இது எந்த சட்டத்தில் இருக்கிறது..ஆச்சா,போச்சான்னு அலும்பு பேசிக்கொண்டிருக்கிறார்!
அதேப்போல.. வேறொரு தவ்ஹீத்(?) நன்பர்!
தன் உடன் பிறந்த சகோதரன்,நோய்வாய் பட்டிருந்தபோது,தன் சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக,பல லட்சங்கள் செலவுச்செய்து, தன் பெற்ற பிள்ளையைப்போல் பார்த்துக் கொண்டார்! இந்த தவ்ஹீத்(?) நன்பர் துபாயிலும், சிகிச்சைப்பெற்றுவரும் சகோதரன் ஊரிலும்!
இப்படியிருக்க,எப்போதும் தன் சகோதரனைப்பற்றிய கவலையில், பேசும்போதே ‘வெடித்து’ அழுவார்! அப்போது கேட்கும் நமக்கே.. ‘துக்கத்தில் நெஞ்சு வெடிப்பது போலிருக்கும்’.ஒருநாள் சிகிச்சைப்பலனின்றி ஊரில், இவரின் சகோதரர் மரணித்துவிட்டார் (இன்னாலில்லாஹ்).
பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை (துபாயில்) இறந்தவருக்கு ஜியாரத் கொடுக்கணும். துபாயில் உள்ள ஒரே ‘சகோ’வோ தவ்ஹீத் வாலா! எப்படி சாத்தியம்? சரி.. கேட்கும் மக்களுக்கு ‘பதில்’ சொல்ல முடியாதே என்பதற்காகஞ் இறந்தவரின் மூத்த சகோதரின் மகன்,துபாயில் தன் சிரியதந்தைக்கு ஜியாரத் கொடுத்துவிட்டார்! அப்போது, இந்த தவ்ஹீத்(?)வாலா என்ன செய்திருக்க வேண்டும்!முன்புள்ள தவ்ஹீத்(?) ‘கதாநாயகனுக்கு’ சொன்னதுப்போன்று..ஒன்று இந்தப்பக்கம் வந்திருக்கக்கூடாது! அப்படி வந்தாலும், ஜியாரத் நடந்த ‘அந்த’ ஒரு அரைமனி நேரமாவது வேறெங்காவது போயிருக்கவேண்டும்! ‘இல்லை!’ இவரும் அந்த பாத்திமா பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு தங்களின் ‘தவ்ஹீத் பிரச்சாரத்தை’ மேற்கொள்கிறார்! ஐவேளைத் தொழாத மக்கள் கூட, இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாகஞ் ‘அரக்க-பறக்க’ பள்ளியை நோக்கி ஓடும்போதுஞ் இவரின் செயல் அருவறுக்கச்செய்தது! இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால்..’தன் சகோதரனின் உடல்நலமின்மையே.. உலுக்கச்செய்த இவரை, ஜியாரத் எனும் நிகழ்வால், “கொள்கை வீம்பு” சகோதரனின் மரண துக்கத்தைகூட மறந்து... வம்பு பேசவைக்கிறது!
நான் ஒன்றைக்கேட்கிறேன்! ஜியாரத் என்பது (யாசீன் ஓதி, இறந்தவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது) இணைகற்பிக்கும் அளவுக்கு... அவ்வளவு மோசமானச் செயலா என்ன? நபியவர்கள் காட்டித்தராத வழிமுறைதான். ஒப்புக்கொள்கிறேன்! ஆனால்,கொஞ்சம் விட்டுத்தான் பிடியுங்களேன். ப்ளீஸ்!
மேலும், (நபியவர்கள் பிறந்த தினமான..) ’மீலாது நபி’ கொண்டாடும் மக்கள்மீது பாயும், கொள்கைச்சகோதரர்களில், எத்தனைப்பேர் தங்களின், குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? இவர்கள் தங்களின் குழந்தைமீது கொண்டுள்ள அன்பும்,பாசமும் இவர்களின் ‘கொள்கைக் கண்ணை’ மறைக்கும் போது, தங்களின் உயிராய்... உயிரினும் மேலாய், கருதும் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?
சரி... “தவ்ஹீத்” என்றால் என்ன? ஓரிறைக் கொள்கையைக் கொண்டிருக்கும் (குர்ஆன்-ஹதீஸை பின்பற்றும்) யாவரும் தவ்ஹீத்வாதிகள்தான். நமதூரில்.. (ஏற்றுக்கொள்ளாத,அல்லது தன்னை மாற்றிக்கொள்ளாத சில பழமைவாதிகளைத் தவிர) பெரும்பாலானோர் ‘தவ்ஹீத்’ கொள்கை உள்ளோர்தான்!
(மடமைகளான) மத்ஹபுகளை அகற்ற அல்லது அழிக்க பாடுபடும் நல்ல “கொள்கைச் சகோதர்களுக்கு” மத்தியில்... சில கருப்பு ஆடுகள், ஏதோ... ‘இறைவன் தன் திருமறையில்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினராகாத எவரும் சொர்க்கம் புக மாட்டார்கள் என்றுச்சொன்னது போன்றும், எனக்குப்பின் பீ.ஜே என்றொருவர் வருவார்.அவரையே பின் பற்றுங்கள் என்று நபியவர்கள் நவின்றது போன்றும்...‘மாயை’காட்டி, புதியதொரு மத்ஹபை உருவாக்கி, அழகான கொள்கையை உருகுலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கண்ணியத்துக்குரிய சகோ பீ.ஜே அவர்கள் (தன் இயக்கச் சகோதரர்களுக்கு) சொல்லக் கேட்டிருக்கிறேன்! ’பொது மக்கள் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்! கவனமாய் இருங்கள்! நம் கொள்கையை நாம் பின்பற்றினால்தான் பிறரும் பின் தொடர்வார்கள். அவர்கள் நம் மீது,நல்லபிப்பிராயம் கொண்டுள்ளார்கள்’ என்று. உண்மைதான்...! கெட்டவனை ‘குப்பை’ என்று யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள்! ஆனால்ஞ் ‘கொள்கைச்சகோதரர்கள்’ மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளதாலேயே, அவர்களின் தவறு கண்டு விமர்சிக்கிறார்கள்!
தவ்ஹீத் கொள்கை “ரோஜா” மலரைப்போல அழகானதும், அப்பழுக்கற்றதும்தான்! ஆனால்.. அதை தாங்குவதாய் சொல்லும் காம்புகளில்தான் முட்கள் நிறைந்துக்காணப்படுகிறது! மலரை காக்கும் ‘அறனாய்’ விளங்கும் முட்கள் அவசியம்தான்! அத்துடன் சில விச(ம) முட்களும்..
இருந்து அழகான “ரோஜாவுக்கே” ஆபத்தாய் (அதாவது, குழப்பவாதிகள் என்ற அவப்பெயர்)ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் ஆசை!
மேலும்,கொள்கையை அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கும் சகோதரர்கள் இருந்தால், என்னை மன்னியுங்கள்! தவ்ஹீத் என்றப்போர்வையில் கலங்கம் கற்பிப்பவர்களை அடையாளம் கண்டு திருத்துங்கள்! திருந்தாவிடின்... அந்த ‘குழப்பவாதிகளை’ இயக்கத்தை விட்டும் அப்புறப்படுத்துங்கள்!
இந்த (கட்டுரை)பதிவிலுள்ள சில கருத்துக்களை,ஏற்கனவே வேறொரு தளத்தின் ”கருத்துப்பகுதி”யில்,தெரிவிக்கையில்...ஒரு சகோதரர் என்னிடம் கேட்டிருந்தார்... “மார்க்கெட் கதை சொன்னீர்கள்,ஜியாரத் கதை சொன்னீர்கள்,உங்களின் சொந்தக்கதையைச் சொல்ல வில்லையே?உங்கள் வாழ்க்கையிலும்,பொருளீடலிலும் உண்மையானவராய் இருக்கிறீர்களா?என்று! அந்த கேள்விக்கு, நான் அவருக்களித்த அதே பதிலையே...இனி இந்தப்பதிவை படித்துவிட்டு...என்மீது பாய நினைக்கும் சில சகோதரர்களுக்குமாய் தருகிறேன்.
”ஒருவேளை நான் ‘குப்பை’ என்றே வைத்துக்கொள்வோம்! நான் யாரையும் சுத்தம் செய்ய, துடைப்பம் எடுத்துக்கொண்டு புறப்படவில்லை! ஆனால்... என்னை சுத்தம் செய்ய வருபவனை.. ‘முதலில் நீ சுத்தமா?’ என, கேள்விக்கேட்க எனக்கு உரிமை இருக்கிறது! இருப்பினும், நாகரிகம் கருதி, நான் அப்படியும் கேட்கவில்லை! ’சுத்தமாக வர வேண்டும்’ என எதிர் பார்க்கிறேன். அவ்வளவே!"
மேலும்.. என் எழுத்துக்களிலோ, உரையாடலிலோ, கருத்திடலிலோ நான் பின்பற்றாத, கடைப்பிடிக்காத எதையும் சொன்னதில்லை! (ஒருவேளை... நான் பின்பற்றாத ஒன்றை..‘நாம் இப்படி இருக்கிறோம். திருத்திக்கொள்வோம்’ என, என்னையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.)
ஆதமுடைய மக்களில் யாரும் ‘அக்மார்க்’ இல்லைதான்! அப்படிப் பார்த்தால், யாரும் யாருக்குமே உபதேசம் செய்ய முடியாமல் போய்விடும். நான் அப்படிச் சொல்லவும் இல்லை! ஆனால்... அதற்கான வரையறை அல்லது அளவுகோல் என்னவென்றால், நாம் பிறருக்கு உபதேசிக்கும் விசயங்களிலாவது, உத்தமராய் இருத்தல் வேண்டும் என்பதே!
முன்பு சொன்ன கருத்தையே மீண்டும் சொல்லி முடிக்கிறேன். ”தவ்ஹீத்” என்பது... போதிப்பதற்காக மட்டுமல்ல “பின்ற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர்! என்பதுமே... என்வாதம்!
இந்த கட்டுரை விவாதிப்பதற்காக அல்ல! விளங்குவதற்காக!
அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்லாஹ்வின் அருள் மறையையும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின், வழி முறையையும் (குர்ஆன்-ஹதீஸை) அடிப்படையாகக் கொண்ட அழகிய மார்க்கத்தில்.. ‘இல்லா ஒன்றை’ அறியாமையால் இறுகப்பிடித்துக் கொண்டு..இதுதான் மார்க்கம் என (பித்அத் மற்றும் இணைவைத்தல் எனும்) இருளில் மூழ்கிகிடக்கும் சமுதாயத்தை.. ’தவ்ஹீத்’ எனும் ஒளியைக் கொண்டு, மாற்றமடையச் செய்யப் போராடும் இயக்கச்சகோதரர்களுக்கு...! உங்களின் அழகிய கொள்கைக்கு ஆதரவு கரம் நீட்டக்காத்திருக்கும் பொதுமக்களாகிய நாங்களும்.. “உங்களிடமிருந்தும்” சிலவற்றை எதிர் பார்த்துத்தான் நிற்கிறோம்.
“தவ்ஹீத்” அமைப்பு அல்லது இயக்கம் ‘ஓரிறையை’ ஓங்கிச் சொல்லும் ஓர் ஒப்பற்ற உன்னத இயக்கம்! இதன் கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பவன்... ஒன்று, (மூடநம்பிக்கையில் மூழ்கிய) மூடனாக இருக்கவேண்டும். அல்லது.. தன் சுயநலத்துக்காகவோ, வரட்டு வாதத்துக்காகவோ, மறுப்பதைப்போல் நடிப்பவனாக இருக்க வேண்டும்! (இது என் சொந்தக்கருத்து!)
ஆனால்ஞ் தவ்ஹீதை வாய்கிழிய பேசும் (இயக்கத்தைச் சார்ந்த) நபர்களில், எத்தனைப் பேர்,இறைவனுக்கும் அவனின் மறுமைக்கும் பயந்து,அந்த (அப்பழுக்கற்ற) கொள்கையை (அப்படியே) கடைப்பிடிக்கிறார்கள்?
நமதூரில் நடந்த,,, எந்த தவ்ஹீத் அமைப்பு சகோதரரின் திருமணம், அல்லது அவரின் இல்லத்திருமணம்.. முழுக்க முழுக்க (நபி’ஸல்’ காட்டியத்தந்த வழியில்) தவ்ஹீத் முறைப்படி நிகழ்ந்தது! ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்! (வீம்புக்காக சொல்லாதீர்கள். பெண் வீட்டில் விசாரிப்போம்!) ஆனால் திருமணச்சடங்குகளில் ஏதாவது (பெண்ணுக்கு கருகமனி கட்டவில்லை, அல்லது வரதட்சனை வாங்கவில்லை) இப்படி ஒன்றோ, இரண்டோ (மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்) சில காரியங்களை செய்துக்காட்டிவிட்டுஞ் மற்றப்படி நோன்பு சோறு, அல்லது அதற்கு பகரம் பணம் (அப்பவும் வீட்டுக்குமட்டும் சோறு கொடுத்திடுங்க!), மற்றும் நல்ல சோறு, நாற சோறுன்னு எதை விட்டு வைத்தார்கள். (கேட்டால், அம்மா திருப்திக்கு, அக்கா திருப்திக்கு வாங்கிகொண்டோம்னு கதை சொல்வார்கள்)(இன்று அமைப்பின் மாநில அலவிலான ‘தலமைப்பொருப்பில்’ உள்ளவர்கள்கூட,பெண்வீட்டார் விருந்திட்ட திருமணத்தில் கலந்துக்கொண்ட காரணத்துக்காக,அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கி எறியப்படுகிறார்கள்)
அப்படியிருக்கஞ் இதையெல்லாம் நான் ‘குத்திக்காட்ட’ எழுதவில்லை சகோதரர்களே!
மார்க்கத்தில் வளைந்துக் கொடுக்க மாட்டோம் என்றக்கொள்கையை வரவேற்கிறேன். ஆனால்.. விட்டுக்கொடுக்கலாம் அல்லவா? விட்டுக்கூட கொடுக்கவேண்டாம். விட்டுப்பிடிக்கவாவது செய்யலாம் அல்லவா! நபி(ஸல்) காலத்தில் குடியில் மூழ்கிக்கிடந்த சமுதாயத்தை இறைவன்ஞ் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிலிருந்து மீளச்செய்தான். (என்று குரானின் வசனங்களிலிருந்து அறிகிறோம்!) அதேப்போல்,முன்னோர்கள் அறியாமையில் செய்த பழக்க வழக்கங்களை,பல தலைமுறையாய் பின்பற்றும் மக்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகவே மீட்கவேண்டியுள்ளது. ஆனால்ஞ் ‘இணைவைக்கும் காரியத்தில்’ உடனடி நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். (அல்லாஹ்வின் உதவியால்..) இணைவைத்தல் என்பது... நம் பகுதில் அதிகமில்லை என்பது, ஆறுதலான விசயம்!
தவ்ஹீத் என்பதுஞ் போதிப்பதற்காக மட்டுமல்ல.. “பின்பற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர் என்பதுமே என் வாதம்!
எனக்குத் தெரிந்து (உறிப்பதற்கு நிறயவே இருந்தாலும்,உதாரணத்திற்கு) ஓரிரு சம்பவங்களை முன் வைக்கிறேன்! எனக்கு தெரிந்த, ஒரு தவ்ஹீத்(?) சகோதரர்ஞ் (துபாயில்) ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பனி புரிகிறார். ”எதிர்காலத்தில் தவ்ஹீதுக்காகவே என் வாழ்வை அற்பனிக்க உள்ளேன். இன்னும் கொஞ்ச நாளில்,துபாயை முடித்துகொண்டு ஊர் போய், சமுதாயப் பனியிலும்,இயக்கப்பனியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். அவர் கொஞ்சம் வசதியாய் உள்ள நபர் என்பதும், அவருக்கு மாத மாதம் (வாடகை) வருமானம் வரும் அளவுக்குஞ் ஒரு நகரத்தில் (டவுனில்) கட்டிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்! எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது! ஒருவகையில் பொறாமையாகக்கூட இருந்தது. (கட்டிடம் உள்ளதால் அல்ல! நன்மை விசயத்தில்..) அதன் பின், ஒருநாள்.. அவர் (துபாயின்) மார்க்கெட்டில் (ஒழிந்தபடி) ஒரு ஓரத்தில்ஞ் நின்றுக்கொண்டிருந்ததை கவனித்துஞ் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.
“வேறொன்றுமில்லை சிகரெட் குடித்தேன்” என்றார். அதோடு நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து.. ”தவ்ஹீதில் உள்ளதால், எவனாவது பார்த்தால் ’நொட்டைச்சொல்’ சொல்வான். இது தேவையா..?” என்றார். எனக்கு, அவர் மீதிருந்த அபிமானம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது! பின்னர்.. வேலையெல்லாம் எப்படி போகுது? என்று பேச்சை மாற்றினேன்! ம்.. போகுது என்றார். விரைவில்.. முடித்துக்கொண்டு போவதாய் சொன்னீர்களே.. என்றேன்! “ஆமாம், இங்கு இப்பல்லாம் ஒரு பிரயோஜனமுமில்லை! முன்பெல்லாம் தினமும், மீன் மார்க்கெட் போவேன். கமிசனாவது கிடைச்சது.இப்பல்லாம் அந்த பிச்சைக்காரனே (அரபிக்காரனே) போயிடுரான். வெறும் சம்பளத்தை வச்சு ஓட்டமுடியுமா?” என்றார். திகைத்துப்போனேன்! இதை வேறு எவனாவது சொல்லியிருந்தால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், பேச்சுக்கு பேச்சு ‘தவ்ஹீத்’ பேசும் இவர் இப்படி சொல்லும்போது ஆடிப்போய்விட்டேன்! ஆனால்,இவரிடம் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை.தவ்ஹீத் என்ற வளையத்தில் இருப்பதால்.. சிகரெட் கூட புகைக்க (மக்களுக்கு) அஞ்சும் இவர்ஞ் என்னிடம் சொல்ல ஏன் துணிந்தார் என்பது எனக்கு இன்னும் ‘புரியாத புதிராகவே’ உள்ளது!
மேலும், ஒரு தவ்ஹீத் சகோதரரின் தந்தை இறந்துவிட்டார்! இறந்தவரின் மூன்று மகன்களுமே துபாயில் வசிக்கிறார்கள்! மரணச்செய்தி கேட்டவுன், மூவரில் ஒருவர் ஊருக்கு போய்விட்டார். மற்ற இரு மகன்களில் ஒருவர்,மூன்று தினம் கழித்து வெள்ளிக்கிழமையன்று தேராவிலுள்ள ‘பாத்திமா பள்ளியில்’ தன் தந்தைக்காக ஜியாரத் கொடுக்கிறார். மற்றொருவர்தான் நம் ’கதாநாயகன்’ தவ்ஹீத் வாலா! அதுவும் இவர் பக்கா(?)தவ்ஹீதாம்! சரி இருக்கட்டும்! ‘தவ்ஹீதான நீ..’ ஒன்று ஜியாரத் கொடுக்கும் பக்கம் வந்திருக்கக்கூடாது! அல்லது, அன்று மக்களை சந்திக்க (பஜார்) வந்தாலும், மரியாதையாக அந்த (ஜியாரத் நடக்கும்) அரைமனி நேரமாவது, வேறெங்காவது போய்விட்டு, பின்னர் வந்திருக்க வேண்டும்! பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு, தன் தந்தைக்கு நடக்கும் ‘ஜியாரத்தை’ அவமானிக்கும் விதமாய்ஞ் “(தன் தம்பியை)இவனை எவன் ஜாரத் நடத்தச்சொன்னான்.இது எந்த சட்டத்தில் இருக்கிறது..ஆச்சா,போச்சான்னு அலும்பு பேசிக்கொண்டிருக்கிறார்!
அதேப்போல.. வேறொரு தவ்ஹீத்(?) நன்பர்!
தன் உடன் பிறந்த சகோதரன்,நோய்வாய் பட்டிருந்தபோது,தன் சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக,பல லட்சங்கள் செலவுச்செய்து, தன் பெற்ற பிள்ளையைப்போல் பார்த்துக் கொண்டார்! இந்த தவ்ஹீத்(?) நன்பர் துபாயிலும், சிகிச்சைப்பெற்றுவரும் சகோதரன் ஊரிலும்!
இப்படியிருக்க,எப்போதும் தன் சகோதரனைப்பற்றிய கவலையில், பேசும்போதே ‘வெடித்து’ அழுவார்! அப்போது கேட்கும் நமக்கே.. ‘துக்கத்தில் நெஞ்சு வெடிப்பது போலிருக்கும்’.ஒருநாள் சிகிச்சைப்பலனின்றி ஊரில், இவரின் சகோதரர் மரணித்துவிட்டார் (இன்னாலில்லாஹ்).
பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை (துபாயில்) இறந்தவருக்கு ஜியாரத் கொடுக்கணும். துபாயில் உள்ள ஒரே ‘சகோ’வோ தவ்ஹீத் வாலா! எப்படி சாத்தியம்? சரி.. கேட்கும் மக்களுக்கு ‘பதில்’ சொல்ல முடியாதே என்பதற்காகஞ் இறந்தவரின் மூத்த சகோதரின் மகன்,துபாயில் தன் சிரியதந்தைக்கு ஜியாரத் கொடுத்துவிட்டார்! அப்போது, இந்த தவ்ஹீத்(?)வாலா என்ன செய்திருக்க வேண்டும்!முன்புள்ள தவ்ஹீத்(?) ‘கதாநாயகனுக்கு’ சொன்னதுப்போன்று..ஒன்று இந்தப்பக்கம் வந்திருக்கக்கூடாது! அப்படி வந்தாலும், ஜியாரத் நடந்த ‘அந்த’ ஒரு அரைமனி நேரமாவது வேறெங்காவது போயிருக்கவேண்டும்! ‘இல்லை!’ இவரும் அந்த பாத்திமா பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு தங்களின் ‘தவ்ஹீத் பிரச்சாரத்தை’ மேற்கொள்கிறார்! ஐவேளைத் தொழாத மக்கள் கூட, இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாகஞ் ‘அரக்க-பறக்க’ பள்ளியை நோக்கி ஓடும்போதுஞ் இவரின் செயல் அருவறுக்கச்செய்தது! இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால்..’தன் சகோதரனின் உடல்நலமின்மையே.. உலுக்கச்செய்த இவரை, ஜியாரத் எனும் நிகழ்வால், “கொள்கை வீம்பு” சகோதரனின் மரண துக்கத்தைகூட மறந்து... வம்பு பேசவைக்கிறது!
நான் ஒன்றைக்கேட்கிறேன்! ஜியாரத் என்பது (யாசீன் ஓதி, இறந்தவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது) இணைகற்பிக்கும் அளவுக்கு... அவ்வளவு மோசமானச் செயலா என்ன? நபியவர்கள் காட்டித்தராத வழிமுறைதான். ஒப்புக்கொள்கிறேன்! ஆனால்,கொஞ்சம் விட்டுத்தான் பிடியுங்களேன். ப்ளீஸ்!
மேலும், (நபியவர்கள் பிறந்த தினமான..) ’மீலாது நபி’ கொண்டாடும் மக்கள்மீது பாயும், கொள்கைச்சகோதரர்களில், எத்தனைப்பேர் தங்களின், குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? இவர்கள் தங்களின் குழந்தைமீது கொண்டுள்ள அன்பும்,பாசமும் இவர்களின் ‘கொள்கைக் கண்ணை’ மறைக்கும் போது, தங்களின் உயிராய்... உயிரினும் மேலாய், கருதும் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?
சரி... “தவ்ஹீத்” என்றால் என்ன? ஓரிறைக் கொள்கையைக் கொண்டிருக்கும் (குர்ஆன்-ஹதீஸை பின்பற்றும்) யாவரும் தவ்ஹீத்வாதிகள்தான். நமதூரில்.. (ஏற்றுக்கொள்ளாத,அல்லது தன்னை மாற்றிக்கொள்ளாத சில பழமைவாதிகளைத் தவிர) பெரும்பாலானோர் ‘தவ்ஹீத்’ கொள்கை உள்ளோர்தான்!
(மடமைகளான) மத்ஹபுகளை அகற்ற அல்லது அழிக்க பாடுபடும் நல்ல “கொள்கைச் சகோதர்களுக்கு” மத்தியில்... சில கருப்பு ஆடுகள், ஏதோ... ‘இறைவன் தன் திருமறையில்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினராகாத எவரும் சொர்க்கம் புக மாட்டார்கள் என்றுச்சொன்னது போன்றும், எனக்குப்பின் பீ.ஜே என்றொருவர் வருவார்.அவரையே பின் பற்றுங்கள் என்று நபியவர்கள் நவின்றது போன்றும்...‘மாயை’காட்டி, புதியதொரு மத்ஹபை உருவாக்கி, அழகான கொள்கையை உருகுலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கண்ணியத்துக்குரிய சகோ பீ.ஜே அவர்கள் (தன் இயக்கச் சகோதரர்களுக்கு) சொல்லக் கேட்டிருக்கிறேன்! ’பொது மக்கள் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்! கவனமாய் இருங்கள்! நம் கொள்கையை நாம் பின்பற்றினால்தான் பிறரும் பின் தொடர்வார்கள். அவர்கள் நம் மீது,நல்லபிப்பிராயம் கொண்டுள்ளார்கள்’ என்று. உண்மைதான்...! கெட்டவனை ‘குப்பை’ என்று யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள்! ஆனால்ஞ் ‘கொள்கைச்சகோதரர்கள்’ மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளதாலேயே, அவர்களின் தவறு கண்டு விமர்சிக்கிறார்கள்!
தவ்ஹீத் கொள்கை “ரோஜா” மலரைப்போல அழகானதும், அப்பழுக்கற்றதும்தான்! ஆனால்.. அதை தாங்குவதாய் சொல்லும் காம்புகளில்தான் முட்கள் நிறைந்துக்காணப்படுகிறது! மலரை காக்கும் ‘அறனாய்’ விளங்கும் முட்கள் அவசியம்தான்! அத்துடன் சில விச(ம) முட்களும்..
இருந்து அழகான “ரோஜாவுக்கே” ஆபத்தாய் (அதாவது, குழப்பவாதிகள் என்ற அவப்பெயர்)ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் ஆசை!
மேலும்,கொள்கையை அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கும் சகோதரர்கள் இருந்தால், என்னை மன்னியுங்கள்! தவ்ஹீத் என்றப்போர்வையில் கலங்கம் கற்பிப்பவர்களை அடையாளம் கண்டு திருத்துங்கள்! திருந்தாவிடின்... அந்த ‘குழப்பவாதிகளை’ இயக்கத்தை விட்டும் அப்புறப்படுத்துங்கள்!
இந்த (கட்டுரை)பதிவிலுள்ள சில கருத்துக்களை,ஏற்கனவே வேறொரு தளத்தின் ”கருத்துப்பகுதி”யில்,தெரிவிக்கையில்...ஒரு சகோதரர் என்னிடம் கேட்டிருந்தார்... “மார்க்கெட் கதை சொன்னீர்கள்,ஜியாரத் கதை சொன்னீர்கள்,உங்களின் சொந்தக்கதையைச் சொல்ல வில்லையே?உங்கள் வாழ்க்கையிலும்,பொருளீடலிலும் உண்மையானவராய் இருக்கிறீர்களா?என்று! அந்த கேள்விக்கு, நான் அவருக்களித்த அதே பதிலையே...இனி இந்தப்பதிவை படித்துவிட்டு...என்மீது பாய நினைக்கும் சில சகோதரர்களுக்குமாய் தருகிறேன்.
”ஒருவேளை நான் ‘குப்பை’ என்றே வைத்துக்கொள்வோம்! நான் யாரையும் சுத்தம் செய்ய, துடைப்பம் எடுத்துக்கொண்டு புறப்படவில்லை! ஆனால்... என்னை சுத்தம் செய்ய வருபவனை.. ‘முதலில் நீ சுத்தமா?’ என, கேள்விக்கேட்க எனக்கு உரிமை இருக்கிறது! இருப்பினும், நாகரிகம் கருதி, நான் அப்படியும் கேட்கவில்லை! ’சுத்தமாக வர வேண்டும்’ என எதிர் பார்க்கிறேன். அவ்வளவே!"
மேலும்.. என் எழுத்துக்களிலோ, உரையாடலிலோ, கருத்திடலிலோ நான் பின்பற்றாத, கடைப்பிடிக்காத எதையும் சொன்னதில்லை! (ஒருவேளை... நான் பின்பற்றாத ஒன்றை..‘நாம் இப்படி இருக்கிறோம். திருத்திக்கொள்வோம்’ என, என்னையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.)
ஆதமுடைய மக்களில் யாரும் ‘அக்மார்க்’ இல்லைதான்! அப்படிப் பார்த்தால், யாரும் யாருக்குமே உபதேசம் செய்ய முடியாமல் போய்விடும். நான் அப்படிச் சொல்லவும் இல்லை! ஆனால்... அதற்கான வரையறை அல்லது அளவுகோல் என்னவென்றால், நாம் பிறருக்கு உபதேசிக்கும் விசயங்களிலாவது, உத்தமராய் இருத்தல் வேண்டும் என்பதே!
முன்பு சொன்ன கருத்தையே மீண்டும் சொல்லி முடிக்கிறேன். ”தவ்ஹீத்” என்பது... போதிப்பதற்காக மட்டுமல்ல “பின்ற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர்! என்பதுமே... என்வாதம்!
இந்த கட்டுரை விவாதிப்பதற்காக அல்ல! விளங்குவதற்காக!
ஞாயிறு, 19 ஜூன், 2011
இல்லறம்.. நல்லறமாக..!
இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும்.
பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் ‘குட்புக்’ கில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
அதிக நேரம் செலவிடுங்கள்
மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்
கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு
ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்
ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும்.
இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.
பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் ‘குட்புக்’ கில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
அதிக நேரம் செலவிடுங்கள்
மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்
கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு
ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்
ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும்.
இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.
சனி, 18 ஜூன், 2011
வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?
ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”
“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”
சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.
அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”
சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”
ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”
அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.
சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.
ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல
”தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல ”
அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.
நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.
மனிதர்கள் வெள்ளைத் தாளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.
கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது.
உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும்.
லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம்.
நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.
“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”
சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.
அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”
சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”
ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”
அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.
சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.
ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல
”தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல ”
அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.
நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.
மனிதர்கள் வெள்ளைத் தாளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.
கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது.
உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும்.
லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம்.
நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.
செவ்வாய், 14 ஜூன், 2011
vkalathur.net
வி.களத்தூர்.நெட்... இது ஊரைப்பற்றியும், ஊரின் வளர்ச்சி குறித்தும், ஊரின் சுற்றுவட்டாரங்கள் குறித்தும் அலசி ஆராய்ந்து உடனுக்குடன் செய்திகளையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிப்பதுடன், உள்நாடு மற்றும் அயல்நாட்டுச் செய்திகளையும்,சம்பவங்களையும் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உன்னத தளமாக விளங்குகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
நேசமுடன்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
நேசமுடன்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
திங்கள், 13 ஜூன், 2011
பணம் மரத்தில்தான் காய்க்கிறது!
“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”
என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மரம் வளர்ப்பு!
மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.
முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.
முதலில் அசலூர் கதை.
பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.
இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.
இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.
“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.
‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.
மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.
மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.
தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.
அடுத்தது நம்மூர் கதை.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.
அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.
நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.
வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.
சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.
இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.
இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.
உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.
குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.
குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.
அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.
இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.
“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.
மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?
மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!
• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.
• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.
• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?
மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை
மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ
பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி
அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை
*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.
எப்போது நடலாம்?
மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.
மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?
வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
நகரங்களில் மரம் வளர்ப்பு!
“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.
(நன்றி : புதிய தலைமுறை)
தகவல்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா,
என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மரம் வளர்ப்பு!
மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.
முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.
முதலில் அசலூர் கதை.
பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.
இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.
இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.
“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.
‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.
மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.
மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.
தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.
அடுத்தது நம்மூர் கதை.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.
அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.
நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.
வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.
சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.
இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.
இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.
உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.
குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.
குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.
அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.
இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.
“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.
மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?
மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!
• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.
• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.
• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?
மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை
மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ
பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி
அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை
*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.
எப்போது நடலாம்?
மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.
மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?
வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
நகரங்களில் மரம் வளர்ப்பு!
“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.
(நன்றி : புதிய தலைமுறை)
தகவல்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா,
ஞாயிறு, 12 ஜூன், 2011
எது சிறந்தத் தொழில்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழில் ஒரு கற்பனைப் பேட்டி ஒன்றைப் படித்தேன். இக்கற்பனையில் நகைச்சுவையும், ஒரு செய்தியும் இருக்கிறது. ஒரு பத்திரிக்கை நிருபர் பல வகையான தொழில் செய்வோர்களை பேட்டி எடுத்திருந்தார்.
சென்னையில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பேட்டி ஆரம்பிக்கிறது. நிருபர் அந்த தொழிலாளியிடம் இந்த தொழில் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அவர் பதிலளிக்கிறார். “போங்க சார் இது என்ன வருமானம் மக்கள் என் கிட்ட சின்ன தொகைக்கு கூட பேரம் பேசுகிறார்கள். என் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது இந்த தொழிலில் சாத்தியமில்லை. நேற்று என்னிடம் ஒரு வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினியர் சூ பாலீஸ் போட வந்திருந்தார். அவரைப் பார்த்து நினைத்தேன். ஆஹா! என்ன ஒரு சிறந்த தொழில்!” என்று….
உடனே பத்திரிக்கை நிருபர் ஒரு துபாயில் வேலை செய்யும் என்ஜினியரை கண்டுபிடித்து அவரிடம் உங்களுக்கு இந்த தொழில் பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். அவர் சொன்னார், “நல்ல வருமானம்தான் ஆனால் குடும்பம் குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியாத வாழ்க்கை. பிரிவு – துன்பம். ஒரு பேங்கில் ஆபிசர் போல் வேலை இருந்தால் வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டு மாலை வீட்டுக்கு வந்து விடலாம் என்றார்.
அடுத்து பத்திரிக்கை நிருபர் ஒரு வங்கி அதிகாரியிடம் சென்று, “உங்கள் தொழிலில் நிறைவு இருக்கிறதா?” எனக் கேட்டார். அவர் சொன்னார் “ஒவ்வொரு நாளும் கணக்கெல்லாம் பார்த்து வீடு திரும்ப நேரமாகிறது. கணக்குகளைப் பார்த்து பார்த்து டென்ஷனாக இருக்கிறது. பேசாமல் ஒரு கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்று சொன்னார்.
அடுத்து நிருபர் ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் பேட்டி எடுத்தார். அவர் சொன்னார், “சில மாணவர்கள் செய்கிற பிரச்சனைகளைப் பார்க்கிறபோது ஆபிசில ஒரு கிளார்க் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்றார்.
ஒரு கிளார்க்கிடம பேட்டி எடுத்தார், அவர் சொன்னார், “என்னுடைய அதிகாரியிடம் வேலை செய்வதை விட ஒரு ஆட்டோ ஓட்டிப் பிழைக்கலாம்” என்று சொன்னார்.
பிறகு நிருபர் ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார். அவர் சொன்னார், “ஆட்டோ ஓட்டி ஓட்டி முதுகு வலிக்கிறது. பேசாமல் கடை வைத்து பிழைத்திருக்கலாம்” என்றார். பேட்டி இப்படியே தொடர்கிறது.
இக்கற்பனைப் பேட்டியிலிருந்து நாம் தெரிந்து கொள்கிற செய்திகள் என்ன?
1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
2. எல்லாத் தொழிலும் இன்பமும், துன்பமும், உடன்பாட்டு அம்சங்களும், எதிர்மறை அம்சங்களும், பிடித்த அம்சங்களும், பிடிக்காத அம்சங்களும் கலந்தே இருக்கின்றன. நம்முடைய அறிவுக்கும் திறமைக்கும் விருப்பத்துக்கும் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பாக செய்தால் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெறலாம்.
சமுதாயத்துக்கு இக்காலத்துக்கோ, பிற்காலத்துக்கோ தீமை பயக்காமல் ஏதேனும் ஒரு வகையில் நன்மை செய்கிற நல்விளைவுகளை உண்டாக்ககூடிய எல்லாத் தொழில்களுமே சிறந்த தொழில்தான். நம் தொழிலால் நல்லது செய்து அதன் மூலம் வருகிற செல்வம் சிறந்த செல்வம். அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை உண்டாகும்.
0 comments
சென்னையில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பேட்டி ஆரம்பிக்கிறது. நிருபர் அந்த தொழிலாளியிடம் இந்த தொழில் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அவர் பதிலளிக்கிறார். “போங்க சார் இது என்ன வருமானம் மக்கள் என் கிட்ட சின்ன தொகைக்கு கூட பேரம் பேசுகிறார்கள். என் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது இந்த தொழிலில் சாத்தியமில்லை. நேற்று என்னிடம் ஒரு வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினியர் சூ பாலீஸ் போட வந்திருந்தார். அவரைப் பார்த்து நினைத்தேன். ஆஹா! என்ன ஒரு சிறந்த தொழில்!” என்று….
உடனே பத்திரிக்கை நிருபர் ஒரு துபாயில் வேலை செய்யும் என்ஜினியரை கண்டுபிடித்து அவரிடம் உங்களுக்கு இந்த தொழில் பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். அவர் சொன்னார், “நல்ல வருமானம்தான் ஆனால் குடும்பம் குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியாத வாழ்க்கை. பிரிவு – துன்பம். ஒரு பேங்கில் ஆபிசர் போல் வேலை இருந்தால் வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டு மாலை வீட்டுக்கு வந்து விடலாம் என்றார்.
அடுத்து பத்திரிக்கை நிருபர் ஒரு வங்கி அதிகாரியிடம் சென்று, “உங்கள் தொழிலில் நிறைவு இருக்கிறதா?” எனக் கேட்டார். அவர் சொன்னார் “ஒவ்வொரு நாளும் கணக்கெல்லாம் பார்த்து வீடு திரும்ப நேரமாகிறது. கணக்குகளைப் பார்த்து பார்த்து டென்ஷனாக இருக்கிறது. பேசாமல் ஒரு கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்று சொன்னார்.
அடுத்து நிருபர் ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் பேட்டி எடுத்தார். அவர் சொன்னார், “சில மாணவர்கள் செய்கிற பிரச்சனைகளைப் பார்க்கிறபோது ஆபிசில ஒரு கிளார்க் வேலைக்கு சென்றிருக்கலாம்” என்றார்.
ஒரு கிளார்க்கிடம பேட்டி எடுத்தார், அவர் சொன்னார், “என்னுடைய அதிகாரியிடம் வேலை செய்வதை விட ஒரு ஆட்டோ ஓட்டிப் பிழைக்கலாம்” என்று சொன்னார்.
பிறகு நிருபர் ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார். அவர் சொன்னார், “ஆட்டோ ஓட்டி ஓட்டி முதுகு வலிக்கிறது. பேசாமல் கடை வைத்து பிழைத்திருக்கலாம்” என்றார். பேட்டி இப்படியே தொடர்கிறது.
இக்கற்பனைப் பேட்டியிலிருந்து நாம் தெரிந்து கொள்கிற செய்திகள் என்ன?
1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
2. எல்லாத் தொழிலும் இன்பமும், துன்பமும், உடன்பாட்டு அம்சங்களும், எதிர்மறை அம்சங்களும், பிடித்த அம்சங்களும், பிடிக்காத அம்சங்களும் கலந்தே இருக்கின்றன. நம்முடைய அறிவுக்கும் திறமைக்கும் விருப்பத்துக்கும் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பாக செய்தால் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெறலாம்.
சமுதாயத்துக்கு இக்காலத்துக்கோ, பிற்காலத்துக்கோ தீமை பயக்காமல் ஏதேனும் ஒரு வகையில் நன்மை செய்கிற நல்விளைவுகளை உண்டாக்ககூடிய எல்லாத் தொழில்களுமே சிறந்த தொழில்தான். நம் தொழிலால் நல்லது செய்து அதன் மூலம் வருகிற செல்வம் சிறந்த செல்வம். அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை உண்டாகும்.
0 comments
சனி, 11 ஜூன், 2011
மகிழ்வான வாழ்வுக்கு!
Friends18.com Picture Comments
எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார்படுத்துங்கள்.
அனைத்து வசதிகளும் இருந்தால் தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கு வாய்ப்புகளை வழங்குவோம்.
எப்போது ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொ டொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.
ஒரு நிகழ்வு நிகழவில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.
வீட்டில் எந்த இடமும் பிடிக்காவிட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள்.
மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வில் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!
நன்றி! தினகரன் இணைய பதிப்பு!
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வெள்ளி, 10 ஜூன், 2011
எங்க ஊரு...!
எங்க ஊரு வி. களத்தூரு.. - நாங்க
நல்ல சங்கைமிகு தீன் குலத்தோரு..!
ஊரை சுற்றி ஓடுது கல்லாறு..! - அங்கே
செம் மண்ணும் கூட மலர்ந்திடும் பாரு..!
எங்க ஊரு பேரு சொன்னா...
ஊரு பேருகூட மணக்கும். - சொல்லும்
நாவும்கூட இனிக்கும்.
(எங்க ஊரு..)
சாதி சமயம் இங்குண்டு.. வேற்றுமையில்லை! - நாங்கள்
சமத்துவத்தை கடைப்பிடிக்கும், ஒருதாய் பிள்ளை!
வஞ்சகமோ பொய் நஞ்சகமோ துளியும் இல்லை! - இங்கு
வந்தவர்கள் வாழ்ந்ததுண்டு, தோற்ற சரித்திரமில்லை!
வறுமையென்று வருவோருக்கு, உணவை பகிர்ந்து தருவோம். - நல்
உறவை நாடி வருவோருக்கு, எங்கள் உயிரையும் பிழிந்து பகிர்வோம்!
(எங்க ஊரு..)
கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம்.. ஊரின் பரம்பரை சொத்து..!
நம்பிக்கை நேர்மை உழைப்பே இந்த விருட்சத்தின் முதல் வித்து!
எவருக்கு எந்த துயர் வந்தாலும், தோல் கொடுப்போம் தோழமைக் கொண்டு..
அன்னம் தேடும் காக்கைகள்கூட.. அதிசயிக்கும் எங்கள் ஒற்றுமை கண்டு!
இங்கு நிலத்தில் முளைத்த முற்களும், பிறர் நலத்தை என்றும் விரும்பும். - ஊருக்குள்
மறந்து நுழையும் பகைமைகூட நல்லறம் பயின்று திரும்பும்!
(எங்க ஊரு..)
ஒருமுறை தமிழ் தாத்தா ஊ.வே.சா இங்கு வாசம் கண்டாரு..
இந்த வளம்கொழிக்கும் மண்மீது மிக நேசம் கொண்டாரு..! - எங்க
நட்பையும் நற்தமிழையும் கண்டு மெய்சிலிர்த்தாரு..! இந்த
ஊர் சிறப்பை தன் சுயக்குறிப்பில் எழுதிவச்சாரு!
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து அகம் மகிழ்ந்த ஊரு..! - எந்த
கணினியுகத்திலும் கொஞ்சமும் மாறாத மரபை நீயும் பாரு!
(எங்க ஊரு..)
எங்க ஊரின் தூய்மை கண்டு, தும்பையும் கொஞ்சம் கண் துயிலும்..! - எங்களின்
வெள்ளை மனதை வேடிக்கை காண, இங்கு வேனலில்கூட மழை பொழியும்!
ஊரின் நந்தவனத்தின் கொடியிலும் மலரிலும், தென்றலும் கொஞ்சி தலைவாறும்!
காணும் எழிலை எழுத சொற்களைத்தேடி செந்தமிழே கொஞ்சம் தடுமாறும்! - இங்கு
புண்ணகை பூக்கும் மலர்களைக் கண்டு புதிதாய் பிறக்கும் இலக்கணம்!
பூத்துக் குலுங்கும் அழகைப்பாட எந்த கவிதைக்கும் வரும் தலைக்கனம்!
(எங்க ஊரு...)
நூல் நூற்றும், கற்றாழை இழைத்தும் கஞ்சிக்குடித்தாலும்
நல்ல கண்ணியம் காத்த எம் பாட்டியும்..
கொடிக்கால் அமைத்தும், வெற்றிலை சுமந்தும்
ஊர் ஊராய் உண்மைக்கு உழைத்த எம் பாட்டனும்..
கண்ட கணவெல்லாம் நிறைந்தது இன்று! - அவர்களின்
எட்டாக் கனியான கல்வியை வென்று!
வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் ஒருவரேனும் இருப்போம் குறைந்தபட்சம்..
இவையெல்லாம் முப்பாட்டன் எம்மீது அக்கறைக்கொண்ட உழைப்பின் மிச்சம்!
(எங்க ஊரு...)
சிலம்பம் கம்புச்சுத்து குத்துச்சண்டை என தற்காப்புப் பயிற்சியும்..
மரபு மாறாத, வரம்பு மீறாத வீரவிளையாட்டெல்லாம்.. - எம்
முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். - இங்கு..
வீரத்தில் சிற்றெரும்புக்கூட வேங்கையாய் ஒருகணம் மாறும்..!
இந்து இஸ்லாம் கிருத்துவம் என்று வீட்டுக்குள் மாறுபடும் வணக்கம்..
நட்பே சமுதாயத்தின் தலையாய தூண் என, அனைவரும் கைகோர்க்கும் இணக்கம்!
இது நாட்டின் நல்ல முன்மாதிரி ஊரென்று உலகே எமைக்கண்டு வியக்கும்!
ஒற்றுமைக்காக்கும் வி.களத்தூர்.. இது ஊரல்ல.. “ஒரு நற்பனி இயக்கம்”
(எங்க ஊரு...)
பாடலுக்கான கவிதை; வசந்தவாசல் அ.சலீம்பாஷா
நல்ல சங்கைமிகு தீன் குலத்தோரு..!
ஊரை சுற்றி ஓடுது கல்லாறு..! - அங்கே
செம் மண்ணும் கூட மலர்ந்திடும் பாரு..!
எங்க ஊரு பேரு சொன்னா...
ஊரு பேருகூட மணக்கும். - சொல்லும்
நாவும்கூட இனிக்கும்.
(எங்க ஊரு..)
சாதி சமயம் இங்குண்டு.. வேற்றுமையில்லை! - நாங்கள்
சமத்துவத்தை கடைப்பிடிக்கும், ஒருதாய் பிள்ளை!
வஞ்சகமோ பொய் நஞ்சகமோ துளியும் இல்லை! - இங்கு
வந்தவர்கள் வாழ்ந்ததுண்டு, தோற்ற சரித்திரமில்லை!
வறுமையென்று வருவோருக்கு, உணவை பகிர்ந்து தருவோம். - நல்
உறவை நாடி வருவோருக்கு, எங்கள் உயிரையும் பிழிந்து பகிர்வோம்!
(எங்க ஊரு..)
கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம்.. ஊரின் பரம்பரை சொத்து..!
நம்பிக்கை நேர்மை உழைப்பே இந்த விருட்சத்தின் முதல் வித்து!
எவருக்கு எந்த துயர் வந்தாலும், தோல் கொடுப்போம் தோழமைக் கொண்டு..
அன்னம் தேடும் காக்கைகள்கூட.. அதிசயிக்கும் எங்கள் ஒற்றுமை கண்டு!
இங்கு நிலத்தில் முளைத்த முற்களும், பிறர் நலத்தை என்றும் விரும்பும். - ஊருக்குள்
மறந்து நுழையும் பகைமைகூட நல்லறம் பயின்று திரும்பும்!
(எங்க ஊரு..)
ஒருமுறை தமிழ் தாத்தா ஊ.வே.சா இங்கு வாசம் கண்டாரு..
இந்த வளம்கொழிக்கும் மண்மீது மிக நேசம் கொண்டாரு..! - எங்க
நட்பையும் நற்தமிழையும் கண்டு மெய்சிலிர்த்தாரு..! இந்த
ஊர் சிறப்பை தன் சுயக்குறிப்பில் எழுதிவச்சாரு!
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து அகம் மகிழ்ந்த ஊரு..! - எந்த
கணினியுகத்திலும் கொஞ்சமும் மாறாத மரபை நீயும் பாரு!
(எங்க ஊரு..)
எங்க ஊரின் தூய்மை கண்டு, தும்பையும் கொஞ்சம் கண் துயிலும்..! - எங்களின்
வெள்ளை மனதை வேடிக்கை காண, இங்கு வேனலில்கூட மழை பொழியும்!
ஊரின் நந்தவனத்தின் கொடியிலும் மலரிலும், தென்றலும் கொஞ்சி தலைவாறும்!
காணும் எழிலை எழுத சொற்களைத்தேடி செந்தமிழே கொஞ்சம் தடுமாறும்! - இங்கு
புண்ணகை பூக்கும் மலர்களைக் கண்டு புதிதாய் பிறக்கும் இலக்கணம்!
பூத்துக் குலுங்கும் அழகைப்பாட எந்த கவிதைக்கும் வரும் தலைக்கனம்!
(எங்க ஊரு...)
நூல் நூற்றும், கற்றாழை இழைத்தும் கஞ்சிக்குடித்தாலும்
நல்ல கண்ணியம் காத்த எம் பாட்டியும்..
கொடிக்கால் அமைத்தும், வெற்றிலை சுமந்தும்
ஊர் ஊராய் உண்மைக்கு உழைத்த எம் பாட்டனும்..
கண்ட கணவெல்லாம் நிறைந்தது இன்று! - அவர்களின்
எட்டாக் கனியான கல்வியை வென்று!
வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் ஒருவரேனும் இருப்போம் குறைந்தபட்சம்..
இவையெல்லாம் முப்பாட்டன் எம்மீது அக்கறைக்கொண்ட உழைப்பின் மிச்சம்!
(எங்க ஊரு...)
சிலம்பம் கம்புச்சுத்து குத்துச்சண்டை என தற்காப்புப் பயிற்சியும்..
மரபு மாறாத, வரம்பு மீறாத வீரவிளையாட்டெல்லாம்.. - எம்
முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். - இங்கு..
வீரத்தில் சிற்றெரும்புக்கூட வேங்கையாய் ஒருகணம் மாறும்..!
இந்து இஸ்லாம் கிருத்துவம் என்று வீட்டுக்குள் மாறுபடும் வணக்கம்..
நட்பே சமுதாயத்தின் தலையாய தூண் என, அனைவரும் கைகோர்க்கும் இணக்கம்!
இது நாட்டின் நல்ல முன்மாதிரி ஊரென்று உலகே எமைக்கண்டு வியக்கும்!
ஒற்றுமைக்காக்கும் வி.களத்தூர்.. இது ஊரல்ல.. “ஒரு நற்பனி இயக்கம்”
(எங்க ஊரு...)
பாடலுக்கான கவிதை; வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வியாழன், 9 ஜூன், 2011
ஐயா கலைஞர் அவர்களே..!
தி.மு.க வை அழிக்க எந்த கொம்பனும் தேவையில்லை...
தேர்தல் தோல்விக்கு பிறகு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அங்கு அவர் பேசிய கருத்துகளும், அதற்கான நம் விமர்சனங்களும் இங்கே. முதலில் இப்படி சொல்கிறார்.
" அந்த ஆட்சி வெளியிட்ட ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதை அச்சுப்பிழையின்றி தயாரிக்கக்கூட இந்த ஆட்சியால் முடியவில்லை. அதில் பேரறிஞர் என்பது பேராறிஞர் என்று அச்சிட்டுள்ளனர்." அதாவது, தமிழ் கொலை செய்யப்பட்டதை பார்த்ததும் பொங்கி எழுகிறார். பல்லாயிரம் தமிழர்களின் கோர மரணத்தையே பார்த்துவிட்ட எங்கள் தமிழ்த்தாய், இந்த ஒரு காலுக்காக கோபித்து கொள்ள மாட்டார். பேராறிஞரும் கோபித்து கொள்ள மாட்டார்.
தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது பார்த்து கொண்டு சும்மா இருந்ததை விட இந்த தமிழ் கொலை ஒன்றும் உங்களுக்கு மோசமில்லை கலைஞர் அவர்களே. தமிழர்களை காப்பாற்ற முடியாத நாம் தமிழுக்காக பொங்குவது வேடிக்கை. "ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன், மோனோ " என்று பேரன்கள் வைத்த பட நிறுவனத்துக்கு நல்ல தமிழ் பெயர் வைக்க யோசிக்கலாம் - சும்மா இருக்கும் நேரத்தில்.
அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வருகிறார். "புதிய ஆட்சி ஏற்பட்டும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ரவுடியிசம் நடைபெற்று வருகிறதே? எந்த ஆட்சியிலும் இது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுத்து பாதுகாக்கத்தான் காவல் துறை இருக்கிறது. திமுக ஆட்சியை விமர்சித்து எழுதிய நாளேடுகள், வார ஏடுகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன" என்கிறார். உண்மை தான்.
கொலை, கொள்ளையை எந்த ஆட்சி வந்தாலும் தடுக்க இயலாது தான். காரணம் - வறுமை உள்ளவரை எப்படி இலவசங்கள் தொடரும் என்று சொன்னீர்களோ - அதே மாதிரி வறுமை உள்ளவரை திருட்டுத்தனமும் இருக்கும். ஆனால் ஆளுங்கட்சியின் பெயரை பயன்படுத்தி கொண்டு ரவுடித்தனம் செய்யும் தொ(கு)ண்டர்கள் இனி இருக்க மாட்டார்கள். அதனால் ரவுடியிஸம் குறித்து மக்கள் ஐந்து வருஷத்திற்கு கவலைப்பட தேவையில்லை.
காவல்துறை - தங்கள் ஆட்சியில் தி.மு.கவின் கைப்பாவையாக இருந்தது அல்லது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்தது. (தினகரன் அலுவலக எரிப்பு, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் போதுமே) இன்று நிலைமை என்னவென்றால் "அ.தி.மு.க கட்சி பெயரை கிரிமினல்கள் பயன்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு பரிந்து பேசும் அ.தி.மு.க கட்சிகாரர்களும் - கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" எனும் தலைமையின் எச்சரிக்கை பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அல்லக்கைகளை கட்டுப்படுத்தினாலே பாதி குற்றம் குறைந்துவிடுமே.
அடுத்து சென்ற ஆட்சியில் தி.மு.க குண்டர்களால் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய ஆளுனர் உரையை இப்படி சொல்கிறார். "கடந்த ஆட்சியில் பயமுறுத்தி சேர்க்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் சேர்க்கப்படும். அதற்கென புதிய சட்டம் இயற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர் நிலமும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படுமென நம்புகிறேன்." சிறுதாவூர் நிலம் மிரட்டி வாங்கப்பட்டதா? இது குறித்து ஜெ யின் விளக்கம் இங்கே.
பஞ்சமர் நிலம் பற்றி இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். சாமானியர்கள் யாரும் அரசின் சட்டத்துக்கு புறம்பாக, பஞ்சமர் நிலம் என்று சொல்லப்படும் இடங்களை வாங்க விரும்புவதில்லை. தெரியாமல், பொய்யான தகவல்கள் மூலம் ஏமாற்றப்படக் கூடும். அரசு, பத்திர அலுவலகத்தில் பஞ்சமர் நிலம் குறித்த தகவல்களை மக்களுக்கு முழுமையாக அறிய தர வேண்டும். சொத்து வாங்கும்போது பார்க்கப்படும் வில்லங்கம் - சம்பிரதாயத்துக்கு, கடனுக்கு பார்ப்பதாய் இருக்கக்கூடாது.
தமிழகத்தில் சாமானியர்கள் பலர், பஞ்சமர் நிலம் என்று தெரியாமல் அவர்களிடம் நிலம் வாங்கி விட்டு - பிறகு அது பஞ்சமர் நிலம் என்று தெரிய வந்து தங்கள் நிலத்தினை இழக்கின்றனர். (பஞ்சமர் நிலம் குறித்து முழுமையாக தகவல் அறிய இங்கே) மேற் சொன்னவற்றுக்கும் - ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி - அடாவடித்தனமாக ஏழைகளிடம் நிலத்தை பறிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சிறுதாவூர் நிலம், யாரையும் மிரட்டி அபகரிக்கப்பட்டதல்ல.
பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்தது. கடைசியாக தான் தெரிந்துள்ளது பஞ்சமர் நிலமென்பது. அது குறித்த மேலதிக விபரம் இங்கே. சட்டம் தன் கடமையை செய்யட்டும். அபகரிக்கப்பட்ட நிலமாயின் யாராயினும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டவர்களே. எதிர்காலத்திலாவது பஞ்சமர் நிலம் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான தகவல் - பத்திர அலுவலகத்தின் மூலம் அரசு உதவ வேண்டும். அப்போது தான் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும். அண்ணா அறிவாலயம் கட்டப்பட்ட இடம் கூட பஞ்சமர் நிலமே என்று ஒரு சர்ச்சை உள்ளதே. அம்மாவுடன் கூட்டணி வைத்த போது, தோழர் தொல். திருமாவே இது பற்றி பேசினாரே.
அடுத்ததாக தமிழை பற்றி கவலைப்பட்டு இப்படி கேட்கிறார். "தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செம்மொழி மைய அலுவலகம், நூலகம் ஆகியவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுதான் தமிழை உலகறியச் செய்யும் செயலா" . என்கிறார்.
நீங்கள் செம்மொழி மாநாடு நடத்திய மாதிரி, அம்மா உலக தமிழ் மாநாடு நடத்தினால் போதுமே. தமிழ் உலகம் முழுக்க பரவிவிடாதா? தமிழின் பெருமையை விட, தமிழின் மூலம் தம் பெருமையை பறைசாற்ற தானே விரும்புகிறிர்கள். அதற்கு தானே செம்மொழி மாநாடு, உலகத்ததமிழ் மாநாடு... தமிழை பற்றி என்ன கவலை, தமிழனை பற்றி என்ன கவலை. மேலும் சொல்கிறார்,
"சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி திராவிட இயக்கக் கொள்கைகளை, லட்சியங்களை கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும்." என்று. கலைஞர் அவர்களே, சஸ்பென்ஸ் தாங்கவில்லை. இப்போதாவது திராவிடத்தின் கொள்(கை)ளை, லட்சியங்கள் என்னவென்று சொல்லி விடுங்கள்.
கடைசியாக சொல்கிறார், "திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது" என்று. கொம்பன் வந்து அழிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களே திமுக வை அழிக்க போதுமானவர்கள். எப்படி பிற கட்சிகளை நீங்கள் அழித்தீர்களோ, அதே மாதிரி - இப்போது உடைக்க எந்த கட்சியும் கிடைக்காததால் - பழக்க தோஷத்தில் உங்கள் கட்சியையும் நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள்.
தேர்தல் தோல்விக்கு பிறகு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அங்கு அவர் பேசிய கருத்துகளும், அதற்கான நம் விமர்சனங்களும் இங்கே. முதலில் இப்படி சொல்கிறார்.
" அந்த ஆட்சி வெளியிட்ட ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதை அச்சுப்பிழையின்றி தயாரிக்கக்கூட இந்த ஆட்சியால் முடியவில்லை. அதில் பேரறிஞர் என்பது பேராறிஞர் என்று அச்சிட்டுள்ளனர்." அதாவது, தமிழ் கொலை செய்யப்பட்டதை பார்த்ததும் பொங்கி எழுகிறார். பல்லாயிரம் தமிழர்களின் கோர மரணத்தையே பார்த்துவிட்ட எங்கள் தமிழ்த்தாய், இந்த ஒரு காலுக்காக கோபித்து கொள்ள மாட்டார். பேராறிஞரும் கோபித்து கொள்ள மாட்டார்.
தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது பார்த்து கொண்டு சும்மா இருந்ததை விட இந்த தமிழ் கொலை ஒன்றும் உங்களுக்கு மோசமில்லை கலைஞர் அவர்களே. தமிழர்களை காப்பாற்ற முடியாத நாம் தமிழுக்காக பொங்குவது வேடிக்கை. "ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன், மோனோ " என்று பேரன்கள் வைத்த பட நிறுவனத்துக்கு நல்ல தமிழ் பெயர் வைக்க யோசிக்கலாம் - சும்மா இருக்கும் நேரத்தில்.
அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வருகிறார். "புதிய ஆட்சி ஏற்பட்டும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ரவுடியிசம் நடைபெற்று வருகிறதே? எந்த ஆட்சியிலும் இது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுத்து பாதுகாக்கத்தான் காவல் துறை இருக்கிறது. திமுக ஆட்சியை விமர்சித்து எழுதிய நாளேடுகள், வார ஏடுகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன" என்கிறார். உண்மை தான்.
கொலை, கொள்ளையை எந்த ஆட்சி வந்தாலும் தடுக்க இயலாது தான். காரணம் - வறுமை உள்ளவரை எப்படி இலவசங்கள் தொடரும் என்று சொன்னீர்களோ - அதே மாதிரி வறுமை உள்ளவரை திருட்டுத்தனமும் இருக்கும். ஆனால் ஆளுங்கட்சியின் பெயரை பயன்படுத்தி கொண்டு ரவுடித்தனம் செய்யும் தொ(கு)ண்டர்கள் இனி இருக்க மாட்டார்கள். அதனால் ரவுடியிஸம் குறித்து மக்கள் ஐந்து வருஷத்திற்கு கவலைப்பட தேவையில்லை.
காவல்துறை - தங்கள் ஆட்சியில் தி.மு.கவின் கைப்பாவையாக இருந்தது அல்லது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்தது. (தினகரன் அலுவலக எரிப்பு, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் போதுமே) இன்று நிலைமை என்னவென்றால் "அ.தி.மு.க கட்சி பெயரை கிரிமினல்கள் பயன்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு பரிந்து பேசும் அ.தி.மு.க கட்சிகாரர்களும் - கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" எனும் தலைமையின் எச்சரிக்கை பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அல்லக்கைகளை கட்டுப்படுத்தினாலே பாதி குற்றம் குறைந்துவிடுமே.
அடுத்து சென்ற ஆட்சியில் தி.மு.க குண்டர்களால் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய ஆளுனர் உரையை இப்படி சொல்கிறார். "கடந்த ஆட்சியில் பயமுறுத்தி சேர்க்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் சேர்க்கப்படும். அதற்கென புதிய சட்டம் இயற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர் நிலமும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படுமென நம்புகிறேன்." சிறுதாவூர் நிலம் மிரட்டி வாங்கப்பட்டதா? இது குறித்து ஜெ யின் விளக்கம் இங்கே.
பஞ்சமர் நிலம் பற்றி இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். சாமானியர்கள் யாரும் அரசின் சட்டத்துக்கு புறம்பாக, பஞ்சமர் நிலம் என்று சொல்லப்படும் இடங்களை வாங்க விரும்புவதில்லை. தெரியாமல், பொய்யான தகவல்கள் மூலம் ஏமாற்றப்படக் கூடும். அரசு, பத்திர அலுவலகத்தில் பஞ்சமர் நிலம் குறித்த தகவல்களை மக்களுக்கு முழுமையாக அறிய தர வேண்டும். சொத்து வாங்கும்போது பார்க்கப்படும் வில்லங்கம் - சம்பிரதாயத்துக்கு, கடனுக்கு பார்ப்பதாய் இருக்கக்கூடாது.
தமிழகத்தில் சாமானியர்கள் பலர், பஞ்சமர் நிலம் என்று தெரியாமல் அவர்களிடம் நிலம் வாங்கி விட்டு - பிறகு அது பஞ்சமர் நிலம் என்று தெரிய வந்து தங்கள் நிலத்தினை இழக்கின்றனர். (பஞ்சமர் நிலம் குறித்து முழுமையாக தகவல் அறிய இங்கே) மேற் சொன்னவற்றுக்கும் - ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி - அடாவடித்தனமாக ஏழைகளிடம் நிலத்தை பறிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சிறுதாவூர் நிலம், யாரையும் மிரட்டி அபகரிக்கப்பட்டதல்ல.
பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்தது. கடைசியாக தான் தெரிந்துள்ளது பஞ்சமர் நிலமென்பது. அது குறித்த மேலதிக விபரம் இங்கே. சட்டம் தன் கடமையை செய்யட்டும். அபகரிக்கப்பட்ட நிலமாயின் யாராயினும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டவர்களே. எதிர்காலத்திலாவது பஞ்சமர் நிலம் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான தகவல் - பத்திர அலுவலகத்தின் மூலம் அரசு உதவ வேண்டும். அப்போது தான் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும். அண்ணா அறிவாலயம் கட்டப்பட்ட இடம் கூட பஞ்சமர் நிலமே என்று ஒரு சர்ச்சை உள்ளதே. அம்மாவுடன் கூட்டணி வைத்த போது, தோழர் தொல். திருமாவே இது பற்றி பேசினாரே.
அடுத்ததாக தமிழை பற்றி கவலைப்பட்டு இப்படி கேட்கிறார். "தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செம்மொழி மைய அலுவலகம், நூலகம் ஆகியவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுதான் தமிழை உலகறியச் செய்யும் செயலா" . என்கிறார்.
நீங்கள் செம்மொழி மாநாடு நடத்திய மாதிரி, அம்மா உலக தமிழ் மாநாடு நடத்தினால் போதுமே. தமிழ் உலகம் முழுக்க பரவிவிடாதா? தமிழின் பெருமையை விட, தமிழின் மூலம் தம் பெருமையை பறைசாற்ற தானே விரும்புகிறிர்கள். அதற்கு தானே செம்மொழி மாநாடு, உலகத்ததமிழ் மாநாடு... தமிழை பற்றி என்ன கவலை, தமிழனை பற்றி என்ன கவலை. மேலும் சொல்கிறார்,
"சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி திராவிட இயக்கக் கொள்கைகளை, லட்சியங்களை கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும்." என்று. கலைஞர் அவர்களே, சஸ்பென்ஸ் தாங்கவில்லை. இப்போதாவது திராவிடத்தின் கொள்(கை)ளை, லட்சியங்கள் என்னவென்று சொல்லி விடுங்கள்.
கடைசியாக சொல்கிறார், "திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது" என்று. கொம்பன் வந்து அழிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களே திமுக வை அழிக்க போதுமானவர்கள். எப்படி பிற கட்சிகளை நீங்கள் அழித்தீர்களோ, அதே மாதிரி - இப்போது உடைக்க எந்த கட்சியும் கிடைக்காததால் - பழக்க தோஷத்தில் உங்கள் கட்சியையும் நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள்.
புதன், 8 ஜூன், 2011
பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுகிறீர்களா?
மாப்பிள்ளை வேட்டை!
மாப்பிள்ளை வேட்டை!
[ பெண் வீட்டார், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள்.
அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? கட்டுரைக்குள் நுழையுங்கள்!]
முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.
இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.
சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.
சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?
சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.
பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.
பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.
இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.
முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.
பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற சம்பளமும், பெண்ணைப் பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.
அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.
இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.
மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?
தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.
டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.
இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை அதிகம் விரும்புகின்றனர்.
இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?
இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?
அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.
ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது. அவனது திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.
திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.
குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.
மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
நன்றி; நீடூர்.காம்
மாப்பிள்ளை வேட்டை!
[ பெண் வீட்டார், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள்.
அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? கட்டுரைக்குள் நுழையுங்கள்!]
முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.
இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.
சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.
சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?
சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.
பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.
பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.
இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.
முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.
பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற சம்பளமும், பெண்ணைப் பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.
அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.
இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.
மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?
தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.
டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.
இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை அதிகம் விரும்புகின்றனர்.
இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?
இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?
அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.
ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது. அவனது திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.
திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.
குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.
மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
நன்றி; நீடூர்.காம்
முன்னேறு... முன்னேற்று! தொடர் 20
முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
பெரம்பலூரில் ரூ.2 கோடி மதிப்பில்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை
தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் சார்பில் சர்வதேசத்தரத்தில் அமையும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியின் முன்னோட்டமாக ரூ.2 கோடி செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி திரு.இராசா திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியதாவது; ``பொதுவாழ்விலும், வர்த்தகத்திலும் செல்வம் ஈட்டுவது பண்பாடு, திருவள்ளுவர் கூறியதுபோல அறவழியில் வரும் பொருள் இன்பம் தரும். தலைமுறைக்கு அறம் தரும் கல்விப்பணியை இந்நிறுவனத்தலைவர் திரு.அ.சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். அவரது கடின உழப்பினால் இந்நிறுவனம் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. அறிஞர் அண்ணா கூறியதுபோல மழை வரவேண்டும் என்பது பொதுநலம். அதில் நாம் நனையாமல் இருக்கக் குடைபிடிப்பது சுயநலம். அதுபோல இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பொதுநலத்துடன் இணைந்த சுயநலமும் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு எனது முயற்சி காரணம் என்று இங்கே கூறினார்கள். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் காரணமானவர் கலைஞர். நான் கருவி மட்டுமே. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கூறுகிறேன். இங்கு மருத்துவக்கல்லூரி அமைய உள்ளதை அறியும்போது இவர்களுக்கு நிகராகப் போட்டியிட அரசு மருத்துவக்கல்லூரி உடனே தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது.’’
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத் தலைவர் திரு.அ.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது;``எங்களது இந்த மருத்துவமனையில் 16 படுக்கை வசதிகள் உள்ளது. புறநோயாளிகள் பிரிவு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் இயங்கும் 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும். பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அடிக்கடி இலவச பஸ்கள் இயக்கப்படும். கிராம மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரம்பலூர் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் வளர்ச்சியைப் பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதற்கு மத்திய மந்திரி திரு.இராசா முயற்சியே முக்கியக் காரணம் ஆகும்.’’
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் திரு.ராஜ்குமார், ஆண்டிமடம் திரு.சிவசங்கர், தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் திரு.வரதராஜன், முன்னாள் ஒன்றிய சேர்மன திரு.அட்சயகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமச் செயலாளர் மகன்
டாக்டர் வினோத் –டாக்டர் சரண்யா திருமணம்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ.சீனிவாசனின் பேரனும், செயலாளர் திரு.நீல்ராஜ் –திருமதி . ஜெயந்தி மகனுமான டாக்டர் என்.வினோத் மற்றும் சென்னை பி.எம்.மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் வி.தியாகராஜன் –டாக்டர் வசுந்தரா, இவர்களது மகள் டாக்டர் டி.சரண்யா திருமணம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் 17.02.2010 அன்று காலை நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தை தினத்தன்று பெண் அழைப்பும், வரவேற்பு நிகழ்ச்சியும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்து. இதனை முன்னிட்டு திரு. கங்கை அமரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் சினிமாத் தயாரிப்பாளர் திரு.பிரபுவெங்கட் உள்படப் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலூர் கலெக்டர் திரு.மா.விஜயகுமார் ஒரு இந்திப் பாடலைப் பாடினார்.
``மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.அ.இராசா கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.கே.என் நேரு மாவட்ட கலெக்டர்கள் திரு.விஜயகுமார் (பெரம்பலூர்), திரு.சவுண்டையா (திருச்சி), திரு.சுடலைக்கண்ணன் (ஈரோடு), போலீஸ் சூப்பிரண்டுகள் திருமிகு. வனிதா, திரு.பிரேம் ஆனந்த சின்கா, திரு.நஜ்மல்கோடா (அரியலூர்), திரு.கலியமூர்த்தி (திருச்சி), திருச்சி தொழில் அதிபர் திரு.ராமஜெயம், எம்.எல்.ஏல்க்கள் திரு.ராஜ்குமார் (பெரம்பலூர்), திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் (ஆண்டிமடம்), அரியலூர் பாளை திரு.அமரமூர்த்தி, திரு,அன்பில் பெரியசாமி, வரகூர் திரு.சந்திரகாசி, திருச்சி மாநகர கமிஷனர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் திரு.பழனிசாமி, திரு.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. திரு.துரைசாமி, தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைச் செயல் இயக்குநர் திரு.எஸ்.சீனிவாசன்,அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திரு.பாலசுப்ரமணியன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை டீன் டாக்டர் திரு.ரெங்கநாதன் பன்னாரி சர்க்கரை ஆலைத் தலைவர் திரு.பாலசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் திரு.கு.ப.கிருஷ்ணன், பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் திரு.எம்.என். ராஜா, துணைத்தலைவர் ஓவியர் திரு.முகுந்தன், சென்னைத் தொழில் அதிபர்கள் திரு.பாரி, திரு.சாதிக்பாட்சா, பெரம்பலூர் திரு.கர்ணம் சுப்ரமணியம், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.வரதராஜன், துணைத்தலைவர் திரு.ஜான் அசோக் வரதராஜன், சாரதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.சிவசுப்ரமணியன், சிவகாமம் மோட்டார்ஸ் அதிபர் மற்றும் பனிமலர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கலியபெருமாள், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கிறிஸ்டோபர்,
மற்றும் மருத்துவத்துறையினர், அரசு உயர் அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், அரிமா, ரோட்டரி மற்றும் லியோ சங்க நிர்வாகிகள், பஸ் அதிபர்கள்,பெரம்பலூர், திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வர்த்தகப் பிரமுகர்கள் நிரளாகக் கலந்து கொண்டனர்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற சாக்சபோன் கலைஞர் திரு. கத்ரி கோபால்நாத் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமண விழாவையொட்டி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் தோரண வாயில்கள் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதோடு கல்லூரி வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாகக் காட்சி அளித்தது. திருமண விழாவிற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, நாட்நாட்செவன் கலர்லேப் சார்பில் இலவசமாக போட்டோக்கள் எடுத்து உடனுக்குடன் வினியோகிக்கப்பட்டது. பெரம்பலூரில் பிரம்மாண்டமான அளவில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் பற்றி இவர்கள்;
திரு.மு. அட்சயகோபால் (முன்னாள் ஒன்றிய சேர்மன்)
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதும் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
திரு.அ.சீனிவாசன் அவர்கள் தன்னுடைய கடின உழைப்பாலும், தளராத தன்னம்பிக்கையாலும், மிகப் பெரிய சாதனை செய்து வெற்றி கண்டுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக, திரு.அ.சீனிவாசன் அவர்களை உற்று நோக்கியும், அவருடன் பழகியும் வந்திருக்கிறேன். அவருடைய எளிமையும், பாசத்துடன் பழகும் பாங்கும், என்னை மிகவும் கவர்ந்தது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், நவீன் சர்க்கரை ஆலை, மருத்துவமனை என்று பெரம்பலூரில் பலரும் வியக்கும் வண்ணம், பல அரும்பெரும் சாதனைகளை ஆண்டுதோறும் நிகழ்த்திக் கொண்டே வருகிறார்.
திரு.அ.சீனிவாசன் அவர்களுடைய சாதனைகள் மென்மேலும் தொடர, என் இனிய நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்.
திரு.மு.இராஜாராம், (அரிமா சாசனத் தலைவர்)
அன்புகெழுமிய நண்பர் திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு, வணக்கம்! சிகரம் தொட்ட சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றித் தாங்கள் புத்தகம் எழுதுவது குறித்து மகிழ்ச்சி.
பெரம்பலூரில் எத்தனையோ மனிதர்கள், பெரியவர்கள் தோன்றி, மறைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய சாதனைகள் எதையும், எவரும் செய்த வரலாறு இல்லை. அரசியலில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அ.இராசா அவர்கள் பெரம்பலூருக்கு மகத்தான பல செயற்கரிய சாதனைகளைச் செய்துள்ளது மறுக்க முடியாது.
அதேசமயம் தனிப்பட்ட முறையில், தனது திட்டமிடலாலும், அயராத கடும் உழைப்பினாலும், பெரம்பலூருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கித் தந்த முதல் மனிதர் திரு.அ.சீனிவாசன் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதனால், பெரம்பலூருக்கு பெருமை சேர்த்துத் தந்தார் என்பதும் உண்மையிலும் உண்மை. உழைப்பால் உயர நினைப்பவர்கள், இவரைத்தான் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை வாழ்க்கையில் இவர் உணர்ந்த காரணத்தால், தமிழகத்தின் தலைசிறந்த மாபெரும் கல்வி நிறுவனங்களைப் போகிற போக்கில், சர்வ சாதாரணமாக நிறுவி, இமாலயச் சாதனையை பத்தே வருடங்களில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். சாதனைகளை அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.
தனலட்சுமி சீனிவாசன் சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையும், அதே பெயரில் பிரம்மாண்டமான மருத்துவமனையும் பெரம்பலூர் பகுதியில் நிறுவிப் பிற்படுத்தப்பட்ட இப்பகுதி ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார நல்வாழ்வு போன்றவற்றுக்கு அடித்தளம் ஏற்படுத்தி உள்ளார். இன்னும் அவரால் பெரம்பலூர்ப் பகுதி மக்கள் பல நன்மைகளை அடையப்போவது உறுதி.
சமீப காலங்களில், அளவற்ற அவரது வள்ளல் தன்மையையும் பார்க்கிறேன். அவரது எளிமை, அனைவரையும் அனுசரிக்கும் பாங்கு, அவரை இன்னும் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் என்பது திண்ணம். தனி மனிதனாகத் தன் உழைப்பால், சிகரம் தொட்ட இச்சாதனையாளர் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து பலரின் உயர்வுக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
முற்றும்!
(முற்றுமென்பது என் கட்டுரைக்கேயொழிய... திரு அ.சீனிவாசன் அவர்களின் சாதனைக்கு அல்ல!)
தகவலுக்கு உதவிய www.lakshmansruthi.com இணையதளத்திற்கு நன்றி பல!
நன்றியுடன்..
வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
பெரம்பலூரில் ரூ.2 கோடி மதிப்பில்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை
தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் சார்பில் சர்வதேசத்தரத்தில் அமையும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியின் முன்னோட்டமாக ரூ.2 கோடி செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி திரு.இராசா திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியதாவது; ``பொதுவாழ்விலும், வர்த்தகத்திலும் செல்வம் ஈட்டுவது பண்பாடு, திருவள்ளுவர் கூறியதுபோல அறவழியில் வரும் பொருள் இன்பம் தரும். தலைமுறைக்கு அறம் தரும் கல்விப்பணியை இந்நிறுவனத்தலைவர் திரு.அ.சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். அவரது கடின உழப்பினால் இந்நிறுவனம் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. அறிஞர் அண்ணா கூறியதுபோல மழை வரவேண்டும் என்பது பொதுநலம். அதில் நாம் நனையாமல் இருக்கக் குடைபிடிப்பது சுயநலம். அதுபோல இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பொதுநலத்துடன் இணைந்த சுயநலமும் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு எனது முயற்சி காரணம் என்று இங்கே கூறினார்கள். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் காரணமானவர் கலைஞர். நான் கருவி மட்டுமே. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கூறுகிறேன். இங்கு மருத்துவக்கல்லூரி அமைய உள்ளதை அறியும்போது இவர்களுக்கு நிகராகப் போட்டியிட அரசு மருத்துவக்கல்லூரி உடனே தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது.’’
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத் தலைவர் திரு.அ.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது;``எங்களது இந்த மருத்துவமனையில் 16 படுக்கை வசதிகள் உள்ளது. புறநோயாளிகள் பிரிவு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் இயங்கும் 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும். பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அடிக்கடி இலவச பஸ்கள் இயக்கப்படும். கிராம மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரம்பலூர் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் வளர்ச்சியைப் பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதற்கு மத்திய மந்திரி திரு.இராசா முயற்சியே முக்கியக் காரணம் ஆகும்.’’
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் திரு.ராஜ்குமார், ஆண்டிமடம் திரு.சிவசங்கர், தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் திரு.வரதராஜன், முன்னாள் ஒன்றிய சேர்மன திரு.அட்சயகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமச் செயலாளர் மகன்
டாக்டர் வினோத் –டாக்டர் சரண்யா திருமணம்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ.சீனிவாசனின் பேரனும், செயலாளர் திரு.நீல்ராஜ் –திருமதி . ஜெயந்தி மகனுமான டாக்டர் என்.வினோத் மற்றும் சென்னை பி.எம்.மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் வி.தியாகராஜன் –டாக்டர் வசுந்தரா, இவர்களது மகள் டாக்டர் டி.சரண்யா திருமணம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் 17.02.2010 அன்று காலை நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தை தினத்தன்று பெண் அழைப்பும், வரவேற்பு நிகழ்ச்சியும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்து. இதனை முன்னிட்டு திரு. கங்கை அமரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் சினிமாத் தயாரிப்பாளர் திரு.பிரபுவெங்கட் உள்படப் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலூர் கலெக்டர் திரு.மா.விஜயகுமார் ஒரு இந்திப் பாடலைப் பாடினார்.
``மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.அ.இராசா கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.கே.என் நேரு மாவட்ட கலெக்டர்கள் திரு.விஜயகுமார் (பெரம்பலூர்), திரு.சவுண்டையா (திருச்சி), திரு.சுடலைக்கண்ணன் (ஈரோடு), போலீஸ் சூப்பிரண்டுகள் திருமிகு. வனிதா, திரு.பிரேம் ஆனந்த சின்கா, திரு.நஜ்மல்கோடா (அரியலூர்), திரு.கலியமூர்த்தி (திருச்சி), திருச்சி தொழில் அதிபர் திரு.ராமஜெயம், எம்.எல்.ஏல்க்கள் திரு.ராஜ்குமார் (பெரம்பலூர்), திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் (ஆண்டிமடம்), அரியலூர் பாளை திரு.அமரமூர்த்தி, திரு,அன்பில் பெரியசாமி, வரகூர் திரு.சந்திரகாசி, திருச்சி மாநகர கமிஷனர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் திரு.பழனிசாமி, திரு.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. திரு.துரைசாமி, தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைச் செயல் இயக்குநர் திரு.எஸ்.சீனிவாசன்,அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திரு.பாலசுப்ரமணியன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை டீன் டாக்டர் திரு.ரெங்கநாதன் பன்னாரி சர்க்கரை ஆலைத் தலைவர் திரு.பாலசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் திரு.கு.ப.கிருஷ்ணன், பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் திரு.எம்.என். ராஜா, துணைத்தலைவர் ஓவியர் திரு.முகுந்தன், சென்னைத் தொழில் அதிபர்கள் திரு.பாரி, திரு.சாதிக்பாட்சா, பெரம்பலூர் திரு.கர்ணம் சுப்ரமணியம், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.வரதராஜன், துணைத்தலைவர் திரு.ஜான் அசோக் வரதராஜன், சாரதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.சிவசுப்ரமணியன், சிவகாமம் மோட்டார்ஸ் அதிபர் மற்றும் பனிமலர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கலியபெருமாள், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கிறிஸ்டோபர்,
மற்றும் மருத்துவத்துறையினர், அரசு உயர் அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், அரிமா, ரோட்டரி மற்றும் லியோ சங்க நிர்வாகிகள், பஸ் அதிபர்கள்,பெரம்பலூர், திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வர்த்தகப் பிரமுகர்கள் நிரளாகக் கலந்து கொண்டனர்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற சாக்சபோன் கலைஞர் திரு. கத்ரி கோபால்நாத் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமண விழாவையொட்டி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் தோரண வாயில்கள் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதோடு கல்லூரி வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாகக் காட்சி அளித்தது. திருமண விழாவிற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, நாட்நாட்செவன் கலர்லேப் சார்பில் இலவசமாக போட்டோக்கள் எடுத்து உடனுக்குடன் வினியோகிக்கப்பட்டது. பெரம்பலூரில் பிரம்மாண்டமான அளவில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் பற்றி இவர்கள்;
திரு.மு. அட்சயகோபால் (முன்னாள் ஒன்றிய சேர்மன்)
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதும் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
திரு.அ.சீனிவாசன் அவர்கள் தன்னுடைய கடின உழைப்பாலும், தளராத தன்னம்பிக்கையாலும், மிகப் பெரிய சாதனை செய்து வெற்றி கண்டுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக, திரு.அ.சீனிவாசன் அவர்களை உற்று நோக்கியும், அவருடன் பழகியும் வந்திருக்கிறேன். அவருடைய எளிமையும், பாசத்துடன் பழகும் பாங்கும், என்னை மிகவும் கவர்ந்தது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், நவீன் சர்க்கரை ஆலை, மருத்துவமனை என்று பெரம்பலூரில் பலரும் வியக்கும் வண்ணம், பல அரும்பெரும் சாதனைகளை ஆண்டுதோறும் நிகழ்த்திக் கொண்டே வருகிறார்.
திரு.அ.சீனிவாசன் அவர்களுடைய சாதனைகள் மென்மேலும் தொடர, என் இனிய நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்.
திரு.மு.இராஜாராம், (அரிமா சாசனத் தலைவர்)
அன்புகெழுமிய நண்பர் திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு, வணக்கம்! சிகரம் தொட்ட சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றித் தாங்கள் புத்தகம் எழுதுவது குறித்து மகிழ்ச்சி.
பெரம்பலூரில் எத்தனையோ மனிதர்கள், பெரியவர்கள் தோன்றி, மறைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய சாதனைகள் எதையும், எவரும் செய்த வரலாறு இல்லை. அரசியலில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அ.இராசா அவர்கள் பெரம்பலூருக்கு மகத்தான பல செயற்கரிய சாதனைகளைச் செய்துள்ளது மறுக்க முடியாது.
அதேசமயம் தனிப்பட்ட முறையில், தனது திட்டமிடலாலும், அயராத கடும் உழைப்பினாலும், பெரம்பலூருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கித் தந்த முதல் மனிதர் திரு.அ.சீனிவாசன் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதனால், பெரம்பலூருக்கு பெருமை சேர்த்துத் தந்தார் என்பதும் உண்மையிலும் உண்மை. உழைப்பால் உயர நினைப்பவர்கள், இவரைத்தான் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை வாழ்க்கையில் இவர் உணர்ந்த காரணத்தால், தமிழகத்தின் தலைசிறந்த மாபெரும் கல்வி நிறுவனங்களைப் போகிற போக்கில், சர்வ சாதாரணமாக நிறுவி, இமாலயச் சாதனையை பத்தே வருடங்களில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். சாதனைகளை அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.
தனலட்சுமி சீனிவாசன் சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையும், அதே பெயரில் பிரம்மாண்டமான மருத்துவமனையும் பெரம்பலூர் பகுதியில் நிறுவிப் பிற்படுத்தப்பட்ட இப்பகுதி ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார நல்வாழ்வு போன்றவற்றுக்கு அடித்தளம் ஏற்படுத்தி உள்ளார். இன்னும் அவரால் பெரம்பலூர்ப் பகுதி மக்கள் பல நன்மைகளை அடையப்போவது உறுதி.
சமீப காலங்களில், அளவற்ற அவரது வள்ளல் தன்மையையும் பார்க்கிறேன். அவரது எளிமை, அனைவரையும் அனுசரிக்கும் பாங்கு, அவரை இன்னும் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் என்பது திண்ணம். தனி மனிதனாகத் தன் உழைப்பால், சிகரம் தொட்ட இச்சாதனையாளர் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து பலரின் உயர்வுக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
முற்றும்!
(முற்றுமென்பது என் கட்டுரைக்கேயொழிய... திரு அ.சீனிவாசன் அவர்களின் சாதனைக்கு அல்ல!)
தகவலுக்கு உதவிய www.lakshmansruthi.com இணையதளத்திற்கு நன்றி பல!
நன்றியுடன்..
வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
முன்னேறு... முன்னேற்று! தொடர் 19
முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
எனவே, இக்கல்வி நிறுவனங்கள் பல தேசிய அங்கீகாரம் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட வித்திட்டவர் என்பது பெருமகிழ்வைத் தருகிறது. திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக் கழகத்தில் சின்டிக்கேட் உறுப்பினராக நியமித்து ஐயாவைக் கெளரவப்படுத்திப் பெருமை சேர்த்து உள்ளவர்கள்.
நவீன சமையற் கூடங்களை அமைத்து அதிகச் சுகாதாரமான உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் ஈடுபாடும் அக்கறையும் கொள்பவர் ஐயா அவர்கள்.
மாணவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிக் கெளரவப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்பவர்.
விவசாயத்தை இன்றும் இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் ஐயா அவர்கள் விவசாயகளிடம் பற்றும்,பாசமும் மிக்கவர்.
விவசாயிகளின் நலனில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையையும் நிறுவி, கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஒளிபெறச் செய்திருக்கிறார்.
அன்பும், பண்பும், கனிவும் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் மிகுந்த ஈடுபாடு மிக்க பெருமை மிகு பண்பாளர்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும், சர்க்கரை ஆலையையும் தனது சொந்த மாவட்டத்திலேயே நிறுவி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதில் அரும்பாடுபட்டவர்.
மாலைநேர நடைப் பயணத்தில் விருப்பம் உள்ளவர். அப்போது மாணவர்களிடம் உரையாடுவதில் அதிக விருப்பம் உள்ளவர். அவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்.
ஐயா நீண்ட ஆயுள் பெற்றுச் சிறப்பாகச் சேவையைத் தொடர என் சார்பிலும் பொறியியல் கல்லூரி சார்பிலும் வாழ்த்துகள்!
தனலட்சுமி சீனிவாசன்
சர்க்கரை ஆலை திறப்புவிழா
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ. சீனிவாசன் தலைமை வகித்தார். விழாவில் டி.எஸ்.குழுமச் செயலாளர் திரு.நீல்ராஜ் வரவேற்றார். இந்தியன் வங்கித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.சுந்தரராஜன் சர்க்கரை ஆலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் திரு.நுபுர்மித்ரா சர்க்கரை உற்பத்தி நிலையத்தையும், ஆலையின் மின் உற்பத்தி நிலையத்தை மத்திய மாற்றத்தக்கவல்ல எரிசக்தி நிறுவனத்தின் (இரிடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.தெபாஷிஷ் மஜீம்தர் திறந்து வைத்தனர்.
விழாவில் இந்தியன் வங்கித் தலைவர் திரு.சுந்தரராஜன் ``இந்த சர்க்கரை ஆலை மிகக்குறைந்த காலத்தில் அதாவது ஓர் ஆண்டு 4 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வேகமாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறது. நமது நாட்டின் பொருளாதாரம் வளர இதுபோன்ற ஆலைகள் பெரிதும் துணை புரியும். இங்குள்ள 3 வங்கிகள் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. வேளாண் பெருமக்கள் வங்கிக் கிளைகளுக்குச் சென்று பல்வேறு கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2015 -2020 –க்குள் இந்தியா வல்லரசாக மாறும், அதற்குத் திறன்மிக்கவர்கள் தேவை. அந்தத் திறனைக் கல்வியால் மட்டுமே கொடுக்கமுடியும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் 30 ஆயிரம் பேருக்குக் கல்வி அளித்துவருகிறது. இவர்களது கல்விப் பணி தொடர்ந்திட வேண்டும். பாராட்டுக்குரிய இந்நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் புரிந்திட வேண்டும்’’ என்று பேசினார்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர்
திரு.அ.சீனிவாசன் தொடக்க உரை
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர் திரு.அ.சீனிவாசன் தொடக்க உரையில்.... ``எங்களது சர்க்கரை ஆலையைத் தொடங்க அனுமதி வழங்கிய முதல் அமைச்சர் கலைஞர் மற்றும் இந்த ஆலைக்குப் பரிந்துரை செய்த மத்தியத் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை மந்திரி திரு.இராசா, தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி, வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து கரும்பினை அதிகம் பயிர் செய்யவும்,அதன் மூலம் அதிக மகசூல் பெறவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும், `` சர்க்கரை ஆலையில் பணியாற்றும் அனைவருக்கும் அவர்களது ஒருமாதச் சம்பளம் போனஸாக வழங்கப்படும்’’ என்று அவர் பேசினார்.
விழாவில் அரியலூர் மாவட்டக் கலெக்டர் திரு.ஆப்ரகாம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. திரு.ராமசுப்ரமணி, பேங்க் ஆஃப் இந்தியா உயர் அலுவலர் திரு. தயால், வட்டாரத் தலைவர் திரு கே.எஸ்.ராஜன், பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு திருமிகு. வனிதா, தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் ரோவர் திரு.வரதராஜன், கரும்பு விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் திரு.செல்லதுரை உள்பட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
விழாவில் சர்க்கரை ஆலையின் செயல் இயக்குநர் திரு.எஸ். சீனிவாசனுக்கு, அஒ பவுன் தங்கச்சங்கிலி ,ரூ3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் காசோலையும், மின்சார உற்பத்தி மேலாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும்,ஆலை மேலாளர் திரு.பழனிவேல் ராஜனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி , ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும், எலட்ரிக்கல் மேலாளர் திரு.சரவணனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் காசோலையும், ஆலைக் கட்டுமான நிறுவனமான சி.சி.எல். மேலாளர் திரு அறிவழகனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, 50 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
&&&&&&&&&&&&&&&
தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் நவீன் தொழில்நுட்ப முறையில் ஒரு நாளைக்கு 3500 டன் கரும்பு அரவை செய்யப்படும். அத்துடன் 60 கிலோ லிட்டர் டிஸ்டிலரீஸ், ஒரு மணி நேரத்திற்கு 23 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளது.
இந்த ஆலையின் மூலம் 500 பேர் நேரடியாகவும், 2000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இந்த ஆலையில் தினமும் 3 சிப்ட் முறையில் ஒரு நாளைக்கு 3500 முதல் 4000 மூட்டைகள் வரை சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.
ஆலையின் மின்சாரச் செலவைக் குறைப்பதற்காகவும் சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் நான்கு அதிநவீன 2 ரோலர் மில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான டர்பைன் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சல்பர் அமிலம் பயன்படுத்தாமல் ரீபைண்ட் சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 30 கோடி செலவில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலையின் சக்கைகளைப் பயன்படுத்தி ஒரு மணிநேரத்திற்கு 23000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து 6.5 மெகாவாட் ஆலையின் தேவைக்காகவும் மீதமுள்ள 16.5 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் விற்கப்பட உள்ளது.
மொலாசஸ் எனப்படும் பை ப்ராடக்ட்டைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வீதம் எத்தனால் மற்றும் ஸ்பிரிட் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இது வரை சுமார் 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு 2009 ஆம ஆண்டில் மட்டும் சுமார் ரூ.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டில் சுமார் 1528 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 253 விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு நாற்பதாயிரம் வீதம் மானியம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 693 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 விவசாயிகள் பயண்டைவார்கள். சுமார் 1250 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகள் மத்தியில் நல் உறவை மேம்படுத்த 10 கரும்பு மண்டல அலுவலகமும் 50 செக்சன் அலுவலகமும் தொடங்கப்பட்டு அதில் 60 கரும்பு விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுவரை விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க ஆஃப் இந்தியா போன்ற அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனாக சுமார் பத்துக் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரும்புப் பயிரினை இடைக்கணுப்புழுத் தாக்குதலிலிருந்து காக்க ஒரு இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்ய சுமார் ரூ.4 கோடி செலவில் இரண்டு அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
இதுவரை கரும்பு அதிகாரிகள், கரும்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்தக் கிராமத் தலைவர்களைக் கொண்டு 221 கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தொடரும்...
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
எனவே, இக்கல்வி நிறுவனங்கள் பல தேசிய அங்கீகாரம் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட வித்திட்டவர் என்பது பெருமகிழ்வைத் தருகிறது. திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக் கழகத்தில் சின்டிக்கேட் உறுப்பினராக நியமித்து ஐயாவைக் கெளரவப்படுத்திப் பெருமை சேர்த்து உள்ளவர்கள்.
நவீன சமையற் கூடங்களை அமைத்து அதிகச் சுகாதாரமான உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் ஈடுபாடும் அக்கறையும் கொள்பவர் ஐயா அவர்கள்.
மாணவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிக் கெளரவப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்பவர்.
விவசாயத்தை இன்றும் இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் ஐயா அவர்கள் விவசாயகளிடம் பற்றும்,பாசமும் மிக்கவர்.
விவசாயிகளின் நலனில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையையும் நிறுவி, கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஒளிபெறச் செய்திருக்கிறார்.
அன்பும், பண்பும், கனிவும் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் மிகுந்த ஈடுபாடு மிக்க பெருமை மிகு பண்பாளர்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும், சர்க்கரை ஆலையையும் தனது சொந்த மாவட்டத்திலேயே நிறுவி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதில் அரும்பாடுபட்டவர்.
மாலைநேர நடைப் பயணத்தில் விருப்பம் உள்ளவர். அப்போது மாணவர்களிடம் உரையாடுவதில் அதிக விருப்பம் உள்ளவர். அவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்.
ஐயா நீண்ட ஆயுள் பெற்றுச் சிறப்பாகச் சேவையைத் தொடர என் சார்பிலும் பொறியியல் கல்லூரி சார்பிலும் வாழ்த்துகள்!
தனலட்சுமி சீனிவாசன்
சர்க்கரை ஆலை திறப்புவிழா
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ. சீனிவாசன் தலைமை வகித்தார். விழாவில் டி.எஸ்.குழுமச் செயலாளர் திரு.நீல்ராஜ் வரவேற்றார். இந்தியன் வங்கித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.சுந்தரராஜன் சர்க்கரை ஆலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் திரு.நுபுர்மித்ரா சர்க்கரை உற்பத்தி நிலையத்தையும், ஆலையின் மின் உற்பத்தி நிலையத்தை மத்திய மாற்றத்தக்கவல்ல எரிசக்தி நிறுவனத்தின் (இரிடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.தெபாஷிஷ் மஜீம்தர் திறந்து வைத்தனர்.
விழாவில் இந்தியன் வங்கித் தலைவர் திரு.சுந்தரராஜன் ``இந்த சர்க்கரை ஆலை மிகக்குறைந்த காலத்தில் அதாவது ஓர் ஆண்டு 4 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வேகமாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறது. நமது நாட்டின் பொருளாதாரம் வளர இதுபோன்ற ஆலைகள் பெரிதும் துணை புரியும். இங்குள்ள 3 வங்கிகள் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. வேளாண் பெருமக்கள் வங்கிக் கிளைகளுக்குச் சென்று பல்வேறு கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2015 -2020 –க்குள் இந்தியா வல்லரசாக மாறும், அதற்குத் திறன்மிக்கவர்கள் தேவை. அந்தத் திறனைக் கல்வியால் மட்டுமே கொடுக்கமுடியும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் 30 ஆயிரம் பேருக்குக் கல்வி அளித்துவருகிறது. இவர்களது கல்விப் பணி தொடர்ந்திட வேண்டும். பாராட்டுக்குரிய இந்நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் புரிந்திட வேண்டும்’’ என்று பேசினார்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர்
திரு.அ.சீனிவாசன் தொடக்க உரை
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர் திரு.அ.சீனிவாசன் தொடக்க உரையில்.... ``எங்களது சர்க்கரை ஆலையைத் தொடங்க அனுமதி வழங்கிய முதல் அமைச்சர் கலைஞர் மற்றும் இந்த ஆலைக்குப் பரிந்துரை செய்த மத்தியத் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை மந்திரி திரு.இராசா, தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி, வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து கரும்பினை அதிகம் பயிர் செய்யவும்,அதன் மூலம் அதிக மகசூல் பெறவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும், `` சர்க்கரை ஆலையில் பணியாற்றும் அனைவருக்கும் அவர்களது ஒருமாதச் சம்பளம் போனஸாக வழங்கப்படும்’’ என்று அவர் பேசினார்.
விழாவில் அரியலூர் மாவட்டக் கலெக்டர் திரு.ஆப்ரகாம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. திரு.ராமசுப்ரமணி, பேங்க் ஆஃப் இந்தியா உயர் அலுவலர் திரு. தயால், வட்டாரத் தலைவர் திரு கே.எஸ்.ராஜன், பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு திருமிகு. வனிதா, தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் ரோவர் திரு.வரதராஜன், கரும்பு விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் திரு.செல்லதுரை உள்பட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
விழாவில் சர்க்கரை ஆலையின் செயல் இயக்குநர் திரு.எஸ். சீனிவாசனுக்கு, அஒ பவுன் தங்கச்சங்கிலி ,ரூ3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் காசோலையும், மின்சார உற்பத்தி மேலாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும்,ஆலை மேலாளர் திரு.பழனிவேல் ராஜனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி , ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும், எலட்ரிக்கல் மேலாளர் திரு.சரவணனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் காசோலையும், ஆலைக் கட்டுமான நிறுவனமான சி.சி.எல். மேலாளர் திரு அறிவழகனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, 50 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
&&&&&&&&&&&&&&&
தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் நவீன் தொழில்நுட்ப முறையில் ஒரு நாளைக்கு 3500 டன் கரும்பு அரவை செய்யப்படும். அத்துடன் 60 கிலோ லிட்டர் டிஸ்டிலரீஸ், ஒரு மணி நேரத்திற்கு 23 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளது.
இந்த ஆலையின் மூலம் 500 பேர் நேரடியாகவும், 2000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இந்த ஆலையில் தினமும் 3 சிப்ட் முறையில் ஒரு நாளைக்கு 3500 முதல் 4000 மூட்டைகள் வரை சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.
ஆலையின் மின்சாரச் செலவைக் குறைப்பதற்காகவும் சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் நான்கு அதிநவீன 2 ரோலர் மில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான டர்பைன் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சல்பர் அமிலம் பயன்படுத்தாமல் ரீபைண்ட் சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 30 கோடி செலவில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலையின் சக்கைகளைப் பயன்படுத்தி ஒரு மணிநேரத்திற்கு 23000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து 6.5 மெகாவாட் ஆலையின் தேவைக்காகவும் மீதமுள்ள 16.5 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் விற்கப்பட உள்ளது.
மொலாசஸ் எனப்படும் பை ப்ராடக்ட்டைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வீதம் எத்தனால் மற்றும் ஸ்பிரிட் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இது வரை சுமார் 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு 2009 ஆம ஆண்டில் மட்டும் சுமார் ரூ.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டில் சுமார் 1528 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 253 விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு நாற்பதாயிரம் வீதம் மானியம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 693 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 விவசாயிகள் பயண்டைவார்கள். சுமார் 1250 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகள் மத்தியில் நல் உறவை மேம்படுத்த 10 கரும்பு மண்டல அலுவலகமும் 50 செக்சன் அலுவலகமும் தொடங்கப்பட்டு அதில் 60 கரும்பு விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுவரை விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க ஆஃப் இந்தியா போன்ற அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனாக சுமார் பத்துக் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரும்புப் பயிரினை இடைக்கணுப்புழுத் தாக்குதலிலிருந்து காக்க ஒரு இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்ய சுமார் ரூ.4 கோடி செலவில் இரண்டு அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
இதுவரை கரும்பு அதிகாரிகள், கரும்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்தக் கிராமத் தலைவர்களைக் கொண்டு 221 கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தொடரும்...
முன்னேறு... முன்னேற்று! தொடர் 18
முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
யோசித்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கதையிலும் சினிமாவிலும் சட்சட்டென வளர்ச்சியை வித்தை காட்டுவார்கள். இது பொய்யல்ல. நிஜம்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ஒரு பாமரர் இன்று 17 கல்வி நிறுவனங்களின் நிறுவனர் –தலைவர்! இங்கே 1300 ஆசிரியர்கள்! 800 இதர பணியாளர்கள்!
இந்தக் கல்வி நிறுவனம் விரைவில் பல்கலைக் கழகமாக ஆக விருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களை உள்ளடக்க இருக்கிறது!
இவ்வளவு வளர்ச்சி கண்ட சீனிவாசன் கூட்டுக் குடும்பமாய் வசிக்கிறார். அதே பழைய வீடு. இவர்களுக்கென்று தனியாய் இடம் ஃப்ளாட் கிடையாது. சொகுசு –செளகர்யம் தேடாமல் தங்கள் மூச்சு –பேச்சு –சிந்தை –செயல் எல்லாவற்றையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.
(17)
திரு. என். வெங்கட்ராஜீ அவர்கள் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், 30 வருடங்களாக திரு.அ.சீனிவாசன் அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருப்பவர்.
@@@@@@@@@@@@@@@@@
எந்த ஒரு வீட்டு –வெளி விசேஷங்களுக்கும் ஐயாவுக்கு இவர் துனை.
திரு. அ.சீனிவாசன் அவர்களின் குணநலன்கள் –சேவை பற்றி இவர் சிலாகித்து மகிழ்ந்து பல விஷயங்களை விளம்புகிறார்.
``ஐயா புறத்தூய்மை –மனத்தூய்மை மலையளவு பெற்றவர் –தன் வாரிசுகளுடன் தன் குடும்பத்தில் மைத்துனர்கள், மைத்துனிகள் அனைவரையும் ஒரே குடும்பமாய் வைத்து –அனைவருக்கும் தானே முன்னின்று திருமணங்கள் செய்வித்து அவர்களும் சிறப்பாகப் பொருளீட்ட உதவிவருபவர்.
எந்தக் காரியமாகட்டும் சிந்தித்து –வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று நேர்த்தியாக –நியாயமாகச் செய்வது இவரது பண்பாடு.
தங்கள் நிறுவனங்களில் பணிபுரிவோரிடம் அவரவர்களின் திறமை –தகுதிக்கேற்ப பொறுப்புகள் கொடுத்து –வேலை வாங்கி –அவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்பவர்.
அரசாங்க அலுவலர்களை எளிமையாய் –முறையாய் அணுகி சேவைகள் ஜனங்களுக்கு போய் சேரும்படி பார்த்துக் கொள்கிறார்.
சொந்தச் செலவில் கோயில் கட்டியிருப்பதுடன் –சுற்றுப்பக்கக் கோயில்களுக்குப் பொருளுதவி செய்து அவற்றையும் மேம்படுத்த உதவுகிறார்.
பெரம்பலூர் அரசாங்க மேல்நிலைப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர்; எய்ட்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி; தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் தன்னைக் காண வரும் ஏழை எளியவர்களுக்குப் பண –பொருள் –ஆடைகள் உதவி;
சுனாமி வந்த போது லட்சக்கணக்கில் உடனடி உதவி; இதைமட்டும் அல்லாமல் தன் ஊழியர்கள், மாணவர்களையும் சிதம்பரத்திற்கு அனுப்பிச் சேவை செய்ய வைத்தார்.
தனது புது நடுவலூர் கிராமத்தில் 75 வீடுகளுக்கு இடம் கொடுத்து, அங்குக் குடிநீர் கிணறு வெட்டி –பைப் லைன் போட்டு விநியோகிக்கிறார். அந்த நல்ல காரியத்திற்கும் சில இடைஞ்சல் வர அவற்றையும் சமாளித்து இதிலும் வெற்றி கண்டுள்ளார்.
பெரம்பலூர் எப்போதுமே வறட்சிப் பகுதி. இங்குக் குடிநீருக்கு எப்போதுமே பிரச்சனை. பெண்கள் தண்ணீருக்காகக் குடம் குடமாய்ச் சுமப்பதைக் கண்டு –மனம் தாங்காமல் அவர்களுக்கு உதவும் பொருட்டு தங்கல் சொந்த இடத்தில் போர் குழாய் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இப்போதும் அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரே பொதுமக்கள் இதன்மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இவரது சேவை –தொண்டுகளை அடுக்கி மாளாது. இவை வெறும் சாம்பிள்கள் மட்டுமே.
ஐயா சத்தியத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவர். எவரிடமும் சண்டை சச்சரவுக்குப் போவதில்லை. மனிதனை மனிதனாய் மதிப்பவர். எளிமை –கனிவான அணுகுமுறை இவரது சிறப்பு. தவறு செய்தாலும் –எதிரிகள் இருந்தாலும் பழிவாங்கும் உணர்வு கூடாது என்பார். எதிரிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நம் எனர்ஜி வீணாகி வளர்ச்சி குறையும்.
இவர் எந்த அரசியலிலும் அரசிலும் தலையிடுவதில்லை, எல்லோரும் இவருக்கு வேண்டியவர்களே 1996 முதல் பெரம்பலூர் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இவரது கல்லூரியில்தான் நடத்தப்படுகிறது.
ஐயா நிறைப் புத்தகங்கள் படிப்பார். புத்தகத்தை எடுத்தால் முடித்துவிட்டுத்தான் உறங்குவார். 66 வயதில் இன்னமும் கண்ணாடி அணியாமலே படிக்கும் `பவர்’ உள்ளவர்.
இவரது திறமை –சாதனை –சேவைக்குக் கெளரமளிக்கும் வகையில் திருச்சி அண்ணா யுனிவர்சிடி தனது சின்டிகேட் மெம்பராக்கியுள்ளது. பல்வேறு சாதனைகள் புரிந்த இவருக்குப் புதுக்கோட்டை இலக்கிய பேரவை `வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவித்து –கெளரவம் பெற்றிருக்கிறது.
மொத்தத்தில்-
திரு.அ.சீனிவாசன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குக் கிடைத்த அரிய முத்து –சொத்து! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து –மக்கல் கொண்டாடும் இவரை முன்னுதாரணமாய்க் கொண்டு மேலும் பலர் உருவாக –உருவாக்கபட இவரைப் பற்றிய இந்த நூல் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
(18)
பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு.ஜெயராமன் திரு.அ . சீனிவாசன் அவர்களைப் பற்றிப் பெருமையுடன் தெரிவிக்கிறார்.
@@@@@@@@@@@@@@
அரசு, பொது, தனியார் எனப் பல நிறுவனங்களில் பணி ஆற்றி உள்ள எனக்கு –அங்கங்கே சந்தித்த மேல் அதிகாரிகள், இயக்குநர்கள், முதல்வர்கள் எனப் பலரின் அனுபவங்கள், செயல்கள் அனைத்தும் நன்கு அத்துப்படி.
இப்போது நான் முதல்வராகப் பணி ஆற்றும் சீனிவாசன் பொறியியல் கல்லூரி கல்வி நிறுவனம் நிச்சயமாகப் பிற நிறுவனங்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.
தம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. இவர்களை மகிழ்வித்துத் தான் மகிழ்வது என்பது மிக உயர்வான பண்பு. இந்த உவகையும் எல்லையில்லா மிகிழ்வும் கொள்பவர் நமது தலைவர் ஐயா அவர்கள்.
இங்குப் படித்த மாணவர்களும் பிறகு சிறந்த பணியில் அமர்த்தப்படும் போது ஐயா பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
காலத்தால் அழியாத, கள்வர்களால் களவாட முடியாத நிலையான சொத்து; அள்ள அள்ளக் குறையாத அத்தகைய அரிய கல்விச் செல்வத்தை மாணவர் சமுதாயத்திற்கு வாரி வாரி வழங்க வேண்டும் எனபதற்காக மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பவர்தான் நமது ஐயா அவர்கள்.
கல்வி நிறுவனங்கள் அடுத்து அடுத்து அமைத்து வளம் பெறச் செய்து மிகத் தரமான கல்வியை மாணவர்ச் சமுதாயத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் பெருமகிழ்வு கொண்டவர். கல்விக் கூடங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வரும் இவர் கல்வி நவீன மயமாவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். இக்கல்வி நிறுவனஙகளில் அதிநவீன ஆய்வுக்கூடங்களை அமைத்து அதன் தரத்தை உயர்த்துவது, நவீன நூலகங்களை அமைத்து அரிய பல நூல்களை இந்த நூலகத்தில் இடம் பெறச் செய்து மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது எனப் பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கல்விக் கூடங்களில் தரத்தை மெருகூட்டியவர்.
தொடரும்...
.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
யோசித்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கதையிலும் சினிமாவிலும் சட்சட்டென வளர்ச்சியை வித்தை காட்டுவார்கள். இது பொய்யல்ல. நிஜம்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ஒரு பாமரர் இன்று 17 கல்வி நிறுவனங்களின் நிறுவனர் –தலைவர்! இங்கே 1300 ஆசிரியர்கள்! 800 இதர பணியாளர்கள்!
இந்தக் கல்வி நிறுவனம் விரைவில் பல்கலைக் கழகமாக ஆக விருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களை உள்ளடக்க இருக்கிறது!
இவ்வளவு வளர்ச்சி கண்ட சீனிவாசன் கூட்டுக் குடும்பமாய் வசிக்கிறார். அதே பழைய வீடு. இவர்களுக்கென்று தனியாய் இடம் ஃப்ளாட் கிடையாது. சொகுசு –செளகர்யம் தேடாமல் தங்கள் மூச்சு –பேச்சு –சிந்தை –செயல் எல்லாவற்றையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.
(17)
திரு. என். வெங்கட்ராஜீ அவர்கள் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், 30 வருடங்களாக திரு.அ.சீனிவாசன் அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருப்பவர்.
@@@@@@@@@@@@@@@@@
எந்த ஒரு வீட்டு –வெளி விசேஷங்களுக்கும் ஐயாவுக்கு இவர் துனை.
திரு. அ.சீனிவாசன் அவர்களின் குணநலன்கள் –சேவை பற்றி இவர் சிலாகித்து மகிழ்ந்து பல விஷயங்களை விளம்புகிறார்.
``ஐயா புறத்தூய்மை –மனத்தூய்மை மலையளவு பெற்றவர் –தன் வாரிசுகளுடன் தன் குடும்பத்தில் மைத்துனர்கள், மைத்துனிகள் அனைவரையும் ஒரே குடும்பமாய் வைத்து –அனைவருக்கும் தானே முன்னின்று திருமணங்கள் செய்வித்து அவர்களும் சிறப்பாகப் பொருளீட்ட உதவிவருபவர்.
எந்தக் காரியமாகட்டும் சிந்தித்து –வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று நேர்த்தியாக –நியாயமாகச் செய்வது இவரது பண்பாடு.
தங்கள் நிறுவனங்களில் பணிபுரிவோரிடம் அவரவர்களின் திறமை –தகுதிக்கேற்ப பொறுப்புகள் கொடுத்து –வேலை வாங்கி –அவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்பவர்.
அரசாங்க அலுவலர்களை எளிமையாய் –முறையாய் அணுகி சேவைகள் ஜனங்களுக்கு போய் சேரும்படி பார்த்துக் கொள்கிறார்.
சொந்தச் செலவில் கோயில் கட்டியிருப்பதுடன் –சுற்றுப்பக்கக் கோயில்களுக்குப் பொருளுதவி செய்து அவற்றையும் மேம்படுத்த உதவுகிறார்.
பெரம்பலூர் அரசாங்க மேல்நிலைப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர்; எய்ட்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி; தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் தன்னைக் காண வரும் ஏழை எளியவர்களுக்குப் பண –பொருள் –ஆடைகள் உதவி;
சுனாமி வந்த போது லட்சக்கணக்கில் உடனடி உதவி; இதைமட்டும் அல்லாமல் தன் ஊழியர்கள், மாணவர்களையும் சிதம்பரத்திற்கு அனுப்பிச் சேவை செய்ய வைத்தார்.
தனது புது நடுவலூர் கிராமத்தில் 75 வீடுகளுக்கு இடம் கொடுத்து, அங்குக் குடிநீர் கிணறு வெட்டி –பைப் லைன் போட்டு விநியோகிக்கிறார். அந்த நல்ல காரியத்திற்கும் சில இடைஞ்சல் வர அவற்றையும் சமாளித்து இதிலும் வெற்றி கண்டுள்ளார்.
பெரம்பலூர் எப்போதுமே வறட்சிப் பகுதி. இங்குக் குடிநீருக்கு எப்போதுமே பிரச்சனை. பெண்கள் தண்ணீருக்காகக் குடம் குடமாய்ச் சுமப்பதைக் கண்டு –மனம் தாங்காமல் அவர்களுக்கு உதவும் பொருட்டு தங்கல் சொந்த இடத்தில் போர் குழாய் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இப்போதும் அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரே பொதுமக்கள் இதன்மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இவரது சேவை –தொண்டுகளை அடுக்கி மாளாது. இவை வெறும் சாம்பிள்கள் மட்டுமே.
ஐயா சத்தியத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவர். எவரிடமும் சண்டை சச்சரவுக்குப் போவதில்லை. மனிதனை மனிதனாய் மதிப்பவர். எளிமை –கனிவான அணுகுமுறை இவரது சிறப்பு. தவறு செய்தாலும் –எதிரிகள் இருந்தாலும் பழிவாங்கும் உணர்வு கூடாது என்பார். எதிரிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நம் எனர்ஜி வீணாகி வளர்ச்சி குறையும்.
இவர் எந்த அரசியலிலும் அரசிலும் தலையிடுவதில்லை, எல்லோரும் இவருக்கு வேண்டியவர்களே 1996 முதல் பெரம்பலூர் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இவரது கல்லூரியில்தான் நடத்தப்படுகிறது.
ஐயா நிறைப் புத்தகங்கள் படிப்பார். புத்தகத்தை எடுத்தால் முடித்துவிட்டுத்தான் உறங்குவார். 66 வயதில் இன்னமும் கண்ணாடி அணியாமலே படிக்கும் `பவர்’ உள்ளவர்.
இவரது திறமை –சாதனை –சேவைக்குக் கெளரமளிக்கும் வகையில் திருச்சி அண்ணா யுனிவர்சிடி தனது சின்டிகேட் மெம்பராக்கியுள்ளது. பல்வேறு சாதனைகள் புரிந்த இவருக்குப் புதுக்கோட்டை இலக்கிய பேரவை `வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவித்து –கெளரவம் பெற்றிருக்கிறது.
மொத்தத்தில்-
திரு.அ.சீனிவாசன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குக் கிடைத்த அரிய முத்து –சொத்து! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து –மக்கல் கொண்டாடும் இவரை முன்னுதாரணமாய்க் கொண்டு மேலும் பலர் உருவாக –உருவாக்கபட இவரைப் பற்றிய இந்த நூல் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
(18)
பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு.ஜெயராமன் திரு.அ . சீனிவாசன் அவர்களைப் பற்றிப் பெருமையுடன் தெரிவிக்கிறார்.
@@@@@@@@@@@@@@
அரசு, பொது, தனியார் எனப் பல நிறுவனங்களில் பணி ஆற்றி உள்ள எனக்கு –அங்கங்கே சந்தித்த மேல் அதிகாரிகள், இயக்குநர்கள், முதல்வர்கள் எனப் பலரின் அனுபவங்கள், செயல்கள் அனைத்தும் நன்கு அத்துப்படி.
இப்போது நான் முதல்வராகப் பணி ஆற்றும் சீனிவாசன் பொறியியல் கல்லூரி கல்வி நிறுவனம் நிச்சயமாகப் பிற நிறுவனங்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.
தம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. இவர்களை மகிழ்வித்துத் தான் மகிழ்வது என்பது மிக உயர்வான பண்பு. இந்த உவகையும் எல்லையில்லா மிகிழ்வும் கொள்பவர் நமது தலைவர் ஐயா அவர்கள்.
இங்குப் படித்த மாணவர்களும் பிறகு சிறந்த பணியில் அமர்த்தப்படும் போது ஐயா பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
காலத்தால் அழியாத, கள்வர்களால் களவாட முடியாத நிலையான சொத்து; அள்ள அள்ளக் குறையாத அத்தகைய அரிய கல்விச் செல்வத்தை மாணவர் சமுதாயத்திற்கு வாரி வாரி வழங்க வேண்டும் எனபதற்காக மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பவர்தான் நமது ஐயா அவர்கள்.
கல்வி நிறுவனங்கள் அடுத்து அடுத்து அமைத்து வளம் பெறச் செய்து மிகத் தரமான கல்வியை மாணவர்ச் சமுதாயத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் பெருமகிழ்வு கொண்டவர். கல்விக் கூடங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வரும் இவர் கல்வி நவீன மயமாவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். இக்கல்வி நிறுவனஙகளில் அதிநவீன ஆய்வுக்கூடங்களை அமைத்து அதன் தரத்தை உயர்த்துவது, நவீன நூலகங்களை அமைத்து அரிய பல நூல்களை இந்த நூலகத்தில் இடம் பெறச் செய்து மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது எனப் பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கல்விக் கூடங்களில் தரத்தை மெருகூட்டியவர்.
தொடரும்...
.
முன்னேறு... முன்னேற்று! தொடர் 17
முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
கட்டணம் குறைவில் –தரமான கல்வி –கலாசாரத்துடன் கூடிய கட்டுப்பாடு –நல்லொழுக்கம் –மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை என இந்த நிறுவனங்கள் பெற்றோர்களிடம் பெரும் மதிப்பு பெற்றிருக்கின்றன. இங்குச் சேர்த்தால் தங்கள் பிள்ளைகள் நல்ல மாணவனாக –மனிதனாக வெளியே வருவான் என்கிற நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கு 17 கல்வி நிறுவனங்கள்! ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள்! மாணவர்களுக்கு 4 மாணவிகளுக்கு 4 என தனித்தனியாய் விடுதிகள்! எட்டு மாடிக் கட்டடம்! லிஃப்ட் வசதியுடன் விடுதிகள்! நீச்சல் குளம்! ஏஸி லைப்ரரி. இங்கே கிடைக்காத நூல்கள் கிடையாது.
ஏஸியுடன் கூடிய ஆடிட்டோரியம்.
விளையாட்டு, விஞ்ஞானம், கலை, இலக்கியம், பாட்டு, நடனம் என அத்தனை துறைகளுக்கும் வசதிகள்! செய்து தந்துள்ளனர்! அறைக்கு அறை தொலைபேசி இணைப்புகள்! இண்டர்நெட்! விடுதியில் செல்போன்களுக்கு அனுமதி! உடற்பயிற்சிக்கு ஜிம்!
மனம் குளிரவும், மகிழவும் எங்கும் பசுமை பரப்பிச் செடி கொடி மரங்கள் எனப் பராமரிக்கிறார்கள். வீட்டுக் கஷ்டம் படிப்பைப் பாதிக்காமலிருக்க சிங்கப்பூர் அட்மாஸ்பியர் இங்கே!
விடுதியில் தரமான உணவு. புதுப்புது உபகரணங்கள் வரவழைத்து வேகமான விநியோகம்.
1 மணி நேரத்தில் 2000 சப்பாத்திகள் சூடாக –சுவையாக தயாரிக்க மெஷின்!
1 மணி நேரத்தில் 400 தோசைகள் தரும் மெஷின்கள்!
சுத்தமான –சுவையான சத்தான உணவு இங்கே வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் மினரல் வாட்டர்!
இங்கே நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
நியாயமான தேவைகளுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருகிறார்கள். படிப்போடு –கடமை –கண்ணியம் –கட்டுப்பாட்டுடன் –நாளைய பாரதத்திற்கு இங்கே இளைஞர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.
அதே மாதிரிப் பிரச்சனையில்லாத –பெண்கள் கல்லூரி.
1996 –இல் முதன் முதலில் பெண்கள் கல்லூரி ஆரம்பித்த போது இதை வழி நடத்த சரியான பிரின்ஸ்பால் வேண்டும் என்று தேடினபோது காரைக்குடியில் ரிடையராகியிருந்த டாக்டர் ராமமீனாட்சி பற்றித் தகவல் வந்தது.
உடன் அவர்களைப் போய் அணுகினர். விவரம் சொல்ல –அவர் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. ``நான் வந்து உங்கள் நிறுவனங்களைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’’ என்றார்.
அதே மாதிரி வந்து பார்த்து-பிடித்துப் போய்,``உங்களின் சீரிய நோக்கம் -லட்சியத்திற்காக –உங்களின் கஷ்டநஷ்டத்திலும் பங்கேற்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று எந்த வித கண்டிஷன்கள் –டிமான்ட்களும் இல்லாமல் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம்.
இங்குக் கண்டிப்பான –தரமான –பாதுகாப்பான நிர்வாகத்தை ஏற்படுத்தித் தரமான மாணவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யப் பெருந்தூணாய் அவர் நிற்கிறார்!
இவர்களின் சேவையும் சாதனையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசாங்கம் –அலுவலர்கள் மத்தியிலும் நன்கு பதிந்திருக்கிறது. இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடி செய்பவர்கள் –கரும்பு வெட்டக் குறித்த காலத்தில் ஆர்டர்கள் கிடைக்காமல் மனம் வெந்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் நிலை ஏற்பட்டது.
அதைப் பார்த்ததும் ஏன் சர்க்கரை ஆலை ஆரம்பித்து விவசாயிகளின் துயர் துடைக்கக் கூடாது எனச் சர்க்கரை ஆலைக்கு மனு போட்டனர். உடன் கிடைத்தது.
500 பேர்களுக்கு வேலை தரும் வண்ணம் –சர்க்கரை, டிஸ்டிலரி, மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை 21.2.2010 –இல் சிறப்பாக குறித்தபடி ஆரம்பிக்கப்பட்டது.
(16)
1994 –இல் இவர்கள் முதலில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலிருந்த சமயம்-எஸ்.எஸ். ராஜகோபால் எனும் பெரிய கல்வியாளர் இந்தப் பகுதியில் மருத்துவமனையும் மருத்துவக்கல்லூரியும் ஆரம்பியுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.அது ஜனங்களுக்கு நல்ல சேவையாக இருக்கும் என்று தூண்டினார்.
சேவை என்பதில் நாட்டமிருந்தாலும்கூட கிராமப்பகுதியில் மருத்துவமனை கட்டினால் பணிபுரிய டாக்டர்கள் வரமாட்டார்கள் என்கிற தயக்கம் அப்போது இருந்தது. இவர்களுக்கு.
டாக்டர்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் முன் வந்தார். ஆனாலும் கூட ஐயாவிற்கு அப்போது அதைச் செயல்படுத்த முடியவில்லை.
இருந்தாலும் அன்றிலிருந்தே மருத்துவச் சேவை எண்ணம் அவரது மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான சூழ்நிலை தருணத்திற்காகக் காத்திருந்தார்.
அது இப்போது சேர்ந்து அமைந்துள்ளது.
மருத்துவமும் கல்வி போல மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று. கிராம மக்கள் வசதியின்மை –சரியான வழிகாட்டுதலில்லாமல் நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கல்வியைப் போலவே இந்தப் பகுதியில் மருத்துவப் புரட்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று ஐயா விரும்பினார்கள்.
அதன் செயல் வடிவம் சென்னை –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் எனும் ஊரின் அருகே இவரின் மருத்துவமனைக் கனவு நனவாகியிருக்கிறது.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தற்போது 100 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இரவு –பகல் எப்போதும் சேவை, இதில் என்ன விசேஷம் என்றால் மக்களுக்கு இலவசமாகவும் மிக்க குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சேவை.
அரசாங்கம் இலவச மருத்துவமனையை நடத்தச் சிரமப்படும் காலத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்குகிறது. இங்கே தினம் 1000 பேர்களுக்கு மேல் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
மத்திய அமைச்சர் திரு.இராசா திறந்து வைத்த இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து போக தனலட்சுமி சீனிவாசன் நிர்வாகம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளிலிருந்து பஸ்களை இயக்குகிறது.
அதுவும் கூட இலவசம்.
ஐயாவின் சேவைக்கு மகுடம் சூட்டுவதாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை ஏழைகளுக்கு மட்டுமின்றி –வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகிச்சை பெறும்படி உலக்த் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது ஐயாவின் லட்சியம்.
நிச்சயம் உயரும். உயர்த்துவார்.
இந்த வளாகத்தில் இவர்களின் மருத்துவக் கல்லூரியும் உருவாகிவருகிறது. 2011 –இல் இது நிறைவடைந்து திறக்கப்படும்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு சீனிவாசன் அவர்கள் ஒரு முன் உதாரணம்.எந்தக் காரியத்திலும் முழு ஈடுபாடு கொண்டு ஜெயிக்கணும் என்கிற முனைப்போடும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சி-துணிவு –நாணயம் தவறாமை –தரம் பேணல் –சேவை மனப்பான்மை போன்றவற்றை அடிப்படையாய் வைத்து இவரும் குழுவினரும் செயல்பட்டதால்.
அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் –கஷ்டங்கள் –பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்திருக்கிறது.
தொடரும்...
.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
கட்டணம் குறைவில் –தரமான கல்வி –கலாசாரத்துடன் கூடிய கட்டுப்பாடு –நல்லொழுக்கம் –மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை என இந்த நிறுவனங்கள் பெற்றோர்களிடம் பெரும் மதிப்பு பெற்றிருக்கின்றன. இங்குச் சேர்த்தால் தங்கள் பிள்ளைகள் நல்ல மாணவனாக –மனிதனாக வெளியே வருவான் என்கிற நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கு 17 கல்வி நிறுவனங்கள்! ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள்! மாணவர்களுக்கு 4 மாணவிகளுக்கு 4 என தனித்தனியாய் விடுதிகள்! எட்டு மாடிக் கட்டடம்! லிஃப்ட் வசதியுடன் விடுதிகள்! நீச்சல் குளம்! ஏஸி லைப்ரரி. இங்கே கிடைக்காத நூல்கள் கிடையாது.
ஏஸியுடன் கூடிய ஆடிட்டோரியம்.
விளையாட்டு, விஞ்ஞானம், கலை, இலக்கியம், பாட்டு, நடனம் என அத்தனை துறைகளுக்கும் வசதிகள்! செய்து தந்துள்ளனர்! அறைக்கு அறை தொலைபேசி இணைப்புகள்! இண்டர்நெட்! விடுதியில் செல்போன்களுக்கு அனுமதி! உடற்பயிற்சிக்கு ஜிம்!
மனம் குளிரவும், மகிழவும் எங்கும் பசுமை பரப்பிச் செடி கொடி மரங்கள் எனப் பராமரிக்கிறார்கள். வீட்டுக் கஷ்டம் படிப்பைப் பாதிக்காமலிருக்க சிங்கப்பூர் அட்மாஸ்பியர் இங்கே!
விடுதியில் தரமான உணவு. புதுப்புது உபகரணங்கள் வரவழைத்து வேகமான விநியோகம்.
1 மணி நேரத்தில் 2000 சப்பாத்திகள் சூடாக –சுவையாக தயாரிக்க மெஷின்!
1 மணி நேரத்தில் 400 தோசைகள் தரும் மெஷின்கள்!
சுத்தமான –சுவையான சத்தான உணவு இங்கே வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் மினரல் வாட்டர்!
இங்கே நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
நியாயமான தேவைகளுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருகிறார்கள். படிப்போடு –கடமை –கண்ணியம் –கட்டுப்பாட்டுடன் –நாளைய பாரதத்திற்கு இங்கே இளைஞர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.
அதே மாதிரிப் பிரச்சனையில்லாத –பெண்கள் கல்லூரி.
1996 –இல் முதன் முதலில் பெண்கள் கல்லூரி ஆரம்பித்த போது இதை வழி நடத்த சரியான பிரின்ஸ்பால் வேண்டும் என்று தேடினபோது காரைக்குடியில் ரிடையராகியிருந்த டாக்டர் ராமமீனாட்சி பற்றித் தகவல் வந்தது.
உடன் அவர்களைப் போய் அணுகினர். விவரம் சொல்ல –அவர் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. ``நான் வந்து உங்கள் நிறுவனங்களைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’’ என்றார்.
அதே மாதிரி வந்து பார்த்து-பிடித்துப் போய்,``உங்களின் சீரிய நோக்கம் -லட்சியத்திற்காக –உங்களின் கஷ்டநஷ்டத்திலும் பங்கேற்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று எந்த வித கண்டிஷன்கள் –டிமான்ட்களும் இல்லாமல் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம்.
இங்குக் கண்டிப்பான –தரமான –பாதுகாப்பான நிர்வாகத்தை ஏற்படுத்தித் தரமான மாணவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யப் பெருந்தூணாய் அவர் நிற்கிறார்!
இவர்களின் சேவையும் சாதனையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசாங்கம் –அலுவலர்கள் மத்தியிலும் நன்கு பதிந்திருக்கிறது. இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடி செய்பவர்கள் –கரும்பு வெட்டக் குறித்த காலத்தில் ஆர்டர்கள் கிடைக்காமல் மனம் வெந்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் நிலை ஏற்பட்டது.
அதைப் பார்த்ததும் ஏன் சர்க்கரை ஆலை ஆரம்பித்து விவசாயிகளின் துயர் துடைக்கக் கூடாது எனச் சர்க்கரை ஆலைக்கு மனு போட்டனர். உடன் கிடைத்தது.
500 பேர்களுக்கு வேலை தரும் வண்ணம் –சர்க்கரை, டிஸ்டிலரி, மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை 21.2.2010 –இல் சிறப்பாக குறித்தபடி ஆரம்பிக்கப்பட்டது.
(16)
1994 –இல் இவர்கள் முதலில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலிருந்த சமயம்-எஸ்.எஸ். ராஜகோபால் எனும் பெரிய கல்வியாளர் இந்தப் பகுதியில் மருத்துவமனையும் மருத்துவக்கல்லூரியும் ஆரம்பியுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.அது ஜனங்களுக்கு நல்ல சேவையாக இருக்கும் என்று தூண்டினார்.
சேவை என்பதில் நாட்டமிருந்தாலும்கூட கிராமப்பகுதியில் மருத்துவமனை கட்டினால் பணிபுரிய டாக்டர்கள் வரமாட்டார்கள் என்கிற தயக்கம் அப்போது இருந்தது. இவர்களுக்கு.
டாக்டர்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் முன் வந்தார். ஆனாலும் கூட ஐயாவிற்கு அப்போது அதைச் செயல்படுத்த முடியவில்லை.
இருந்தாலும் அன்றிலிருந்தே மருத்துவச் சேவை எண்ணம் அவரது மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான சூழ்நிலை தருணத்திற்காகக் காத்திருந்தார்.
அது இப்போது சேர்ந்து அமைந்துள்ளது.
மருத்துவமும் கல்வி போல மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று. கிராம மக்கள் வசதியின்மை –சரியான வழிகாட்டுதலில்லாமல் நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கல்வியைப் போலவே இந்தப் பகுதியில் மருத்துவப் புரட்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று ஐயா விரும்பினார்கள்.
அதன் செயல் வடிவம் சென்னை –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் எனும் ஊரின் அருகே இவரின் மருத்துவமனைக் கனவு நனவாகியிருக்கிறது.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தற்போது 100 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இரவு –பகல் எப்போதும் சேவை, இதில் என்ன விசேஷம் என்றால் மக்களுக்கு இலவசமாகவும் மிக்க குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சேவை.
அரசாங்கம் இலவச மருத்துவமனையை நடத்தச் சிரமப்படும் காலத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்குகிறது. இங்கே தினம் 1000 பேர்களுக்கு மேல் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
மத்திய அமைச்சர் திரு.இராசா திறந்து வைத்த இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து போக தனலட்சுமி சீனிவாசன் நிர்வாகம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளிலிருந்து பஸ்களை இயக்குகிறது.
அதுவும் கூட இலவசம்.
ஐயாவின் சேவைக்கு மகுடம் சூட்டுவதாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை ஏழைகளுக்கு மட்டுமின்றி –வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகிச்சை பெறும்படி உலக்த் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது ஐயாவின் லட்சியம்.
நிச்சயம் உயரும். உயர்த்துவார்.
இந்த வளாகத்தில் இவர்களின் மருத்துவக் கல்லூரியும் உருவாகிவருகிறது. 2011 –இல் இது நிறைவடைந்து திறக்கப்படும்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு சீனிவாசன் அவர்கள் ஒரு முன் உதாரணம்.எந்தக் காரியத்திலும் முழு ஈடுபாடு கொண்டு ஜெயிக்கணும் என்கிற முனைப்போடும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சி-துணிவு –நாணயம் தவறாமை –தரம் பேணல் –சேவை மனப்பான்மை போன்றவற்றை அடிப்படையாய் வைத்து இவரும் குழுவினரும் செயல்பட்டதால்.
அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் –கஷ்டங்கள் –பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்திருக்கிறது.
தொடரும்...
.
முன்னேறு... முன்னேற்று! தொடர் 16
முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
அதன் பலனாய் அடுத்த வருடம் 235 மாணவிகள் சேர்ந்தனர். அது படிப்படியாய் வளர்ந்து இன்று 3500 பெண்களாயிற்று! அடுத்து தனிப் பல்கலைக்கழகத்திற்கு மனு கொடுத்திருக்கிறோம்.
அடுத்த கட்டமாக,
கணினி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆரம்பிக்கும் திட்டம் எழுந்தது. மத்திய அரசிடம் ஐயா விண்ணப்பித்தார்.
டெல்லிக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
டெல்லிக்கு அதுவரை நாங்கள் யாரும் போனதில்லை. மொழி பிரச்சினை வேறு. அதனால் ஐயாவின் நண்பரும் ஓய்வுபெற்ற புரபசருமான திரு.ரங்கராஜன் அவர்களைத் துணைக்கு அழைத்துப் போனோம். அவர் எங்களுக்கும் அதிகாரிக்குமிடையே மொழி பெயர்த்துப் பேசினார். எங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்.
ஆனால் அவர்கள் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தனர். வாக்கு வாதம் முற்றியதில் அவர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
முடிவாக அவர்கள், நீங்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அனுமதி தரமுடியாது. பாலிடெக்னிக்கிற்கு மட்டும் தருகிறோம் என்றனர்.சரி, ஒருவிதத்தில் அதுவும்கூட நல்லதுதான். இந்தப் பகுதி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி அவசியமான ஒன்று. வேலைவாய்ப்பிற்கு அது உதவும் என்று சம்மதித்தோம்.
பாலிடெக்னிக் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த அதிகாரிகள், வழக்கம் போல ஏதாவது குறை சொல்வார்கள், குழப்பம் பண்ணுவார்கள் என்கிற பதற்றம் இருந்தது.
ஆனால் அவர்களோ, பள்ளி, கல்லூரி இடங்கள், கட்டடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இத்தனை வசதிகள் வைத்துள்ள நீங்கள் ஏன் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கக் கூடாது என்று கேட்டனர்.
என்ன ஒரு வினோதம்! மேலே உள்ளவர்கள் என்னென்னவோ சொல்லி மறுக்கிறார்கள். வசதிகள் பற்றி எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குப் புரிவதில்லை.அவர்களின் பிடிவாதத்திலிருந்து கீழே இறங்குவதில்லை!
சரி, இப்போதைக்கு பாலிடெக்னிக்கை ஆரம்பித்து இதை வளர்ப்போம். பிறகு பொறியியல் கல்லூரிக்கு மோதுவோம் என்று 1998 –இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே 240 மாணவர்கள்.
கடுமையான கண்காணிப்பிலும் ஆசிரியர்களின் திறமையாலும் ஒரே வருடத்தில் –உள்ள 150 கல்லூரிகளில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் 14 வது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு தொடர்ந்து அபார வளர்ச்சி.
இங்கே பாலிடெக்னிக்கில் டிப்ளமா படித்து வெளியே வருபவர்கள். என்ஜீனியரிங் இருந்தால் சேர்த்து படிக்கலாம் என விருப்பப்பட்டனர்.
பலரும் அதற்காகத் தூண்டவே, திரும்பப் பொறியியல் கல்லூரிக்கு மனு போடப்பட்டது. அதற்கான கட்டடங்கள் வேகமாய் ரெடியாகின.
இதற்கிடையில் வளர்ச்சியின் வேகம் தாங்காமலோ, என்னவோ குடும்பத்தில் பெரிய துக்கம் ஒன்று சம்பவித்தது. ஐயாவின் மனைவி திருமதி. தனலட்சுமி அவர்கள் மரணம்!
அது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் பாதித்தது. குடும்பப் பொறுப்பு மட்டுமின்றி ஐயாவுக்குச் சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்த அவரின் இழப்பிலிருந்து மீள நீண்ட நாட்கள் பிடித்தன.
2000 –ஆம் ஆண்டின் பரிசோதனைக்கு வந்த குழு, சின்னச் சின்ன குறைகளைச் சொல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி தர மறுத்தது. இத்தனைக்கும் சட்டப்படியான எந்தக் குறைகளும் அப்போது இல்லை. என்ன செய்வது! இதுமாதிரி விஷயங்கள் நிர்வாகித்தினருக்கு பழகிப் போயிருந்தது.
அந்தக் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்து மறுபடியும் மனு போட, 2001 –இல் அனுமதி கிடைத்து பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஏரோநாடிக்கல் முதல் அனைத்துப் பிரிவுகளும் ஆரம்பம் முதலே வெற்றிகரமாய்க் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த முயற்சியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மனுபோட, தொடர்ந்து ஐந்து வருடங்கள் நிராகரித்தனர். இவர்களுடன் சேர்த்து மனுபோட்ட 43 நிறுவனங்களும் சேர்த்து வழக்குத் தொடர்ந்ததின் விளைவாய்ப் பிறகு அனுமதி கிடைத்தது. பி.எட்., கல்லூரியும் இன்று மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
(15)
பொறியியல் கல்லூரி ஆரம்பித்த சமயம் லோன் அப்ளை செய்துபட்ட அவதிகளை திரு.நீல்ராஜ் நினைவு கூர்ந்தார். இவர்களுக்கு ஏற்கெனவே வங்கியில் லோன் இருந்தது. முறைப்படி அவற்றைத் திருப்பிச் செலுத்தவும் செய்தனர்.
இருந்தாலும்கூட பெரிய தொகை என்பதால் லோக்கல் வங்கி இவர்களின் மனுவைத் தலைமை அலுவலகத்திற்கு சிபாரிசு செய்திருந்தது. அங்கிருந்து இவர்களுக்கு அழைப்பு வரவே –கரூர் சென்று ஒரு நாள் முழுக்க அந்த வங்கியில் தேவுடு காத்திருந்தனர். அதில் ஐயாவும் அடக்கம்.
இந்தா அழைப்பார்கள், இப்போது கூப்பிட்டு விடுவார்கள் என சாப்பிடக்கூடப் போகாமல் காத்திருந்து பயங்கர விரக்தியில் இருந்தனர். இத்தனை கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாய் நடத்தி வருபவர்களுக்கும் இப்படி மரியாதையின்மை.
கடன் கேட்க வருபவர்கள் கடன்காரர்களா? வங்கிக்கு அடிமைகளா? தகுதிம் கேரண்டி கொடுத்தபின்புதான் பணம் தர்ப்போகிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் இந்த அசட்டை? வங்கியின் வருமானம் கடன் கொடுத்து வாங்குவதில் இருக்கும்போது எதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று வெறுப்பு.
கடைசியாக மாலை ஏழு மணிக்கு இவர்களை அழைத்தனர். பேப்பர்களையெல்லாம் பார்த்த ஜெனரல் மானேஜர், ``எதை நம்பி எந்த அடிப்படையில் உங்களுக்கு லோன் தருவது?’’ என்றார்.
ஐயாவுக்கு பயங்கரக் கோபம் –அடக்கிக் கொண்டார்.
பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற வேண்டும் –தொழில் தொடங்கி முன்னேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் அரசாங்கம் பாடுபடுகிறது, மறுபக்கம் –வங்கிகள் இந்த மாதிரி1
``லோன் தருவதற்கு உங்களுக்குப் பொறுமானமாக என்னென்ன தேவையோ அவற்றைச் சமர்ப்பிக்கிறோம். போதுமா.....?’’
``அதில் பிரச்சனை இல்லை. என்ஜினியரிங் கல்லூரிகள் ஏற்கனவே நிறைய ஆயிற்று. மேற்கொண்டு நீங்கள் தொடங்கினால் அதை நடத்துவது சிரமம் அதனால் புதிதாய் பொறியியல் கல்லூரி தேவையில்லை!’’
அதைக் கேட்டதும் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் ஐயாவிடமிருந்து கொப்பளிக்க ஆரம்பித்தது.
``லோன் வேண்டுமானால் தரமுடியாது என்று சொல்லுங்கள், கல்லூரி தேவையில்லை என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கில்லை.ஏற்கெனவே முறைப்படி அனுமதி பெற்றுத்தான் உங்களிடம் வந்துள்ளோம். இந்த மாதிரிப் பேசுவதற்கு வங்கிக்கு ஜெனரல் மானேஜர் தேவையா...?’’
``இல்லை நான் உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்’’
``எது நன்மை? வளர்ச்சியில்லாப் பகுதியில் பாடுபட்டு உளப்பூர்வமாகச் சேவை செய்ய வேண்டித் தொடங்கும்போது அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரணுமே தவிர டிஸ்கரேஜ் பண்ணக்கூடாது!’’
ஏறக்குறைய சண்டைப்பிடித்து விட்டு வெளியே வந்தனர். லோன் நிச்சயம் கிடைக்காது என்றே அவர்கள் நினைத்தனர்.
ஆனால் அந்த வங்கியிலிருந்து கேட்டதில் பாதி அளவிற்குக் கடன் தந்தனர்.
தொடரும்...
.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
அதன் பலனாய் அடுத்த வருடம் 235 மாணவிகள் சேர்ந்தனர். அது படிப்படியாய் வளர்ந்து இன்று 3500 பெண்களாயிற்று! அடுத்து தனிப் பல்கலைக்கழகத்திற்கு மனு கொடுத்திருக்கிறோம்.
அடுத்த கட்டமாக,
கணினி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆரம்பிக்கும் திட்டம் எழுந்தது. மத்திய அரசிடம் ஐயா விண்ணப்பித்தார்.
டெல்லிக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
டெல்லிக்கு அதுவரை நாங்கள் யாரும் போனதில்லை. மொழி பிரச்சினை வேறு. அதனால் ஐயாவின் நண்பரும் ஓய்வுபெற்ற புரபசருமான திரு.ரங்கராஜன் அவர்களைத் துணைக்கு அழைத்துப் போனோம். அவர் எங்களுக்கும் அதிகாரிக்குமிடையே மொழி பெயர்த்துப் பேசினார். எங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்.
ஆனால் அவர்கள் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தனர். வாக்கு வாதம் முற்றியதில் அவர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
முடிவாக அவர்கள், நீங்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அனுமதி தரமுடியாது. பாலிடெக்னிக்கிற்கு மட்டும் தருகிறோம் என்றனர்.சரி, ஒருவிதத்தில் அதுவும்கூட நல்லதுதான். இந்தப் பகுதி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி அவசியமான ஒன்று. வேலைவாய்ப்பிற்கு அது உதவும் என்று சம்மதித்தோம்.
பாலிடெக்னிக் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த அதிகாரிகள், வழக்கம் போல ஏதாவது குறை சொல்வார்கள், குழப்பம் பண்ணுவார்கள் என்கிற பதற்றம் இருந்தது.
ஆனால் அவர்களோ, பள்ளி, கல்லூரி இடங்கள், கட்டடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இத்தனை வசதிகள் வைத்துள்ள நீங்கள் ஏன் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கக் கூடாது என்று கேட்டனர்.
என்ன ஒரு வினோதம்! மேலே உள்ளவர்கள் என்னென்னவோ சொல்லி மறுக்கிறார்கள். வசதிகள் பற்றி எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குப் புரிவதில்லை.அவர்களின் பிடிவாதத்திலிருந்து கீழே இறங்குவதில்லை!
சரி, இப்போதைக்கு பாலிடெக்னிக்கை ஆரம்பித்து இதை வளர்ப்போம். பிறகு பொறியியல் கல்லூரிக்கு மோதுவோம் என்று 1998 –இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே 240 மாணவர்கள்.
கடுமையான கண்காணிப்பிலும் ஆசிரியர்களின் திறமையாலும் ஒரே வருடத்தில் –உள்ள 150 கல்லூரிகளில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் 14 வது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு தொடர்ந்து அபார வளர்ச்சி.
இங்கே பாலிடெக்னிக்கில் டிப்ளமா படித்து வெளியே வருபவர்கள். என்ஜீனியரிங் இருந்தால் சேர்த்து படிக்கலாம் என விருப்பப்பட்டனர்.
பலரும் அதற்காகத் தூண்டவே, திரும்பப் பொறியியல் கல்லூரிக்கு மனு போடப்பட்டது. அதற்கான கட்டடங்கள் வேகமாய் ரெடியாகின.
இதற்கிடையில் வளர்ச்சியின் வேகம் தாங்காமலோ, என்னவோ குடும்பத்தில் பெரிய துக்கம் ஒன்று சம்பவித்தது. ஐயாவின் மனைவி திருமதி. தனலட்சுமி அவர்கள் மரணம்!
அது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் பாதித்தது. குடும்பப் பொறுப்பு மட்டுமின்றி ஐயாவுக்குச் சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்த அவரின் இழப்பிலிருந்து மீள நீண்ட நாட்கள் பிடித்தன.
2000 –ஆம் ஆண்டின் பரிசோதனைக்கு வந்த குழு, சின்னச் சின்ன குறைகளைச் சொல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி தர மறுத்தது. இத்தனைக்கும் சட்டப்படியான எந்தக் குறைகளும் அப்போது இல்லை. என்ன செய்வது! இதுமாதிரி விஷயங்கள் நிர்வாகித்தினருக்கு பழகிப் போயிருந்தது.
அந்தக் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்து மறுபடியும் மனு போட, 2001 –இல் அனுமதி கிடைத்து பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஏரோநாடிக்கல் முதல் அனைத்துப் பிரிவுகளும் ஆரம்பம் முதலே வெற்றிகரமாய்க் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த முயற்சியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மனுபோட, தொடர்ந்து ஐந்து வருடங்கள் நிராகரித்தனர். இவர்களுடன் சேர்த்து மனுபோட்ட 43 நிறுவனங்களும் சேர்த்து வழக்குத் தொடர்ந்ததின் விளைவாய்ப் பிறகு அனுமதி கிடைத்தது. பி.எட்., கல்லூரியும் இன்று மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
(15)
பொறியியல் கல்லூரி ஆரம்பித்த சமயம் லோன் அப்ளை செய்துபட்ட அவதிகளை திரு.நீல்ராஜ் நினைவு கூர்ந்தார். இவர்களுக்கு ஏற்கெனவே வங்கியில் லோன் இருந்தது. முறைப்படி அவற்றைத் திருப்பிச் செலுத்தவும் செய்தனர்.
இருந்தாலும்கூட பெரிய தொகை என்பதால் லோக்கல் வங்கி இவர்களின் மனுவைத் தலைமை அலுவலகத்திற்கு சிபாரிசு செய்திருந்தது. அங்கிருந்து இவர்களுக்கு அழைப்பு வரவே –கரூர் சென்று ஒரு நாள் முழுக்க அந்த வங்கியில் தேவுடு காத்திருந்தனர். அதில் ஐயாவும் அடக்கம்.
இந்தா அழைப்பார்கள், இப்போது கூப்பிட்டு விடுவார்கள் என சாப்பிடக்கூடப் போகாமல் காத்திருந்து பயங்கர விரக்தியில் இருந்தனர். இத்தனை கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாய் நடத்தி வருபவர்களுக்கும் இப்படி மரியாதையின்மை.
கடன் கேட்க வருபவர்கள் கடன்காரர்களா? வங்கிக்கு அடிமைகளா? தகுதிம் கேரண்டி கொடுத்தபின்புதான் பணம் தர்ப்போகிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் இந்த அசட்டை? வங்கியின் வருமானம் கடன் கொடுத்து வாங்குவதில் இருக்கும்போது எதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று வெறுப்பு.
கடைசியாக மாலை ஏழு மணிக்கு இவர்களை அழைத்தனர். பேப்பர்களையெல்லாம் பார்த்த ஜெனரல் மானேஜர், ``எதை நம்பி எந்த அடிப்படையில் உங்களுக்கு லோன் தருவது?’’ என்றார்.
ஐயாவுக்கு பயங்கரக் கோபம் –அடக்கிக் கொண்டார்.
பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற வேண்டும் –தொழில் தொடங்கி முன்னேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் அரசாங்கம் பாடுபடுகிறது, மறுபக்கம் –வங்கிகள் இந்த மாதிரி1
``லோன் தருவதற்கு உங்களுக்குப் பொறுமானமாக என்னென்ன தேவையோ அவற்றைச் சமர்ப்பிக்கிறோம். போதுமா.....?’’
``அதில் பிரச்சனை இல்லை. என்ஜினியரிங் கல்லூரிகள் ஏற்கனவே நிறைய ஆயிற்று. மேற்கொண்டு நீங்கள் தொடங்கினால் அதை நடத்துவது சிரமம் அதனால் புதிதாய் பொறியியல் கல்லூரி தேவையில்லை!’’
அதைக் கேட்டதும் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் ஐயாவிடமிருந்து கொப்பளிக்க ஆரம்பித்தது.
``லோன் வேண்டுமானால் தரமுடியாது என்று சொல்லுங்கள், கல்லூரி தேவையில்லை என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கில்லை.ஏற்கெனவே முறைப்படி அனுமதி பெற்றுத்தான் உங்களிடம் வந்துள்ளோம். இந்த மாதிரிப் பேசுவதற்கு வங்கிக்கு ஜெனரல் மானேஜர் தேவையா...?’’
``இல்லை நான் உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்’’
``எது நன்மை? வளர்ச்சியில்லாப் பகுதியில் பாடுபட்டு உளப்பூர்வமாகச் சேவை செய்ய வேண்டித் தொடங்கும்போது அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரணுமே தவிர டிஸ்கரேஜ் பண்ணக்கூடாது!’’
ஏறக்குறைய சண்டைப்பிடித்து விட்டு வெளியே வந்தனர். லோன் நிச்சயம் கிடைக்காது என்றே அவர்கள் நினைத்தனர்.
ஆனால் அந்த வங்கியிலிருந்து கேட்டதில் பாதி அளவிற்குக் கடன் தந்தனர்.
தொடரும்...
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)